Tag Archives: வைரமுத்து

அழகா கள்ளழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராதேவாகள்ளழகர்

Azhaga Kallazhaga Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…

பெண் : ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
கெண்டை விழி கெஞ்சும் படி தண்டைகலும்…
அஞ்சும் படி துடிப்பது எனக்கழகா…

பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…

BGM

பெண் : விடி வெள்ளியில் விடியும் வரை…
இருள் வெள்ளமும் வடியும் வரை…
தினம் தினம் விழித்திருந்தேன்…
எந்தன் தூக்கம் எறிதிருந்தேன்…

பெண் : ஒரு நாள் இங்கு வருவாய் என…
திரு நாள் ஒன்று தருவாய் என…
உயிர் சுமை பொருத்திருந்தேன்…
இந்த ஊன் ஊர் வெறுத்திருந்தேன்…

பெண் : ஆறெல்லாம் தண்ணீர் போனாலும்…
எந்தன் குடமோ நிறையவில்லை…
என் வீடு வாசல் வந்தாலும்…
தாண்டி சென்றேன் புரியவில்லை…

பெண் : மலர் கோர்த்திடும் மென் ஊசிகள்…
உன்னால் என் விரல் கோர்த்திடும்…
அதில் வழி அறிந்ததில்லை…

பெண் : அழகா கள்ளழகா…

BGM

பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…

BGM

பெண் : உதடோ உந்தன் பெயர் சொன்னது…
உலகோ தினம் பழி சொன்னது…
ஊர் எங்கும் சிரிக்க வைத்தாய்…
இன்று ஊர் பழி துடைத்துவிட்டாய்…

பெண் : உடல் என்பது நான் கொண்டது…
உயிர் என்பது நீ கொண்டது…
வந்து எனை எழுப்பிவிட்டாய்…
எந்தன் வாழ்வை அசையவைத்தாய்…

பெண் : கண்டேனே காதல் கொண்டேனே…
எந்தன் கால்கள் நிலத்தில் இல்லை…
இடை தொட்டாடும் வண்ண பட்டாடை…
எந்தன் பேச்சை கேட்கவில்லை…

பெண் : கண்ணன் என் மொழியானது…
பெண்ணில் இரு விழியானது…
இனி அது பிரிவதில்லை…

பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…

பெண் : ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
கெண்டை விழி கெஞ்சும் படி…
தண்டைகலும் அஞ்சும் படி துடிப்பது எனக்கழகா…

பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…


Notes : Azhaga Kallazhaga Song Lyrics in Tamil. This Song from Kallazhagar (1999). Song Lyrics penned by Vairamuthu. அழகா கள்ளழகா பாடல் வரிகள்.


எந்தன் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil


பெண் : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

{ பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே… } * 2

ஆண் : ஓ உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : உன்னை என்னில்…
ஆண் : விதைத்தாய்…
பெண் : உயிரை ஊற்றி…
ஆண் : வளர்த்தாய்…
பெண் : ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததே…
ஆண் : காதல் தேன் வார்த்ததே…

BGM

பெண் : மேடை போட்டு சொல்வதல்ல…
பெண்ணின் காதல் என்பது…
ஜாடை சொல்லும் விழியின் அசைவில்…
சர்வ மொழியும் உள்ளது…

ஆண் : ஓ… இரு விழி அசைவிலே…
இதயம் தளன்று போனது…
இன்னொரு பார்வையில்…
இதயம் என்ன ஆவது…

பெண் : அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம்…
வெளிய சொல்ல முடியுமா…
தரையில் விழுந்து நிழல்கள் என்ன…
சத்தம் போட்டு கதறுமா…

ஆண் : ஓ நிலா படகில் நீயும் நானும்…
உலா போவோம் வாடி வா…

பெண் : உன்னை என்னில்…
ஆ… உன்னை என்னில் விதைத்தாய்…
உயிரை ஊற்றி வளர்த்தாய்…

ஆண் : உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

ஆண் : ஹோ ஹோ… இரண்டு சிறகு இருந்த போதும்…
பறக்கும் வானம் ஒன்றுதான்…
இரண்டு இதயம் மோதும் போதும்…
இருக்கும் காதல் ஒன்றுதான்…

பெண் : ஒவ்வொரு மொழியிலும்…
வேறு வேறு வார்த்தைதான்…
வார்த்தைகள் மாறலாம்…
பூக்கள் என்றும் பூக்கள்தான்…

ஆண் : ஓ காலம் மாறும் நிலங்கள் மாறும்…
காதல் என்றும் காதல்தான்…
கண்கள் இழந்தால் காதல் தெரியும்…
கண்டு கொண்டதும் இன்றுதான்…

பெண் : முத்தம் போட்டால் மொத்தம் அழியும்…
வெட்கம் என்னும் கோடுதான்…

ஆண் : உந்தன் மூச்சில் என் சுவாசம்…
கலந்து உலாவும் நேரம்தான்…

BGM

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

BGM


Notes : Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் நெஞ்சில் பாடல் வரிகள்.


சொல்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Sollayo Solaikili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

BGM

பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…

ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…

பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…

ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

BGM

பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…

ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…

ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

BGM


Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.


தாயே எங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவினீத்ரமேஷ் கிருஷ்ணன்ஆனந்தபுரத்து வீடு

Thaaye Enge Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…

ஆண் : ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…

ஆண் : தாயே உயிர் வளர்த்த தாயே எங்கே…

BGM

ஆண் : அழுதால் துடைக்க ஒரு ஆள் இல்லை…
விழுந்தால் அணைக்க ஒரு தோள் இல்லை…

ஆண் : பெருசுகள் இல்லாத வீடுகள்…
தெய்வங்கள் வாழாத கோயில்கள்…

BGM

ஆண் : கதவில் தந்தை முகம் பார்கின்றேன்…
கனவில் தாயின் குரல் கேட்கின்றேன்…

ஆண் : தலையணை இல்லாமல் தூங்கலாம்…
தலைகளே இல்லாமல் தூங்கவோ…

ஆண் : தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…

ஆண் : ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…

BGM


Notes : Thaaye Enge Song Lyrics in Tamil. This Song from Anandhapurathu Veedu (2010). Song Lyrics penned by Vairamuthu. தாயே எங்கே பாடல் வரிகள்.


ஜூலை பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

July Pathinaaru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…
கன்னம் என் கன்னம் கண்டால்…
வயது பதினாலுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ… ஓஓஓஓஹ்…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ… ஓஓஓஓஹ்…

BGM

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்…
காதல்தான் என்னை காணவில்லை…
காதல்தான் தேர்வில்லாத பள்ளி…
கல்லாமல் நானும் போவதில்லை…

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே…
என் கண்கள் பூத்தாடுதே…
அந்த பொன் நாளும் கை கூடவே…
என் மார்பு கூத்தாடுதே…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ…

BGM

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்…
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்…
பொய் காதல் தன்னை மட்டும் காணும்…
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்…

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே…
என் காதல் நான் தேடுவேன்…
அது நிறைவேறும் திருநாளிலே…
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன்… ஏஹ் ஏஹ்…

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ…

BGM


Notes : July Pathinaaru Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. ஜூலை பதினாறு பாடல் வரிகள்.


பிறையே பிறையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Piraye Piraye Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…

ஆண் : வெளிச்சம் மறையக்கூடும்…
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்… ம்ம்…
விதைகள் உதைக்கும் போதும்…
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்…

ஆண் : தூங்கு பொன்மானே நாளை உன் நாளே…

BGM


Notes : Piraye Piraye Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. பிறையே பிறையே பாடல் வரிகள்.


மச்சான பாருடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Machana Paaradi Song Lyrics in Tamil


பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…

குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…

BGM

பெண் : மச்சான பாருடி…
ஆஹா மச்சமுள்ள ஆளுடி…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆள பாரு நல்லா…
இவர் மீசை வச்ச பில்லா…
ஆஹா வீரம் என்ன கூறு…
அது பூனை மீசை பாரு…

பெண் : காதலுக்கு மாமன்தான்…
ராத்திரியில் வீரன்தான்…
பாம்பு உண்டு பையில…
கன்னத்தோடு கையில…

பெண் : அடக்குடி நாக்க…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : அடக்குடி நாக்கு…
அது ஒரு பேக்கு…
எங்கிட்ட மோதுனா ஒடை படும் மூக்கு…

பெண் : மச்சான பாருடி…
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே வெட்டனும் வாங்கடி… ஹ்ம்ம்…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆளு ரொம்ப தங்கம்…
இவர் ராஜா வீட்டு சிங்கம்…
ஆஹ் போதும் போடி தங்கம்…
இது என்றும் சைவ திங்கும்…

பெண் : பாயும் புலி தானடி…
பஞ்சணையில் சாதுடி…
டாங்கி போல ஆளுடி…
ஆளக் கொட்டும் தேளுடி…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : மன்மதன் பேரன்…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
மன்மதன் பேரன்…
ஆம்பிளையா இவன் சோதிக்க வேணா…

பெண் : மச்சான பாருடி…
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்…
மச்சமுள்ள ஆளுடி…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே ஹான் வெட்டனும் ஹான் வாங்கடி…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…


Notes : Machana Paaradi Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vairamuthu. மச்சான பாருடி பாடல் வரிகள்.


இன்பம் எதிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக், கிரிட் லாக் & டிம்மிமிக்கி ஜே மேயர்இனிது இனிது

Inbam Ethirilae Song Lyrics in Tamil


குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

BGM

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : மனதில் ஆயிரம் பூ மழையே…

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

BGM

ஆண் : நாளை நாமும் எங்கோ வாழ்வோம்…
ஆயினும் காலேஜ் போல் வருமா…
நல்லது பாதி கெட்டது பாதி…
இங்கே கற்றோமே…

ஆண் : இளமை காலம் புயலை போலே…
தடைகள் போட்டால் கேட்டிடுமா…
வானம் தேடி போகும் வயதில்…
வா வா பறப்போமே…

ஆண் : நேற்று சருகென போனது போகட்டுமே…
வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே…
இன்றே அணு அணுவாக அனுபவிப்போம்…
இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம்…

BGM

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…


Notes : Inbam Ethirilae Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. இன்பம் எதிரிலே பாடல் வரிகள்.


நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


BGM

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

BGM

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

BGM

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

BGM

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

BGM

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.