ஆத்தங்கரை மரமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & மனோஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Aathangara Marame Song Lyrics in Tamil


ஆண் : அத்தைக்கு பிறந்தவளே…
ஆளாகி நின்றவளே…
பருவம் சுமந்து வரும்…
பாவாடை தாமரையே…

ஆண் : தட்டாம்பூச்சி பிடித்தவள்…
தாவணிக்கு வந்ததெப்போ…
மூன்றாம் பிறையே…
நீ முழு நிலவா ஆனதெப்போ…
மெளனத்தில் நீ இருந்தா…
யாரை தான் கேட்பதெப்போ… ஓ…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

ஆண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

பெண் : மாமனே உன்னை தாங்காம…
மத்தியில் சோறும் பொங்காம…
பாவி நான் பருத்தி மாரா போனேனே…

பெண் : காகம் தான் கத்தி போனாலும்…
கதவு தான் சத்தம் போட்டாலும்…
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே…

பெண் : ஒத்தையில் ஓடைக்கரையோரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
அந்த இரயில் தூரம் போனதும்…
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே…

பெண் : முத்து மாமா என்னை விட்டு போகாதே…
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா…
தங்கமே தளும்பும் சுகந்தானா…
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா…

ஆண் : தொட்ட பூ எல்லாம் சுகந்தானா…
தொடாத பூவும் சுகந்தானா…
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா…

ஆண் : அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அன்னமே உன்னையும் என்னையும்…
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…

ஆண் : மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு…
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…


Notes : Aathangara Marame Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தங்கரை மரமே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top