பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | இளையராஜா | இளையராஜா | கரிமேடு கருவாயன் |
Katha Kelu Song Lyrics in Tamil
ஆண் : அடி கதை கேளு கதை கேளு… ஏ…
கருவாயன் கதை கேளு… ஏ…
—BGM—
ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
கரிமேட்டுக் கருவாயன் கதை போல…
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி…
ஆண் : கட்டுக் கதை இல்லை…
ஒட்டுக் கதை இல்லை…
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு…
வைகை நதிக்கரை ஓரத்துல…
அன்று வாழ்ந்து ஜெயிச்சவன் வரலாறு…
ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி… ஆ…
—BGM—
ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…
ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…
மருத ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை…
சொந்தம் ஒரு ஆள் இல்லை…
பந்தம் அதுதான் இல்லை…
மலையும் மரமும் தவிர யாரும் இல்லை…
ஆண் : தங்கச்சிய பண்னை கற்பழிச்சான்…
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்…
இன்னும் பழி வாங்காது…
கண்ணில் இமை காயாது…
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்…
ஆண் : சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி…
சனங்கெல்லாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி…
ஆண் : அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி…
புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் போலீஸ்…
ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
—BGM—
ஆண் : தென்னை மரத்துல படுத்திருப்பான்…
ஆனா பூமியில கண்ண வச்சிருப்பான்…
கவட்ட வில்லும் உண்டு…
கையில் ஒரு வில்லுண்டு…
வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான்…
ஆண் : கன்னி கழியாத காளியம்மா…
இந்தக் கருவாயன் மேலதான் காதலம்மா…
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம…
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா…
ஆண் : சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள்…
இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள்…
இன்னும் சொல்லப் போனா…
இளமை வீணா போனா…
கருவாயன் கட்டைக்கு வெறகா போனா…
ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
—BGM—
ஆண் : நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும்…
அந்தப் பாறை மனசுல நீர் இருக்கும்…
ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும்…
கருவில் இருக்கும் பிள்ளை கையெடுக்கும்…
ஆண் : பாவிப் பயல்கள வேரழிச்சான்…
அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான்…
மானம் பிரதானம்தான்…
நானும் கரிகாலன்தான்…
இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்…
ஆண் : தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி…
தென்பாண்டி மன்னன்தான் வந்தான் உரு மாறி…
அவனை எண்ணிக் கொண்டு…
நெஞ்சில் சோகம் கொண்டு…
வாய்க்காலா போகுது வைகை நதி…
ஆண் : கதை கேளு கதை கேளு…
ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி…
அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல…
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி…
ஆண் : கட்டுக் கதை இல்லை…
ஒட்டுக் கதை இல்லை…
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு…
வைகை நதிக் கர ஓரத்துல…
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு…
ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி… ஏ…
Notes : Katha Kelu Song Lyrics in Tamil. This Song from Karimedu Karuvayan (1986). Song Lyrics penned by Vairamuthu. அடி கதை கேளு பாடல் வரிகள்.