பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி | இளையராஜா | ஒரு ஓடை நதியாகிறது |
Thalayai Kuniyum Thamaraye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
—BGM—
ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…
—BGM—
ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…
பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்…
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்…
ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து…
விடியும் வரையில் விருந்து நடத்து…
பெண் : தலையைக் குனியும் தாமரை நான்…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
—BGM—
பெண் : காத்திருந்தேன் அன்பே…
இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ…
ஆண் : பூமகள் கன்னங்கள்…
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ…
பெண் : ஆயிரம் நாணங்கள்…
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா…
ஆண் : நீயொரு பொன் வீணை…
அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா…
பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா…
—BGM—
ஆண் : வேதனை வேலையில் சோதனையா…
பெண் : முதல் முறையா…
ஆண் : இது சரியா…
பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து…
—BGM—
பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து…
ஆண் : உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி…
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி…
பெண் : இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்…
புதிய அலைகள் கரையை உடைக்கும்…
ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
ஆண் : தலையைக் குனியும் தாமரையே…
Notes : Thalayai Kuniyum Thamaraye Song Lyrics in Tamil. This Song from Oru Odai Nadhiyagirathu (1983). Song Lyrics penned by Vairamuthu. தலையைக் குனியும் பாடல் வரிகள்.