பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம் | வித்யாசாகர் | கர்ணா |
Malare Mounama Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…
பெண் : மலர்கள்… பேசுமா…
பேசினால் ஓயுமா… அன்பே…
ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…
—BGM—
ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ…
ஹான்…
பெண் : மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ… ஓ…
ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே…
பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே…
ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே…
பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே…
ஆண் : விரல்கள் தொடவா…
பெண் : விருந்தை பெறவா…
ஆண் : மார்போடு கண்கள் மூடவா…
ஆண் : மலரே… மௌனமா…
பெண் : மலர்கள்… பேசுமா…
—BGM—
பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்…
ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்…
பெண் : காற்றே… என்னைக் கில்லாதிரு…
ஆண் : பூவே… என்னைத் தள்ளாதிரு…
பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு…
ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு…
பெண் : உறவே… உறவே…
ஆண் : உயிரின் உயிரே…
பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே…
ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…
பெண் : மலர்கள்… பேசுமா…
பேசினால் ஓயுமா… அன்பே…
ஆண் : மலரே…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : மௌனமா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : மௌனமே…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : வேதமா…
பெண் : ஆ… ஆ…
Notes : Malare Mounama Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரே மௌனமா பாடல் வரிகள்.