பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.என். சுரேந்தர் | தேவா | ஒன்ஸ் மோர் |
Malargale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…
ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…
ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…
ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
ஆண் : குயில்களே…
—BGM—
ஆண் : நதிகளை மட்டும் அல்ல…
அதன் நுரையையும் காதலித்தேன்…
வெண்ணிலவை மட்டும் அல்ல…
அதன் கரையையும் காதலித்தேன்…
ஆண் : ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன்…
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்…
ஆண் : அந்தி வானத்தின் மேலே…
முகில் போவதை போலே…
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா…
ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…
ஆண் : நதிகளே…
—BGM—
ஆண் : மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது…
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது…
ஆண் : அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு…
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு…
ஆண் : சுகமானது பூமி…
இதமானது வாழ்கை…
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்…
ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…
ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…
ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…
ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
ஆண் : குயில்களே…
—BGM—
Notes : Malargale Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. மலர்களே பாடல் வரிகள்.