பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் | இளையராஜா | காளி (1980) |
Vaazhumattum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
ஆண் : அட ஆடியில் செய்தவன்…
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா…
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்…
பின்னால் பாரடா…
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
—BGM—
ஆண் : காலம் நம்மைப் பார்த்து கண்ணடித்தால்…
பதவி வரும்…
அதுவே மெதுவாக ஜாடை செய்தால்…
சிறையும் வரும்…
ஆண் : பலிக்கும் வரையில் மகராஜா…
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்…
சுக்கிரனோ சூரியனோ சனி பகவான்தானோ…
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
—BGM—
ஆண் : கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு பிறப்பெடுத்தான்…
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான்…
ஆண் : நமக்கும் இதுதான் அவதாரம்… ஹஹா…
உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால்…
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா…
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
—BGM—
ஆண் : அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை…
நம்மை தனித் தனியே எண்ணிக் கொள்வதில்லை…
ஆண் : ஒரு தாய் வயிற்றில் மகனானோம்…
சாலைகளே காலங்களே சொல்லுங்களே…
இருவரிலே ஒருவரையே காணுங்களே…
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
ஆண் : அட ஆடியில் செய்தவன்…
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா…
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்…
பின்னால் பாரடா…
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
—BGM—
Notes : Vaazhumattum Song Lyrics in Tamil. This Song from Kaali (1980). Song Lyrics penned by Kannadasan. வாழும் மட்டும் பாடல் வரிகள்.