Tag Archives: ஷங்கர் மகாதேவன்

ஊனே ஊனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Oonay Oonay Song Lyrics in Tamil


BGM

பெண் : லாலாலாலா லாலாலாலா…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

BGM

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

ஆண் : கண்ணால் என்னை குடிக்கிறாளே…
ஆதாம் ஏவால் ஆப்பிள் தின்ன அழைக்கிறாளே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

BGM

பெண் : ஓஹோ… காதலுக்கு காய்ச்சல் வரும் நேரம்…
கண்கள் ரெண்டே ஆயுர்வேதம் ஆகும்…
மொத்த விழியில் உயிரைவிட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

பெண் : மொத்த விழியில் உயிரை விட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

ஆண் : ஆஹா… கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…
கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…

பெண் : உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…
உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…

ஆண் & பெண் : காதலில் நாம் தொலைத்தோமே…
பெண் : ஓஹோ…
ஆண் & பெண் : தீயினில் நாம் விளைந்தோமே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

BGM

ஆண் : ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…
அடியே ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…

பெண் : கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…
ஓஓஓ… கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…

ஆண் : முல்லைப்பூவும் சோள பொறிதான்…
ஓஓஓ… முல்லைப்பூவும் சோள பொறிதான்…

பெண் : தேகத்தில் அதை பிழிந்தானே… ஓஓஓ…
தேகத்தில் அதை பிழிந்தானே…

ஆண் : மூச்சு காற்றில் வெப்பம் வெப்பம்…
பெண் : வேர்வை கேட்கும் தெப்பம் தெப்பம்…

ஆண் : காதலின் கிளை வளைத்தேனே… ஓஹோ…
பெண் : ஆயுளை அதில் முடிந்தேனே… ஓஹோ…

ஆண் : மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…
மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Oonay Oonay Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஊனே ஊனே பாடல் வரிகள்.


காற்றிலே வாசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & கே.எஸ்.சித்ராஷங்கர் எஹ்சான் லாய்யாவரும் நலம்

Kaatrilae Vaasame Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…

பெண் : ஒ… என்னதான் நீ செய்ய போகிறாய்…
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்…
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்…

BGM

பெண் : தீயலே தேனிலே தேயுதே தேகமே…
இரவிலே தீயின்றி எரிந்துடும் நிலாவே…

ஆண் & பெண் : ஏதோ ஒன்று என்னை இன்று…
உந்தன் பக்கம் வா வா என்று…
காந்தம் போல் ஈர்க்குதே…
ஆண் : ஈர்க்குதே…

ஆண் : நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை…
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை…
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்விலே…

BGM

பெண் : அன்பே அன்று உன்னை கண்டேன்…
கண்ட போதே…
நெஞ்சில் உன்னை வைத்து கொண்டேன்…
இதயம் உருகியதே…

ஆண் : முன்பே நானும் நீயும் ஒன்றாய்…
சேர்ந்து வாழ்தோம்…
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்…
அதனை அறிந்ததினால்தான்…

பெண் : இரவிலே தீயின்றி எரிந்துடும் நிலாவே…
ஆண் & பெண் : ஏதோ ஒன்று என்னை இன்று…
உந்தன் பக்கம் வா வா என்று…
காந்தம் போல் ஈர்க்குதே…
ஆண் : ஈர்க்குதே…

பெண் : ஒ… என்னதான் நீ செய்ய போகிறாய்…
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்…
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்…

ஆண் : நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை…
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை…
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்விலே…

BGM


Notes : Kaatrilae Vaasame Song Lyrics in Tamil. This Song from Yavarum Nalam (2009). Song Lyrics penned by Thamarai. காற்றிலே வாசமே பாடல் வரிகள்.


ஒரு சூறாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சந்துருஷங்கர் மகாதேவன்கண்ணன்தமிழ்ப் படம்

Oru Sooravali Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…

ஆண் : சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…

ஆண் : கோடிஸ்வரா அனுபவிப்பாய்…
கோடிஸ்வரா நீ அனுபவிப்பாய்…

ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…

BGM

ஆண் : தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்…
இவனுக்கு கை வந்த கலைதான்…
பணத்தினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்…
துணிந்தது யாரு இவன்தான்…

ஆண் : இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது…
லட்சிய வெறி…
எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை…
தூங்காது விழி…

ஆண் : தலை தெறிக்கும் வேகத்தினால் தலைவிதி மாறுது…
இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது…
சிவா சிவா… சிவா சிவா… சிவா சிவா…


Notes : Oru Sooravali Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by Chandru. ஒரு சூறாவளி பாடல் வரிகள்.


வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


BGM

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

BGM

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

BGM

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

BGM

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

BGM

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.


எரிமலை நானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & வசுந்தராதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Erimalai Naane Song Lyrics in Tamil


ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

பெண் : சாபம்விட நீயும் என்ன…
கங்கை கரை முனிவனா…
அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு…

பெண் : தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை…
நட்ட நடு மேடையிலே…
மோதி பாரு அஞ்சமாட்டேன்…
உன் உருட்டலுக்கு…

ஆண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

ஆண் : உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு…
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு…

பெண் : புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு…
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு…

ஆண் : வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி…
பெண் : நீ என் அழகுக்கு நிகர் இல்லடா…
ஆண் : ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே…
பெண் : நீ இருக்க…
ஆண் : திரிஷ்ட்டி சுத்த…
பெண் : பூசணிக்கா…
ஆண் : வாங்க ஒரு தேவை இல்லையே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

பெண் : உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும்…
எந்த பணமும் போகும் கொள்ளையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

ஆண் : உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது…
செலவு செய்ய தயக்கம் இல்லையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

பெண் : படிப்பை இழந்து வேலை இழந்து…
ஆண் : செல்வம் இழந்து சுற்றும் இழந்து…
பெண் : தெருவில் நின்று…
ஆண் : கதறிக் கதறி…
பெண் : நீயும் அழுகும் நாளும் வரணுமே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

BGM


Notes : Erimalai Naane Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. எரிமலை நானே பாடல் வரிகள்.


தப்புத்தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வில்லன்

Thappu Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

ஆண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM

ஆண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவி நான் செய்யவா…
பெண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

பெண் : களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை…
என்னிடம் திருப்பிக் கொடு…
என் உடல் கொஞ்சம் சாயட்டும்…
உயிர் கொஞ்சம் தூங்கட்டும்…
ஒத்தடம் தந்து விடு…

ஆண் : ஓ… ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது…
அனுமதி தந்து விடு…
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும்…
வன்முறை முத்தம் கொடு…

பெண் : இடியோ மழையோ…
அது அறையில் இருக்கட்டுமே…
இரவோ பகலோ…
அது வெளியில் இருக்கட்டுமே…

ஆண் : நடந்து வரும் சித்திரமே…
நனைய விடும் சொப்பனமே…
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே…
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

ஆண் : தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும்…
சூரியன் புதியதடி…
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும்…
சுகவகை புதியதடி…

பெண் : இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று…
சாயுது இளையகொடி…
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று…
ஏங்குது பழையபடி…

ஆண் : ஆடை சரிந்தால்…
உன் அவசியம் பார்த்து வைப்பேன்…
ஜாடை புரிந்தால்…
உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்…

பெண் : மார்பழகு இந்திரனே…
மஞ்சள் நிற மன்னவனே…
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே…
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

பெண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
ஆண் : புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM


Notes : Thappu Thanda Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. தப்புத்தண்டா பாடல் வரிகள்.


காற்று என்பதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Kaatru Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்று என்பதா… காற்று என்பதா…
காற்று என்பதா… காற்று என்பதா …

BGM

ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

ஆண் & பெண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹோஹோஹோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM

பெண் : சுற்றாமல் பூமி நின்றாலுமே…
என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்…

ஆண் : மேகங்கள் அமிலம் பெய்தாலுமே…
என் கண் இமை உனக்கு குடையாய் வரும்…

பெண் : என் கிளைகளில் தீயை வைத்து…
ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்…

ஆண் : நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே…
என் நாடி துடிக்குதடி…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM

பெண் : காற்றோடு காற்றாய் நீ மாறினால்…
என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே…
நீரோடு நீராய் நீ ஓடினால்…
என் தாகங்கள் உன்னை கை பற்றுமே…

ஆண் : ஏய் அழகிய சமவெளி நிலமே…
பெண் : ஹேய்…
ஆண் : என் மழையினை ஏற்பாயோ…
பெண் : ஓஹோ…

ஆண் : போ வெளியே என்றே தள்ளி…
பொய் கோபம் பூப்பாயோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹாஹாஹா…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM


Notes : Kaatru Enbathu Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Pa. Vijay. காற்று என்பதா பாடல் வரிகள்.


ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன், சந்திராயி பட்டாச்சார்யா & உமா பத்மநாபன்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Oru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

பெண் : திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

BGM

பெண் : நான் வாழும் நாள் வரை…
என் வீரம் கைச்சிறை…

ஆண் : கல்யாண நலுங்குதான்…
கண்ணே ஒர் விலங்குதான்…

பெண் : கூடை பூவை பனி…
ஓசை இன்றே தொடும்…

ஆண் : ஓ காவல் மீறி வரும்…
காற்றுக்கேது தடம்…

பெண் : அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ…

பெண் : திருவிழா இந்த நேரத்தில் தீண்ட…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

குழு : கால் கொலுசு இசை பாடும்…
கை வளையல்கள் அசைந்தாடும்…
கண் விழியில் ஒரு நாளும்…
காமன் அவன் விடும் பானம்…

குழு : மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும்…
மாலை சூடிடும் வைபோகம்…
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும்…
வாழ்த்து பாடிடும் கல்யாணம்…

BGM

ஆண் : ஓ தென்காசி தூறல் போல்…
என் கண்ணீர் வேர்கிறாய்…

பெண் : பூ வைத்த பூவைக்குள்…
தீ வைத்து பார்க்கிறாய்…

ஆண் : கண்ணில் நூறு கனா… ஆ…
நெஞ்சில் நூறு வினா…

பெண் : காதல் யாரை விடும்… ம்ம்…
தேதி பார்த்தா தொடும்…

ஆண் : வலிக்கும் காதல் வலியது…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்து முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…


Notes : Oru Nila Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. ஒரு நிலா பாடல் வரிகள்.


கண்ணாமூச்சி ரே ரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kannamochi Ray Ray Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

ஆண் : இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…

BGM

ஆண் : ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ…
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ…

BGM

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

ஆண் : பல ஆயிரம் ஆசைகள் உண்டு…
இவர் இதயங்கள் நினைப்பதற்கு…
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை…
இங்கு நினைத்ததை முடிப்பதற்கு…

BGM

ஆண் : போகின்ற மேகங்கள் எங்கே தூறுமோ…
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ…

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

BGM


Notes : Kannamochi Ray Ray Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. கண்ணாமூச்சி ரே ரே பாடல் வரிகள்.


துரியோதனா துரியோதனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்தேவாசாக்லெட்

Dhuryodhana Dhuryodhana Song Lyrics in Tamil


BGM

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

பெண் : நான் ஜெயிச்சா நீ அடிமை…
நீ ஜெயிச்சா நான் அடிமை…

பெண் : சூதாட வாடா சூட்டோட சூடா…
ஏதேதோ ஏக்கம் ஏழு எட்டு நாளா…

பெண் : வாடா வாடா…
நான் வாழ வாழ்த்த வாடா…
வாடா வாடா…
என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

BGM

ஆண் : நதியில குளித்த காத்து…
பின்பு நடந்தது நம்மைப்பார்த்து…
கைத்தட்டி அழைச்சது அல்லி…
தன்னை கற்பழி என்று சொல்லி…

பெண் : வா வா என்று பூவா சொல்லும்…
சொல்ல சொன்னது வயசுதான்…

ஆண் : ஏய்… உன்னைச் சொல்லி குத்தம் இல்லை…
உசுப்புது உன்னை மனசதான்…

பெண் : அம்மாடி நீதான் அக்கால சகுனி…
அன்னாடம் என்னை லேசாக கவனி…

ஆண் : ஆத்தாடி என்ன பொல்லாத ஆசை…
ஏய் ஏய்… ஆசைக்கு ஏது ஒழுங்கான பாஷை…

பெண் : ஓ… வாடா வாடா என் வெட்க்கம் போச்சு வாடா…
வாடா வாடா என்னை வெளுத்துக்கட்டு வாடா…

பெண் : ஏய் துரியோதனா துரியோதனா…
ஆண் : நான் தாயம் உருட்ட வந்தேன்…

பெண் : ஏய் துச்சாதனா துச்சாதனா…
ஆண் : நான் துயிலை உரிக்க வந்தேன்…

BGM

ஆண் : மேற்கினில் சூரியன் சாஞ்சால்…
அத மெத்தை என்றாடும் இருவர்…
சரியா தப்பா சொல்ல…
அந்த மன்மதன் தான்டி நடுவர்…

பெண் : இருவர் தோற்க சரிசமமாக…
ஜோராக நடந்திடும் சூதுதான்…

ஆண் : எம்மா நீதான் விடியும் வரையும்…
ஆடைக்கு கொடுக்கணும் லீவுதான்…

பெண் : உண்டான மோகம் உன் தோளை பார்தா…
உள்ளாசை கூடும் உன்கிட்ட தோத்தா…

ஆண் : ஏய்… நான் என்ன சொல்ல…
நான் நானாக இல்லை…
உன் தலையாணை மெல்ல…
சுகமான தொல்லை…

பெண் : வாடா வாடா…
நீ வேணும் வேணும் வாடா…
வாடா வாடா…
என்னை வாரிக்கொண்டு போடா… டா டா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

ஆண் : நான் ஜெயிச்சா நீ அடிமை…
நீ ஜெயிச்சா நான் அடிமை…

ஆண் : சூதாட வந்தேன் சூட்டோட சூடா…
பெண் : ஏதேதோ ஏக்கம் ஏழு எட்டு நாளா…

பெண் : வாடா வாடா…
நான் வாழ வாழ்த்த வாடா…
வாடா வாடா…
என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா… பேடா…


Notes : Dhuryodhana Dhuryodhana Song Lyrics in Tamil. This Song from Chocklet (2001). Song Lyrics penned by Vaali. துரியோதனா துரியோதனா பாடல் வரிகள்.