பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி | இளையராஜா | காதல் ஓவியம் |
Natham En Jeevane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தானம் தம்த தானம் தம்த…
தானம் தம்த தானம்…
பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…
பெண் : ஒலையில் வேறென்ன செய்தி…
தேவனே நான் உந்தன் பாதி…
இந்த பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…
பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…
—BGM—
பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…
பெண் : நாதம் என் ஜீவனே…
—BGM—
பெண் : அமுத கானம் நீ தரும் நேரம்…
நதிகள் ஜதிகள் பாடுமே…
—BGM—
பெண் : விலகிப் போனால் எனது சலங்கை…
விதவை ஆகி போகுமே…
பெண் : கண்களில் மெளனமோ கோவில் தீபமே…
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே…
மார் மீது பூவாகி விழவா…
விழியாகி விடவா…
பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…
—BGM—
பெண் : இசையை அருந்தும் சாதகப் பறவை…
போல நானும் வாழ்கிறேன்…
உறக்கமில்லை எனினும் கண்ணில்…
கனவு சுமந்து போகிறேன்…
பெண் : தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்…
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்…
வெண்ணீரில் நீராடும் கமலம்…
விலகாது விரகம்…
பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…
பெண் : நாதம் என் ஜீவனே…
Notes : Natham En Jeevane Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. நாதம் என் ஜீவனே பாடல் வரிகள்.