Tag Archives: வைரமுத்து

பொங்கும் ஆகாய கங்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & கங்கை அமரன்இளையராஜாஆகாய கங்கை

Pongum Agaya Gangai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

பெண் : பொங்கும் ஆகாயகங்கை. …
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

ஆண் : என் கால்களே சிறகானதே…
சிரிக்கின்ற ஓசை கேட்டு…

பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

BGM

ஆண் : புது ராக ஜாதிகளின் ஊர்வலம்…
இன்று காலை நானே பார்த்தேனே…
அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில்…
இனி நானும் வானம் போவேனே…

பெண் : உன் ஞாபகம் சுக வேதனை…

ஆண் : நீ பேசினால் இசை வாசனை…
இனி நாளும் காதல் சிந்தனை…

பெண் : நீ வந்தால் போதும் நிம்மதி…
ஆண் : உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி…

பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

BGM

ஆண் : ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை…
சொந்த வாசல் தாண்டி வாராதோ…

பெண் : எந்தன் ஊமை பார்வைகளின் பாஷைகள்…
உந்தன் காதல் காதில் கேளாதோ…

ஆண் : என் கண்களில் நடமாடி வா…
பெண் : உந்தன் தூக்கத்தை கலந்தோடவா…

ஆண் : கண்ணன் காமன் தோட்டம் அல்லவா…
பெண் : யார் இல்லை என்று சொன்னது…
ஆண் : வரம் தந்தால் தேவி நல்லது…

பெண் : உன் கால்களே சிறகானதோ…
சிரிக்கின்ற ஓசை கேட்டு…

ஆண் & பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…


Notes : Pongum Agaya Gangai Song Lyrics in Tamil. This Song from Agaya Gangai (1982). Song Lyrics penned by Vairamuthu. பொங்கும் ஆகாய கங்கை பாடல் வரிகள்.


ஒரு காதல் தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத் தாமரை

Oru Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

BGM

ஆண் : பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா…
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா…

பெண் : இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா…
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நான் இல்லையா…

ஆண் : ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது…
பெண் : உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது…
ஆண் : ஒன்றானது…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஆண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
பெண் : கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

BGM

பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ…
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ…

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ…
பூ மகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ…

பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது…
ஆண் : ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது…
பெண் : இயல்பானது ஒரு…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
பெண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
ஆண் : கல்லுரும் காலை வேளையில்…

BGM


Notes : Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. ஒரு காதல் தேவதை பாடல் வரிகள்.


பூவில் வண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாதல் ஓவியம்

Poovil Vandu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம் தம் நம் தனம்…
நம் தம் தனம் தம்த நம் தம்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்த நம்தம்…

BGM

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…

ஆண் : பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…

BGM

ஆண் : ராகம் ஜீவனாகும்…
நெஞ்சின் ஓசை தாளமாகும்…
கீதம் வானம் போகும்…
அந்த மேகம் பாலமாகும்…
தேவி எந்தன் பாடல் கண்டு…
மார்பில் நின்று ஆடும்…

ஆண் : நாதம் ஒன்று போதும்…
எந்தன் ஆயுள் கோடி மாதம்…
தீயில் நின்ற போதும்…
அந்த தீயே வெந்து போகும்…
நானே நாதம்… ம்ம்ம் ஆஅஆ…

ஆண் : தநம்தம் நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்த…
நம்த தம்த நம்த தம்த…
நம்த தம்த நம்தம்…

BGM

ஆண் : வானம் என் விதானம்…
இந்த பூமி சன்னிதானம்…
பாதம் மீது மோதும்…
ஆறு பாடும் சுப்ரபாதம்…
ராகம் மீது தாகம் கொண்டு…
ஆறும் நின்று போகும்…

ஆண் : காற்றின் தேசம் எங்கும்…
எந்தன் கானம் சென்று தங்கும்…
வாழும் யோகம் மேடும்…
எந்தன் ராகம் சென்று ஆடும்…
வாகை சூடும்… ஆஆ…

ஆண் : தநம்த நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்தம்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…

ஆண் : தம்தனம் தம்த நம்தம்…
தம்தனம் தம்த தம் தம்தம்தம்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்தா நம்தம்…


Notes : Poovil Vandu Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. பூவில் வண்டு பாடல் வரிகள்.


நாதம் என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாகாதல் ஓவியம்

Natham En Jeevane Song Lyrics in Tamil


BGM

பெண் : தானம் தம்த தானம் தம்த…
தானம் தம்த தானம்…
பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : ஒலையில் வேறென்ன செய்தி…
தேவனே நான் உந்தன் பாதி…
இந்த பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…

BGM

பெண் : அமுத கானம் நீ தரும் நேரம்…
நதிகள் ஜதிகள் பாடுமே…

BGM

பெண் : விலகிப் போனால் எனது சலங்கை…
விதவை ஆகி போகுமே…

பெண் : கண்களில் மெளனமோ கோவில் தீபமே…
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே…
மார் மீது பூவாகி விழவா…
விழியாகி விடவா…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : இசையை அருந்தும் சாதகப் பறவை…
போல நானும் வாழ்கிறேன்…
உறக்கமில்லை எனினும் கண்ணில்…
கனவு சுமந்து போகிறேன்…

பெண் : தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்…
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்…
வெண்ணீரில் நீராடும் கமலம்…
விலகாது விரகம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…


Notes : Natham En Jeevane Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. நாதம் என் ஜீவனே பாடல் வரிகள்.


காதல் வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிரவீந்திரன்லட்சுமி வந்தாச்சு

Kadhal Vennila Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

BGM

பெண் : பூமியெங்கும் பூ வசந்தம்…
நீ சிரித்தால் தேன் சுரக்கும்…
எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்…

பெண் : காவிரி சோலை நீ தொடும் வேளை…
தேனும் பாலும் தூறல் போடும்…

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

BGM

பெண் : நான் படிக்கும் பாசுரங்கள்…
உன்னடிக்கு பூச்சரங்கள்…
நந்தவனத்தின் மணத்தால் நினைத்தாள்…
பூங்கொடியோடு நீ விளையாடு…
புள்ளி எல்லாம் கோலம் ஆகும்…

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…


Notes : Kadhal Vennila Song Lyrics in Tamil. This Song from Lakshmi Vandhachu (1986). Song Lyrics penned by Vairamuthu. காதல் வெண்ணிலா பாடல் வரிகள்.


மானூத்து மந்தையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Maanooththu Manthaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு…
நாக்கு சொட்ட சமைச்சு…
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா…

BGM

குழு : மேலு காலு வலிச்சா…
வெள்ளப்பூண்டு உரிச்சி…
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா…

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு…
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு…
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு…
குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்…

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு…
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்…

குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு…
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… ஐயோ…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…
ஆண் : ஹோய்…
குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… போடு…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…


Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையில பாடல் வரிகள்.


தென்கிழக்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்ஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

பெண் : தாய் வீட்டுப் பேரும்…
தாய் மாமன் சீரும்…
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா…
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே…
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே…
பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

BGM

ஆண் : செங்காட்டு மண்ணும்…
நம் வீட்டுப் பொண்ணும்…
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா…
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே…
பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே…
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…

BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

ஆண் : உலகம் பொய்தானா…
உறவும் பொய்தானா…
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…

பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்…
குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…

ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி…
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி…
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…


Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்.


தலையைக் குனியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரிஇளையராஜாஒரு ஓடை நதியாகிறது

Thalayai Kuniyum Thamaraye Song Lyrics in Tamil


BGM

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…

BGM

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…

BGM

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…

பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்…
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்…

ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து…
விடியும் வரையில் விருந்து நடத்து…

பெண் : தலையைக் குனியும் தாமரை நான்…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…

BGM

பெண் : காத்திருந்தேன் அன்பே…
இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ…

ஆண் : பூமகள் கன்னங்கள்…
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ…

பெண் : ஆயிரம் நாணங்கள்…
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா…

ஆண் : நீயொரு பொன் வீணை…
அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா…

பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா…

BGM

ஆண் : வேதனை வேலையில் சோதனையா…
பெண் : முதல் முறையா…
ஆண் : இது சரியா…
பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து…

BGM

பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து…

ஆண் : உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி…
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி…

பெண் : இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்…
புதிய அலைகள் கரையை உடைக்கும்…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…

ஆண் : தலையைக் குனியும் தாமரையே…


Notes : Thalayai Kuniyum Thamaraye Song Lyrics in Tamil. This Song from Oru Odai Nadhiyagirathu (1983). Song Lyrics penned by Vairamuthu. தலையைக் குனியும் பாடல் வரிகள்.


கத்தாழங்காட்டு வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Kathaazha Kaattu Vazhi Song Lyrics in Tamil


ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

BGM

{ ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா… } * (2)

ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா…
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா…
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு…
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா…

ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

பெண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

பெண் : அண்ணே போய் வரவா…
அழுது போய் வரவா…
மண்ணே போய் வரவா…
மாமரமே போய் வரவா…

பெண் : அணில்வால் மீச கொண்ட…
அண்ணே ஒன்ன விட்டு…
புலிவால் மீச கொண்ட…
புருஷனோட போய் வரவா…

பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே…
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…


Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழி பாடல் வரிகள்.


ஏகாந்த வேளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபாடும் பறவைகள்

Ekantha Velai Song Lyrics in Tamil


ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : ஹாஆஅ…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : ம்ம்ம்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…

ஆண் : ஆரம்ப பாடம்…
பெண் : நடக்கும்…
ஆண் : ஆனந்த கங்கை…
பெண் : சுரக்கும்…

ஆண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் : ஏகாந்த வேளை…

BGM

ஆண் : கூந்தல் என்பது…
பெண் : இருட்டு…
ஆண் : கண்கள் என்பது…
பெண் : விளக்கு…

ஆண் : உந்தன் புன்னகை…
பெண் : கிழக்கு…
ஆண் : இன்னும் ஏனடி…
பெண் : வழக்கு…

ஆண் : மேகம் வந்து…
பெண் : பாய் விரிக்க…
ஆண் : நீயும் நானும்…
பெண் : சேர்ந்திருக்க…

ஆண் : காமன் அம்புகள்…
பெண் : பாயட்டும்…
ஆண் : காதல் வம்புகள்…
பெண் : ஓயட்டும்…

ஆண் : ராச லீலைகள்…
பெண் : ஆகட்டும்…
ஆண் : விண்ணில் வெண்ணிலா…
பெண் : வேகட்டும்…

பெண் : வா…
ஆண் : மெல்ல வா…
பெண் : பூ…
ஆண் : அல்லவா…
பெண் : நான்…
ஆண் : கிள்ளவா ஹோய்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…

ஆண் : ஆரம்ப பாடம்…
பெண் : நடக்கும்…
ஆண் : ஆனந்த கங்கை…
பெண் : சுரக்கும்…

ஆண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் : ஏகாந்த வேளை…

BGM

ஆண் : நேற்று ராத்திரி…
பெண் : மலர்ந்தேன்…
ஆண் : நீல ஆற்றிலே…
பெண் : நனைந்தேன்…

ஆண் : ஈர ஆடைகள்…
பெண் : களைந்தேன்…
ஆண் : பூவில் ஆடைகள்…
பெண் : புனைந்தேன்…

ஆண் : வண்ண பூக்களும்…
பெண் : வெடிக்க…
ஆண் : பூவில் வண்டு தேன்…
பெண் : குடிக்க…

ஆண் : தங்கம் போன்றது…
பெண் : அங்கங்கள்…
ஆண் : எங்கு வேண்டுமோ…
பெண் : தங்குங்கள்…

ஆண் : காமன் யாத்திரை…
பெண் : செல்லுங்கள்…
ஆண் : காலை வந்ததும்…
பெண் : சொல்லுங்கள்…

பெண் : நம்…
ஆண் : நெஞ்சங்கள்…
பெண் : பூ…
ஆண் : மஞ்சங்கள்…
பெண் : தேன்…
ஆண் : சிந்துங்கள் ஹோ…

பெண் : ஏகாந்த வேளை…
ஆண் : இனிக்கும்…
பெண் : இன்பத்தில் வாசல்…
ஆண் : திறக்கும்…

பெண் : ஆரம்ப பாடம்…
ஆண் : நடக்கும்…
பெண் : ஆனந்த கங்கை…
ஆண் : சுரக்கும்…

பெண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

பெண் : ஏகாந்த வேளை…
ஆண் : இனிக்கும்…

ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் & பெண் : ஏகாந்த வேளை…


Notes : Ekantha Velai Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. ஏகாந்த வேளை பாடல் வரிகள்.