பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி | ஏ.ஆர்.ரகுமான் | கிழக்குச் சீமையிலே |
Kathaazha Kaattu Vazhi Song Lyrics in Tamil
ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…
—BGM—
{ ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா… } * (2)
ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
—BGM—
ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா…
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா…
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு…
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா…
ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
பெண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
—BGM—
பெண் : அண்ணே போய் வரவா…
அழுது போய் வரவா…
மண்ணே போய் வரவா…
மாமரமே போய் வரவா…
பெண் : அணில்வால் மீச கொண்ட…
அண்ணே ஒன்ன விட்டு…
புலிவால் மீச கொண்ட…
புருஷனோட போய் வரவா…
பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே…
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…
Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழி பாடல் வரிகள்.