பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | வித்யாசாகர், பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன் | வித்யாசாகர் | நிலாவே வா |
Kadalamma Kadalamma Song Lyrics in Tamil
{ குழு : தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா… } * (2)
குழு : தையார தை யார தைய தோம்…
தையார தை யார தைய தோம்…
ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…
பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…
ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
—BGM—
ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு…
நாக்கு மட்டும் ஒட்டிவிட்டதே…
பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில்…
இப்ப ரொம்ப இத்துவிட்டதே…
ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்…
நெஞ்சு வேகாது கண்ணம்மா…
பெண் : உன்ன காணாம உயிர் சேராம…
என் கண்ணீரு தீருமா…
ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்…
கடலுக்கு சொந்தமடி…
பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா…
எடுத்துக்க நல்லபடி…
ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
—BGM—
பெண் : தூதுவிட்ட அலை அட எந்த அலையோ…
என்ன வந்து சேரலையே…
ஆண் : தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்…
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே…
பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம…
நான் நின்னேனே ஊமையா…
ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்…
இந்த கண்ணீரு தேவையா…
பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில…
கரையே மூழ்கிடுமோ…
ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில…
கடலே மூழ்கிடுமோ…
ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…
பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…
—BGM—
Notes : Kadalamma Kadalamma Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. கடலம்மா கடலம்மா பாடல் வரிகள்.