Tag Archives: வைரமுத்து

சொர்க்கம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
குழு : சொர்க்கம் என்பது நமக்கு…

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்…
குழு : சுத்தம் உள்ள வீடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

BGM

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…

பெண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

BGM

ஆண் : குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்…
பெண் : படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்…

ஆண் : இதற்கா இதற்கா…
குழு : கல்வி கற்கும் சாலைகள்…
பெண் : எதற்கோ எதற்கோ…
குழு : இந்த வேலைகள்…

BGM

குழு : மீதியாக வந்த பக்கம்…
ஆண் : போதை ஏற மாத்திரை…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM

பெண் : படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்…
ஆண் : ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்…

பெண் : உனக்கும் எனக்கும்…
குழு : ஆடு மாடு தேவல…
ஆண் : உனை போல் எனை போல்…
குழு : கெட்டு போகல…

BGM

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ…
கெட்ட வார்த்தை ஆனது…

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM


Notes : Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. சொர்க்கம் என்பது பாடல் வரிகள்.


ஓ ராகினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாமருமகன்

Oh Ragini Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…
ஓ ராகினி நீலாம்பரி என்ராகமோ நீதானடி…
மனமே உன்னையே நின்னையே எண்ணியே…

ஆண் : என் சுவாசம் யாவும் நீயே…
என் வாசல் வழி வருவாயே…
மௌனம் ஏன்…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…

BGM

ஆண் : கண்மணி போலே பொம்மையைச் செய்து…
கனவினில் காதலித்தேஎஎஏன்…

பெண் : தலைவனை நினைத்து தலையணை அணைத்து…
தனிமையில் நான் தவித்தேன்…

ஆண் : வேட்கை நெஞ்சில் வேட்கை…
அதை சொல்லாமல் ஏன் இந்த வாழ்க்கை…

பெண் : நேரம் வரும் போது…
இது நீரோடு நீர் சேரும் சேர்க்கை…

ஆண் : இதோ இதோ செந்தாமரை…
வந்தாடுதே என் தோள்வரை…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி…
பெண் : உன் ராகமே நான்தான் கண்ணா…

BGM

பெண் : நீ ஒரு பாதி நான் ஒரு பாதி…
சேர்வதில் பேதம் என்ன…

ஆண் : கங்கையும் நீர்தான் காவிரி நீர்தான்…
சேர்வதில் பேதம் என்ன…

பெண் : தூரம் இருந்தாலும் உன்னைத் தொட வேண்டும்…
கைநீட்டி நானே…

ஆண் : காலம் கடந்தாலும் என்றும் புளிக்காது…
மலைக்காட்டுத் தேனே…

பெண் : என்னோடு சேர்ந்த தேவனே…
உன்னோடு போகும் ஜீவனே…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீ தானடி…
பெண் : மனமே உன்னையே நின்னையே எண்ணியே…

பெண் : என் சுவாசம் யாவும் நீயே…
என் வாசல் வழி வருவாயே மன்னவா…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி…
பெண் : உன் ராகமே நான்தான் கண்ணா…

BGM


Notes : Oh Ragini Song Lyrics in Tamil. This Song from Marumagan (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓ ராகினி பாடல் வரிகள்.


பூங்குயில் பாடினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராமகேஷ் மகாதேவன்நம்மவர்

Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

BGM

பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா
லாலலா லாலலா லல்லா…

பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு…
ஆண் : பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு…

பெண் : நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்…
ஆண் : மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்…

பெண் : நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு…
ஆண் : மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

BGM

பெண் : எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்…
ஆண் : எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்…

பெண் : தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்…
ஆண் : ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்…

பெண் : காசு மாலைதானே கலையின் சன்மானம்…
கண்ணின் துளிகள்தானே கலைகளின் வெகுமானம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…


Notes : Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. பூங்குயில் பாடினால் பாடல் வரிகள்.


ஒத்த பார்வை பார்த்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்தேவாவிரும்புகிறேன்

Otha Paarva Paatha Song Lyrics in Tamil


BGM

பெண் : கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால்…
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்…

BGM

ஆண் : ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…

BGM

ஆண் : பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…

BGM

ஆண் : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

BGM

ஆண் : வா வா என்று நான் கேட்ட போதும்…
வந்தேன் என்று நீ தாவவில்லை…
வானம் தாண்ட சிறகுள்ள போதும்…
நானம் தாண்டி வெளியேரவில்லை ஆகையினால் அடி…
குழு : விரும்புகிறேன்…

BGM

ஆண் : அரும்பு மலரும் வசந்த காலம்…
ஆசை மலரும் கார் காலம்…
அன்பு மலரும் ஆறு காலம்…
ஒரு கண்ணில் இரு கண்ணில் உலவ கண்டதால்…
குழு : விரும்புகிறேன்…

BGM

குழு : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

BGM

ஆண் : அசர வைக்கும் உயரமும் நீ இல்லை…
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை…
வசதிப்பட்ட உசரம் என்பதனால் அடி ரதியே…
குழு : விரும்புகிறேன்…

BGM

ஆண் : கிளைகள் வேறு இருவருக்கும்…
கூடுகள் வேறு இருவருக்கும்…
பறக்கும் திசைமட்டும் ஒன்றாய் இருப்பதானாலே…
குழு : விரும்புகிறேன்…

BGM

குழு : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

BGM

ஆண் : பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே…
காதல் வருமென்று நினைத்ததில்லையே…
உன்னை கண்டதும் என் கருத்து மாறியதால்…
குழு : விரும்புகிறேன்…

BGM

குழு : விரும்புகிறேன்…

ஆண் : ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…

BGM

ஆண் : பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…

BGM

ஆண் : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…


Notes : Otha Paarva Paatha Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒத்த பார்வை பார்த்தா பாடல் வரிகள்.


சுகங்கள் சொர்க்கத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன்மனோஜ் கியான்சிறகடிக்க ஆசை

Sungangal Sorgathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ம்ம்… சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…

பெண் : ஆஅ… விடுங்கள் விளையாட்டை விடுங்கள்…
விரல்கள் அப்பப்பா விரல்கள்…
உங்கள் ஜாலம் போதும் போதும்…
ஆண் : ஆஹா…
பெண் : இந்த மேனி நீராய் போகும்…

ஆண் : ஹஹா… சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஆஆ மன்மத ரதங்கள்…

BGM

ஆண் : தேவர்கள் வாழ்கின்ற உலகம்…
இந்த தேவதை இமைகளில் உறங்கும்…
ஏனடி உடைகளில் மாற்றம்…
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்…
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ் எனைப்பாரடி…

பெண் : அஹ… வேண்டாமுங்க வேண்டாமுங்க…
வேறேதும் துணை பாருங்க…

ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து…
கொஞ்சம் நீயும் கதவை சாத்து…

ஆண் : சுகங்கள் ஹஹா சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஓ மன்மத ரதங்கள்…

BGM

ஆண் : வாலிப வளைவுகள் வாட்டும்…
அது பேரின்ப சுகங்களை கூட்டும்…
தேனான கனிகளின் ஆட்டம்…
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்…
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி…

பெண் : ஹேய்… வேண்டாமுங்க வேண்டாமுங்க…
வேறேதும் துணை பாருங்க…

ஆண் : இனி நேரம் காலம் ஏது…
உந்தன் பேசும் விழியே தூது…

ஆண் : சுகங்கள் அஹ ஹா சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஆஹாஹா மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் சுகமா பாத்து…

பெண் : ஆஹாஹ்…
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்…
ஆண் : ஆஹ்ஹஹ்ஹா…
பெண் : இது மோக ராகப் பாட்டு…
ஆண் : ம்ம்ம்…
பெண் : நாளும் தனியாப் போச்சு…
ஆண் : ஹஹாஹ்…

பெண் : தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்…
ஆண் : ஆ… சுகங்கள் இப்போது…


Notes : Sungangal Sorgathil Song Lyrics in Tamil. This Song from Siragadikka Aasai (1994). Song Lyrics penned by Vairamuthu. சுகங்கள் சொர்க்கத்தில் பாடல் வரிகள்.


கடலம்மா கடலம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்நிலாவே வா

Kadalamma Kadalamma Song Lyrics in Tamil


{ குழு : தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா… } * (2)

குழு : தையார தை யார தைய தோம்…
தையார தை யார தைய தோம்…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு…
நாக்கு மட்டும் ஒட்டிவிட்டதே…

பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில்…
இப்ப ரொம்ப இத்துவிட்டதே…

ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்…
நெஞ்சு வேகாது கண்ணம்மா…

பெண் : உன்ன காணாம உயிர் சேராம…
என் கண்ணீரு தீருமா…

ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்…
கடலுக்கு சொந்தமடி…

பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா…
எடுத்துக்க நல்லபடி…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

பெண் : தூதுவிட்ட அலை அட எந்த அலையோ…
என்ன வந்து சேரலையே…

ஆண் : தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்…
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே…

பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம…
நான் நின்னேனே ஊமையா…

ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்…
இந்த கண்ணீரு தேவையா…

பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில…
கரையே மூழ்கிடுமோ…

ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில…
கடலே மூழ்கிடுமோ…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

BGM


Notes : Kadalamma Kadalamma Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. கடலம்மா கடலம்மா பாடல் வரிகள்.


வெள்ளைகார முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமஹதிஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Vellaikkara Mutham Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

BGM

பெண் : கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்…
கொள்ளை மோச்சம் கொண்டேன்…
செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்…

பெண் : ஆ… இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்…
நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்…

பெண் : குடைகடியில் நிறைந்துவிட்டேன்…
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்…
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்…

பெண் : வெள்ளைகார முத்தம்…
ஆண் : தனன தனனனன…
பெண் : என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
ஆண் : தனன தனனனன…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM

பெண் : மோகம் கொண்டு தைத்தான்…
மூச்சு முட்ட வைத்தான்…
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்…

BGM

பெண் : கட்டில்காடு கண்டான்…
கண்ணில் விட்டு கொண்டான்…
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்…

பெண் : உச்சுகொட்டியே உடைந்து விட்டான்…
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்…
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்…

பெண் : தன்ன னானன் நானா…
என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM


Notes : Vellaikkara Mutham Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளைகார முத்தம் பாடல் வரிகள்.


நிஜமா நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & திப்புதேவாவிரும்புகிறேன்

Nijama Nijame Song Lyrics in Tamil


குழு : சிரிச்சா சிரிப்பு வராதடி தோழி…
அழுதா அழுக வராதடி தோழி…
காயம் பட்டாலும் வலிக்காதடி தோழி…
தீ பட்ட விரலும் தித்திக்கும் தோழி…

ஆண் : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
வயசு பொண்ணுக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இது தான் காதல் அறிகுறி என்று அறிஞ்சிக்கடி…

BGM

பெண் : நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…

பெண் : பந்த பாசம்விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே தோழா…

பெண் : நிஜமா நிஜமே நிஜமா…

BGM

பெண் : பாறாங்கல் மார்பழகா பாலாடை நிறத்தழகா…
பள்ளி கொள்ள உன் மார்பு போதும்…
கோயில் சிலை அழகா கொலை செய்யும் கண்ணழகா…
கூத்தாட உன் அழகு போதும்…

பெண் : கொஞ்சுடா கொஞ்சம் அள்ளி துள்ள வாடா…
அஞ்சு நாள் சொர்க்கம் தினம் தானம் தாடா…

ஆண் : காதல் வந்தால் வெட்கம் வெளியே போய்விடுமா…
மான்களுக்கும் புலி போல் ஆசை தோன்றிடுமா… ஹஹ

ஆண் : நிஜமா நிஜமே நிஜமா…

—BGM—

குழு : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
உனக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இதுதான் காதல் அறிகுறி…

பெண் : அரும்பாக இருந்த உள்ளம் இரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

ஆண் : இரும்பாக இருந்த உள்ளம் கரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

பெண் : கொஞ்ச நாளிலே உள்ளம் மாறி போனேன்…
கொஞ்சி காட்டவா பாதி ஆணாய் ஆனேன்…

ஆண் : காதலியே உன்னில் பாதி நானடியே…
கருவிழியே இனி இருவர் வழி ஒரு வழியே… ஹேஹே…

ஆண் : நிஜமா…
பெண் : நிஜமே…
ஆண் : சுமையா…
பெண் : சுகமே…

பெண் : நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…

ஆண் & பெண் : நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்ப வில்லை…

ஆண் & பெண் : பந்த பாசம் விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே…
பெண் : தோழா…
ஆண் : தோழி…


Notes : Nijama Nijame Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. நிஜமா நிஜமே பாடல் வரிகள்.


காந்தி தேசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநான் சிகப்பு மனிதன்

Gandhi Desame Song Lyrics in Tamil


ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…

BGM

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

BGM

ஆண் : காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்…
ஒரு சிலர் உரிமையில்லை…
ஒரு சிலர் உரிமையில்லை…

ஆண் : வளமுண்டு குறைவில்லை…
ஏழைக்கு நிறைவில்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…

ஆண் : சாலையில் தனிமையில் அழகிய இளமயில்…
நடக்கவும் முடியவில்லை…
நடக்கவும் முடியவில்லை…

ஆண் : இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது…
வேலையும் கிடைக்கவில்லை…
வேலையும் கிடைக்கவில்லை…

ஆண் : ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று…
ரத்தம் கேட்கின்றதே…
தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்…
தஞ்சம் கேட்கின்றதே…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

BGM

ஆண் : இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்…
எல்லையில் நிறைந்திருப்பார்…
எல்லையில் நிறைந்திருப்பார்…

ஆண் : நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…

ஆண் : அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின்…
ஆறுகள் ஓடுதடா… ஆறுகள் ஓடுதடா…

ஆண் : ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்…
வான் வரை ஏறுதடா…
வான் வரை ஏறுதடா…

ஆண் : விடுதலை வாங்க அன்று நாம் தந்த…
விலைகள்தான் கொஞ்சமா…
வேலியே இன்று பயிரை மேய்கின்ற…
நிலைமைதான் மாறுமா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…


Notes : Gandhi Desame Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Vairamuthu. காந்தி தேசமே பாடல் வரிகள்.


ஆண்டவனப் பாக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்மக்கள் என் பக்கம்

Andavanai Paarkanum Song Lyrics in Tamil


ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM

ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல…
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல…
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல…
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல…

ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம்…
அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்…
அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம்தானடா…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஆஹாஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM

ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே…
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே…
ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே…
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே…

ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே…
சொல்லி முடிக்க மொழி இல்லையே…
அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… டேய் ஹஹா…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM


Notes : Andavanai Paarkanum Song Lyrics in Tamil. This Song from Makkal En Pakkam (1987). Song Lyrics penned by Vairamuthu. ஆண்டவனப் பாக்கணும் பாடல் வரிகள்.