Tag Archives: வைரமுத்து

காந்தி தேசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநான் சிகப்பு மனிதன்

Gandhi Desame Song Lyrics in Tamil


ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…

BGM

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

BGM

ஆண் : காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்…
ஒரு சிலர் உரிமையில்லை…
ஒரு சிலர் உரிமையில்லை…

ஆண் : வளமுண்டு குறைவில்லை…
ஏழைக்கு நிறைவில்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…

ஆண் : சாலையில் தனிமையில் அழகிய இளமயில்…
நடக்கவும் முடியவில்லை…
நடக்கவும் முடியவில்லை…

ஆண் : இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது…
வேலையும் கிடைக்கவில்லை…
வேலையும் கிடைக்கவில்லை…

ஆண் : ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று…
ரத்தம் கேட்கின்றதே…
தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்…
தஞ்சம் கேட்கின்றதே…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

BGM

ஆண் : இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்…
எல்லையில் நிறைந்திருப்பார்…
எல்லையில் நிறைந்திருப்பார்…

ஆண் : நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…

ஆண் : அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின்…
ஆறுகள் ஓடுதடா… ஆறுகள் ஓடுதடா…

ஆண் : ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்…
வான் வரை ஏறுதடா…
வான் வரை ஏறுதடா…

ஆண் : விடுதலை வாங்க அன்று நாம் தந்த…
விலைகள்தான் கொஞ்சமா…
வேலியே இன்று பயிரை மேய்கின்ற…
நிலைமைதான் மாறுமா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…


Notes : Gandhi Desame Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Vairamuthu. காந்தி தேசமே பாடல் வரிகள்.


ஆண்டவனப் பாக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்மக்கள் என் பக்கம்

Andavanai Paarkanum Song Lyrics in Tamil


ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM

ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல…
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல…
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல…
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல…

ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம்…
அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்…
அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம்தானடா…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஆஹாஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM

ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே…
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே…
ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே…
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே…

ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே…
சொல்லி முடிக்க மொழி இல்லையே…
அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… டேய் ஹஹா…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM


Notes : Andavanai Paarkanum Song Lyrics in Tamil. This Song from Makkal En Pakkam (1987). Song Lyrics penned by Vairamuthu. ஆண்டவனப் பாக்கணும் பாடல் வரிகள்.


கண்ணடிச்சா கல்லெடுப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாசந்திரபோஸ்புதிய பாதை

Kannadicha Kal Edupen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

ஆண் : காசுக்கேத்த குட்டிதான்…
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்…

பெண் : தொட்டுப் பாரு கெட்டிதான்…
இது துட்டுகேத்த ரொட்டிதான்…

குழு : ஷோக்குதான்…
ஆண் : ஹோய்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…
ஆண் : ஆஹ்…
குழு : ஷோக்குதான்…
ஆண் : ஆஹான்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…

ஆண் : ஹேய்… கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

BGM

குழு : ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…
ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…

பெண் : கொஞ்ச வந்த அர்ச்சுனரை…
கொள்ளை அடிப்பேன்…
என்னை குத்தகைக்கு வச்சுகிட்டா…
கோழிஅடிப்பேன்…

ஆண் : பத்து விரல் பட்டதுக்கே…
நித்தம் குளிப்பேன்…
உன்னை கட்டிக்கிட்டா பாவத்தை…
நான் எங்கே தொலைப்பேன்…

பெண் : காக்கா குஞ்சும் மைனா குஞ்சும் காதலிக்காது…
அட என்னைவிட்டா உன்னை கட்ட ஆள் இருக்காது…
ஆண் : ஹேய்… கோயில் காளை சிக்காது…

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

BGM

குழு : ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…
ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்…

ஆண் : கட்டிலிட்டு வச்சதெல்லாம் காமனுக்கு அல்லோ…
நீ கட்டி வெச்ச கட்டு சோறு மாமனுக்கு அல்லோ…

பெண் : மச்சமெல்லாம் வெச்சிருக்கும் சுந்தரியல்லோ…
என் மஞ்சதுல நீ படுத்த மந்திரியல்லோ…

ஆண் : அத்தைகிட்ட ஒட்டிக்கிட்ட சங்கதியல்லோ…
உன்னை வெட்டிவிட்டு எட்டி நின்னா நிம்மதியல்லோ…
பெண் : தின்னு பார்த்தா தேனல்லோ…

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி… ஹஹா…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…

ஆண் : அட காசுக்கேத்த குட்டிதான்…
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்…

பெண் : தொட்டுப் பாரு கெட்டிதான்…
இது துட்டுகேத்த ரொட்டிதான்…

குழு : ஷோக்குதான்…
பெண் : ஹ்ம்ம்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…
ஆண் : ஆஹ்ஹா…
குழு : ஷோக்குதான்…
பெண் : ஹ்ம்ம்…
குழு : ஷேக்கு டான்ஸ்தான்…
ஆண் : ஹஹ்ஹா…

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…

பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…


Notes : Kannadicha Kal Edupen Song Lyrics in Tamil. This Song from Pudhea Paadhai (1989). Song Lyrics penned by Vairamuthu. கண்ணடிச்சா கல்லெடுப்பேன் பாடல் வரிகள்.


நேற்றும் பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & ரணினா ரெட்டிஎன்.ஆர்.ரகுநந்தன்புலிவால்

Netrum Party Song Lyrics in Tamil


ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

ஆண் : தண்ணீர் கற்கள் மோதும்…
ஓசை ஒன்றே போதும்…
கோப்பை தான் என் கோட்டை…
ஹே எங்கும் எப்போதும்…

ஆண் : நெஞ்சை பிய்க்கும் பாடல்…
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்…
காதல் இல்லா காண்டக்ட்…
ஹே போதும் எப்போதும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

BGM

ஆண் : பிளாட்டினத்தில் கட்டில்தான்…
உண்பேன் தங்கதட்டில்தான்…
பாபோ எந்தன் டாய்லெட் ரோலோ…
பட்டில் பட்டில்தான்…

பெண் : நான் குளிக்க மார்ட்டினி…
கொண்டு வந்து கொட்டு நீ…
நானும் நீயும்தானே இங்கே டெட்லி கூட்டணி…

ஆண் : உலகத்தில் உயர்ந்தது தேர்ந்தெடுத்து…
அதில் வசித்திட வசித்திட பிறப்பெடுத்தேன்…

பெண் : உனக்கென்று உயரத்தில் எனை வளர்த்து…
நீ ரசித்திட ருசித்திட உனை அடைந்தேன்…

ஆண் : தேகங்கள் மோதி கண்ணில் மின்னல் வெட்டட்டும்…
இன்னும் கொஞ்சம் மேலே போக வானம் தட்டட்டும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

BGM

ஆண் : நீயோ எந்தன் கைப்பற்ற…
பார்ட்டி ஃபுளோரில் தீப்பற்ற…
பார்க்கும் கண்கள் ஒவ்வொன்றிலும்…
ஜே ஜே ஜெலஸ்ஸி…

பெண் : முத்தம் என்னும் சூப் கொஞ்சம்…
தந்தால் என்னாகும் உன் நெஞ்சம்…
தேகம் மொத்தம் இன்னும் கெஞ்சும்…
அய்யோ பேய் பசி…

ஆண் : பசித்து நீ எடுக்கையில் சுவை இருக்கும்…
உந்தன் அரிசியில் பெண்ணே எந்தன் பெயர் இருக்கும்…

பெண் : பெயர்களின் அவசியம் இனி எதற்கு…
உந்தன் தொலைபேசி எண்ணை மட்டும் கொடு எனக்கு…

ஆண் : நாளும் எண்கள் வேறு…
இங்கே நாளும் பெண்கள் வேறு…
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்…
வேறாய் மாறட்டும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

ஆண் : தண்ணீர் கற்கள் மோதும்…
ஓசை ஒன்றே போதும்…
கோப்பைதான் என் கோட்டை…
ஹே எங்கும் எப்போதும்…

ஆண் : நெஞ்சை பிய்க்கும் பாடல்…
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்…
காதல் இல்லா காண்டக்ட்…
ஹே போதும் எப்போதும்…

{ குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும் …} * (2)

BGM


Notes : Netrum Party Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. நேற்றும் பார்ட்டி பாடல் வரிகள்.


செல்லகிளியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரஞ்சித் & அனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Chella Kiliyo Song Lyrics in Tamil


BGM

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஓ… திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்…
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்…
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்…

ஆண் : நம்ம கட்டில் சூடு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : இப்போ ஆறி போச்சு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : நாம் சிக்கி முக்கி…
கல்லாய் மாறி பற்ற செய்வோமா…

பெண் : என் சோகம் போக…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : என் மோகம் தீர…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : அட ரெட்டை சேவை செய்ய போகும்…
கெட்டிக்காரா கிட்ட வா வா…

ஆண் : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள…
குழு : ஓஒ ஓஓ…
ஆண் : வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள…
பெண் : ஓ… என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்…
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்…
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்…

ஆண் : இனி ஒவ்வொரு இரவு…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : முதல் இரவாய் செய்வோம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : அடி சூரியனுக்கே சுவரை கட்டி…
இரவை நீட்டிப்போம்…

பெண் : இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்…
நாம் தழுவும் போது சிதறும் துளியில்…
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

ஆண் : ஓஓ… ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே ஓமெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

BGM


Notes : Chella Kiliyo Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. செல்லகிளியோ பாடல் வரிகள்.


அடி கதை கேளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜாஇளையராஜாகரிமேடு கருவாயன்

Katha Kelu Song Lyrics in Tamil


ஆண் : அடி கதை கேளு கதை கேளு… ஏ…
கருவாயன் கதை கேளு… ஏ…

BGM

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
கரிமேட்டுக் கருவாயன் கதை போல…
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி…

ஆண் : கட்டுக் கதை இல்லை…
ஒட்டுக் கதை இல்லை…
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு…
வைகை நதிக்கரை ஓரத்துல…
அன்று வாழ்ந்து ஜெயிச்சவன் வரலாறு…

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி… ஆ…

BGM

ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…

ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…
மருத ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை…
சொந்தம் ஒரு ஆள் இல்லை…
பந்தம் அதுதான் இல்லை…
மலையும் மரமும் தவிர யாரும் இல்லை…

ஆண் : தங்கச்சிய பண்னை கற்பழிச்சான்…
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்…
இன்னும் பழி வாங்காது…
கண்ணில் இமை காயாது…
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்…

ஆண் : சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி…
சனங்கெல்லாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி…

ஆண் : அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி…
புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் போலீஸ்…

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…

BGM

ஆண் : தென்னை மரத்துல படுத்திருப்பான்…
ஆனா பூமியில கண்ண வச்சிருப்பான்…
கவட்ட வில்லும் உண்டு…
கையில் ஒரு வில்லுண்டு…
வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான்…

ஆண் : கன்னி கழியாத காளியம்மா…
இந்தக் கருவாயன் மேலதான் காதலம்மா…
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம…
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா…

ஆண் : சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள்…
இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள்…
இன்னும் சொல்லப் போனா…
இளமை வீணா போனா…
கருவாயன் கட்டைக்கு வெறகா போனா…

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…

BGM

ஆண் : நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும்…
அந்தப் பாறை மனசுல நீர் இருக்கும்…
ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும்…
கருவில் இருக்கும் பிள்ளை கையெடுக்கும்…

ஆண் : பாவிப் பயல்கள வேரழிச்சான்…
அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான்…
மானம் பிரதானம்தான்…
நானும் கரிகாலன்தான்…
இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்…

ஆண் : தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி…
தென்பாண்டி மன்னன்தான் வந்தான் உரு மாறி…
அவனை எண்ணிக் கொண்டு…
நெஞ்சில் சோகம் கொண்டு…
வாய்க்காலா போகுது வைகை நதி…

ஆண் : கதை கேளு கதை கேளு…

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல…
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி…

ஆண் : கட்டுக் கதை இல்லை…
ஒட்டுக் கதை இல்லை…
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு…
வைகை நதிக் கர ஓரத்துல…
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு…

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி… ஏ…


Notes : Katha Kelu Song Lyrics in Tamil. This Song from Karimedu Karuvayan (1986). Song Lyrics penned by Vairamuthu. அடி கதை கேளு பாடல் வரிகள்.


சின்னக்குயில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாபூவே பூச்சூடவா

Chinna Kuyil Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : லா லா லாலலா… லா லா லாலலா…

BGM

பெண் : சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குக்கூ குக்கூ கூ கூ… குக்கூ குக்கூ கூ கூ…

பெண் : தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்…
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குக்கூ குக்கூ கூ கூ… குக்கூ குக்கூ கூ கூ…

BGM

பெண் : எங்கும் மணிமேலே தன்னந்தனியா…
கங்கை நதிக்கென்ன கட்டுத்தரியா…
அட வானம் எங்கு போகும் அங்கு நானும் போவேனே…

பெண் : ஏப்பம் விடும் ஓடையை…
இப்போதுதான் பார்க்கிறேன்…
மைனாக்களின் பாஷையை…
இப்போதுதான் கேட்கிறேன்…

பெண் : பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே…
ல ல ல லலலா…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…

குழு : குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…
குக்கூ குக்கூ கூ கூ கூ… கூ கூ கூ…

BGM

பெண் : ஆஹா… இந்த பூமி புத்தம் புதுசு…
பாசம் வந்ததாலே பொங்கும் மனசு…
இனி வாசம் வீசும் பூவில் நானும் வாசம் செய்வேனே…

பெண் : தாவி எங்கும் ஓடினேன்…
தாயின் மடி தேடினேன்…
பூவனங்கள் எங்கிலும் பூஜை செய்ய போகிறேன்…

பெண் : என் சோலையில் நானும் பூவாவேன்…
ல ல ல லலலா…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குழு : குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…
குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…

பெண் : தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்…
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்…

பெண் : சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குழு : குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…
குக்கூ குக்கூ கூ கூ… கூ கூ கூ…


Notes : Chinna Kuyil Paadum Song Lyrics in Tamil. This Song from Poove Poochooda Vaa (1985). Song Lyrics penned by Vairamuthu. சின்னக்குயில் பாடும் பாடல் வரிகள்.


கும்பகோணமே கோணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ். பி. சைலஜாசந்திரபோஸ்சங்கர் குரு

Kumbakonamey Konum Song Lyrics in Tamil


BGM

பெண் : கும்பகோணமே…
குழு : கோணம்…
பெண் : இந்த குமரி சொன்னதே…
குழு : வேதம்…

பெண் : அடி ராமர் விட்டதே…
குழு : பாணம்…
பெண் : இந்த மாமனுக்கு எங்கே…
குழு : காணோம்…

பெண் : கும்பகோணமே கோணம்…
இந்த குமரி சொன்னதே வேதம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்கு எங்கே காணோம்…

பெண் : ஆன்னா ஆவன்னா அயித்த மவன் பேரென்னா…
இன்னா ஈயன்னா இளிச்ச வாயன் ஊரென்னா…
சோனா சோவன்னா சோதிச்சு பாத்தா தப்பென்னா…
கூன்னா கூவன்னா கும்மியடிப்போம் குப்பண்ணா…

பெண் : ஏய்… கும்பகோணமே…
கும்பகோணமே கோணம்…
இந்த குமரி சொன்னதே வேதம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்கு எங்கே காணோம்…

BGM

பெண் : மூக்கு முழி கொண்டவரு…
முட்டைக்கோசு மன்னவரு…
எங்களத்தான் கட்டிக்கிட்டா…
என்ன செய்வார் மன்னவரு…

பெண் : அனுபவ ஞானமுள்ளதா… ஓஓஹோய்…
அதுக்கொரு வீரமுள்ளதா… ஹொ…

பெண் : வெத்திலையோ எங்கிட்டே…
பாக்கு மட்டும் உங்கிட்ட…
புகையிலை எங்கிட்டே…
சுண்ணாம்பு உன்கிட்டே…

பெண் : பொடவக் கட்டும் பொம்பள…
போட்டா செவக்கும்…
அடியே இந்த ஆளுக்கு…
லேட்டா செவக்கும்…

ஆண் : ஆளச் சுத்தும் வண்டுகளே… ஏஏ…
ஏய்என் கால சுத்தும் நண்டுகளே…
மானம் வெட்கம் ரோஷமெல்லாம்…
வாடகைக்கு விட்டவளே… ஹேஹே…

ஆண் : ஆடிக் கொஞ்சம் காட்டட்டுமா…
ஆழம் என்ன பாக்கட்டுமா எப்பிடி எப்பிடி…

ஆண் : கும்பகோணமே கோணம்…
அது குமரிக்கெங்கே காணோம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்குண்டு மானம்…

ஆண் : ஆன்னா ஆவன்னா அயித்த மவளே பேரென்னா…
ஊன்னா ஊவன்னா ஓடு காலிக்கு ஊரென்னா…
லானா லாவன்னா லவுக்கை எல்லாம் பொய்யன்னா…
மேன்னா மெய்ன்னா மெத்த விரிச்சா தப்பென்ன…

BGM

ஆண் : ஆட வந்த அல்லிகளே…
அர்ஜுனனை பாருங்கடி…
கேலி செய்ய வந்தவளே…
தாலி செய்ய வந்தேனடி…

ஆண் : வம்பிழுக்க வந்த பொம்பள நீ…
பொம்பளையா நானும் நம்பல… ஹொஹொ ஹோய்…

ஆண் : சீமைத்துரை காளையடி ஜில்லாவுக்கே தெரியுமடி…
வரிசநாட்டு வேங்கையடி வாழு கொஞ்சம் நீளமடி…

ஆண் : கூடி வந்த பொண்ணுகளா கொழுப்ப பாரு… ஏய்…
மீசை அது பொய்யில்ல இழுத்து பாரு…

ஆண் : கும்பகோணமே…
கும்பகோணமே கோணம்…
அது குமரிக்கெங்கே காணோம்…
அடி ராமர் விட்டதே பாணம்…
இந்த மாமனுக்குண்டு மானம்…

ஆண் : ஆன்னா ஆவன்னா அயித்த மவளே பேரென்னா…
ஊன்னா ஊவன்னா ஓடு காலிக்கு ஊரென்னா…
லானா லாவன்னா லவுக்கை எல்லாம் பொய்யன்னா…
மேன்னா மெய்ன்னா மெத்த விரிச்சா தப்பென்ன…

பெண் : கும்பகோணமே கோணம்…
ஆண் : பாடுங்கடி…
பெண் : அது குமரிக்கெங்கே காணோம்…
ஆண் : ஒடுங்கடி…

பெண் : அடி ராமர் விட்டதே பாணம்…
ஆண் : ஹாங்…
பெண் : இந்த மாமனுக்குண்டு மானம்…
ஆண் : ஹைய்யோ…

பெண் : இந்த மாமனுக்குண்டு மானம்…
இந்த மாமனுக்குண்டு மானம்…
ஆண் : ஒடுங்கடி…


Notes : Kumbakonamey Konum Song Lyrics in Tamil. This Song from Shankar Guru (1987). Song Lyrics penned by Vairamuthu. கும்பகோணமே கோணம் பாடல் வரிகள்.


ரத்த கண்ணீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திராஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Raththa Kanneer Song Lyrics in Tamil


ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர்தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஏன் இந்த கதி ஏன் இந்த விதி…
நொந்தேன் உயிர் நொந்தேன்…
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்…

ஆண் : என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை…
அடி இல்லை…
என் பாவங்களில் நீ பங்கு பெற…
நியாயம் இல்லை…

ஆண் : பாதைதான் காணாமல் பட்டம்தான் விடுகின்றேன்…
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்…
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஊர் பேசியதும் யார் ஏசியதையும்…
நெஞ்சை சுட வில்லை…
நீ துன்பமுற நான் கண்டுவர…
ஜீவன் இல்லை…

ஆண் : என் தண்டனையில் நீ வாடுவது குற்றம்…
என் குற்றம்…
என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை…
சுற்றும் சுற்றும்…

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்…
என் காதல் பொய் இல்லை…
சேற்றோடு பிறந்தாலும்…
தாமரையில் அழுக்கில்லை…
வா பெண்ணே உன்னைவிட்டால் வாழ்வில்லை…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர் தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ளமாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…


Notes : Raththa Kanneer Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. ரத்த கண்ணீர் பாடல் வரிகள்.


மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.என். சுரேந்தர்தேவாஒன்ஸ் மோர்

Malargale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

BGM

ஆண் : நதிகளை மட்டும் அல்ல…
அதன் நுரையையும் காதலித்தேன்…
வெண்ணிலவை மட்டும் அல்ல…
அதன் கரையையும் காதலித்தேன்…

ஆண் : ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன்…
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்…

ஆண் : அந்தி வானத்தின் மேலே…
முகில் போவதை போலே…
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே…

BGM

ஆண் : மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது…
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது…

ஆண் : அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு…
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு…

ஆண் : சுகமானது பூமி…
இதமானது வாழ்கை…
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

BGM


Notes : Malargale Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. மலர்களே பாடல் வரிகள்.