Tag Archives: வைரமுத்து

என் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…

ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை…
சுய பந்தம் இல்லாத அன்னை…
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…

ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே…
அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன…
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…

BGM


Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோ பாடல் வரிகள்.


கன்னிக் கோவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Kanni Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM

ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு…
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு…
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா…
திருநாள் வருமா… ஆஆஆ…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM


Notes : Kanni Koyil Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. கன்னிக் கோவில் பாடல் வரிகள்.


எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

BGM

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.


முன்னேருதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.எல்.மகாராஜன் & சுவர்ணலதாஏ. ஆர். ரகுமான்இந்திரா

Munnerudhan Song Lyrics in Tamil


ஆண் : மயிலகாள மருதகாள… ஆஅஆ…
மணி கயித்துல சோடி சேரு…
வெளுத்த காள செவத்தகாள… ஆஅஆ…
இடம் வலமா சோடி சேரு…

பெண் : மாரி மாரி பொழிய வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : பூமிதாயி குளிர வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

பெண் : வானம் பார்த்த கரிசக்காடு…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : மனசபோல இளக வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

ஆண் : முன்னேருதான் பூட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : போற வழி நீ காட்டு…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

ஆண் : பின்னேருதான் ஓட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

பெண் : பொன்னேரு பூட்டி…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : வெத போட வேணும்…
குழு : போட வேணும்…

பெண் : முப்போகம் வௌஞ்சு…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்…
குழு : ஆறவேணும்…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…

{ குழு : தந்தானனா தானா ஏலாலங்கடி ஏலாலம்…
தானனதான ஏலாலங்கடி ஏலாலம்…
தனனனதானன ஏலாலங்கடி ஏலேலோ…
த ன ன ன தா ன ன ஏலாலங்கடி ஏலேலோ… } * (2)

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…


Notes : Munnerudhan Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. முன்னேருதான் பாடல் வரிகள்.


வா வெள்ளை ராசத்தியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil


ஆண் : வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்… ம்ம்ம்…

BGM

ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை…
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை…
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை…
பனித்துளி கூட எறும்பின் கடல்தானே…
அன்பில் சிறிது பெரிது கிடையாதே…
ஆற்றில் சகல துளியும் சமமே…

BGM

ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும்…
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா…
எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம்…
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா…
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே…
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசி இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…


Notes : Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. வா வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்.


உங்க அப்பனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil


BGM

குழு : டியல டியல டியல…
டியல டியல டியாலோ…
டியல டியல டியல…
டியல டியல டியாலோ…

ஆண் : டியாலோ…
பெண் : டியாலோ…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

BGM

ஆண் : பொடவையிலும்…
பெண் : போதை…
ஆண் : புகழ்ச்சியிலும்…
பெண் : போதை…

ஆண் : போதை மட்டும் இல்லையின்னா…
பூமி சுத்திடுமா…

பெண் : காதல் ஒரு…
ஆண் : போதை…
பெண் : காமமும் ஒரு…
ஆண் : போதை…

பெண் : போதை மட்டும் இல்லையின்னா…
காத்து வீசிடுமா…

ஆண் : எப்போது என்னாகும் என்னை பாத்துகோடா…
மச்சானே மச்சானே மஜா பண்ணிகோடா டோய்…

பெண் : கழுகு மலை எது…
வழிய சொல்லுங்கடா தள்ளுங்கடா…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

பெண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே ப்பே…
பெண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…

ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே ஹ்ஹ்…

BGM

ஆண் : டுர்ர்ர்ர்ருருரூ டியாலோ…
குழு : ஹேய் பப்ர பப்ர பப்ரப…
ஆண் : ஹேய் பப்ர பப்ர பப்ரப…

BGM

பெண் : ஊசி மணி பாசி…
உனக்கு மட்டும் ஓசி…
காட்டுக்குள்ள போக கொஞ்சம்…
கருனை வைக்கிறையா…

ஆண் : சுட்ட நரி கொம்பு…
வந்து தரேன் நம்பு…
யானைக்கு ஒரு பள்ளம் வெட்டனும்…
தூரம் நிக்கிறையா…

பெண் : சிக்காத மானுக்கு கன்னி வைக்கட்டுமா…
சேலையில சின்னவள பின்னி வைக்கட்டுமா…

ஆண் : அன்னைக்கு நினைச்சது…
இன்னைக்கு பளிக்குது நடக்குமா…

பெண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே ப்பே…
பெண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…

ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் & பெண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் & பெண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…


Notes : Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. உங்க அப்பனுக்கும் பாடல் வரிகள்.


நீண்ட மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Neenda Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…

ஆண் : கண்ணே கலைமானே என்று…
கவிதை நெஞ்சு கதருதடி…
பெண்ணே உந்தன் பேரை தவிர…
எல்லா மொழியும் அழியுதடி…

பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை…
சுற்றுசூழல் மறந்தபடி…
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோணுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM

பெண் : ஹோஓஓ… உன்னை எண்ணி சாலை போனால்…
வீடு கடந்தே போகின்றேன்…
ஏறும் ஏறும் பத்து என்றே…
எங்கள் தப்பை எண்ணினேன்…

ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே…
மறந்து போச்சே உன்னாலே…
நீ இருக்கும் திசையெல்லாமே…
கிழக்கு என்றே காணுவேன்…

பெண் : என் வேர்களில் நீராகிறாய்…
என் பூக்களில் தேன் ஆகிறாய்…
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்…

பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே…
உன் பார்வைகள்…
என்னை கொன்று இன்பம் செய்கிறதே…

ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்…
உன்னை பார்த்ததும்…
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM


Notes : Neenda Malare Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. நீண்ட மலரே பாடல் வரிகள்.


வருங்கால மன்னர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Varungala Mannargale Song Lyrics in Tamil


BGM

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து…
பறக்க வேண்டும் தும்பிகளே…
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்…
இதயம் வேண்டும் தம்பிகளே… ஹோஓ…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

BGM

ஆண் : நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்…
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்…
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்…
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்…

ஆண் : உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்…
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்…
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

BGM

ஆண் : புகை புடிக்கும் போதை தண்ணி…
விட்டு விடுங்கள்…
போன காலம் போகட்டுமே…
திருந்தி நில்லுங்கள்…

ஆண் : அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம்…
தள்ளி வெய்யுங்கள்…
சொந்தாமாக வேர்வை சிந்தி…
சோறு தின்னுங்கள்…

ஆண் : சுற்றி ஒரு பகை எழுந்தால்…
வாளை எடுங்கள்… ஹான்…
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு…
ஓலை விடுங்கள்…
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு…
ஓலை விடுங்கள்…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

BGM


Notes : Varungala Mannargale Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. வருங்கால மன்னர்களே பாடல் வரிகள்.


செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & பிரகதி குருபிரசாத்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM

ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி…
வட்டி அசலுக்கு மேல போட்டுதாரேன்…

பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா…
இரவுக்கு என்ன கடனாதாரேன்…

ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்…
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்…

ஆண் : தள்ளி போடாதே…
பெண் : தாப்பா போடாதே… ஏ…

BGM

பெண் : உன்னை பிள்ளை செய்வேன்…
கொஞ்சம் தொல்லை செய்வேன்…
கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்…

ஆண் : வீட்டில் வேலை செய்வேன்…
தோட்டம் தூய்மை செய்வேன்…
சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்…

பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…

பெண் : சற்று தள்ளி போ…
ஆண் : நேரம் சொல்லி போ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.