பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா | தேவா | கள்ளழகர் |
Azhaga Kallazhaga Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
பெண் : ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
கெண்டை விழி கெஞ்சும் படி தண்டைகலும்…
அஞ்சும் படி துடிப்பது எனக்கழகா…
பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
—BGM—
பெண் : விடி வெள்ளியில் விடியும் வரை…
இருள் வெள்ளமும் வடியும் வரை…
தினம் தினம் விழித்திருந்தேன்…
எந்தன் தூக்கம் எறிதிருந்தேன்…
பெண் : ஒரு நாள் இங்கு வருவாய் என…
திரு நாள் ஒன்று தருவாய் என…
உயிர் சுமை பொருத்திருந்தேன்…
இந்த ஊன் ஊர் வெறுத்திருந்தேன்…
பெண் : ஆறெல்லாம் தண்ணீர் போனாலும்…
எந்தன் குடமோ நிறையவில்லை…
என் வீடு வாசல் வந்தாலும்…
தாண்டி சென்றேன் புரியவில்லை…
பெண் : மலர் கோர்த்திடும் மென் ஊசிகள்…
உன்னால் என் விரல் கோர்த்திடும்…
அதில் வழி அறிந்ததில்லை…
பெண் : அழகா கள்ளழகா…
—BGM—
பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
—BGM—
பெண் : உதடோ உந்தன் பெயர் சொன்னது…
உலகோ தினம் பழி சொன்னது…
ஊர் எங்கும் சிரிக்க வைத்தாய்…
இன்று ஊர் பழி துடைத்துவிட்டாய்…
பெண் : உடல் என்பது நான் கொண்டது…
உயிர் என்பது நீ கொண்டது…
வந்து எனை எழுப்பிவிட்டாய்…
எந்தன் வாழ்வை அசையவைத்தாய்…
பெண் : கண்டேனே காதல் கொண்டேனே…
எந்தன் கால்கள் நிலத்தில் இல்லை…
இடை தொட்டாடும் வண்ண பட்டாடை…
எந்தன் பேச்சை கேட்கவில்லை…
பெண் : கண்ணன் என் மொழியானது…
பெண்ணில் இரு விழியானது…
இனி அது பிரிவதில்லை…
பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
பெண் : ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
கெண்டை விழி கெஞ்சும் படி…
தண்டைகலும் அஞ்சும் படி துடிப்பது எனக்கழகா…
பெண் : அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
Notes : Azhaga Kallazhaga Song Lyrics in Tamil. This Song from Kallazhagar (1999). Song Lyrics penned by Vairamuthu. அழகா கள்ளழகா பாடல் வரிகள்.