பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | மாவீரன் (1986) |
Amma Amma Song Lyrics in Tamil
ஆண் : அம்மா… அம்மா…
—BGM—
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…
ஆண் : என் அம்மா நீயில்லையேல் தாயில்லையே…
தாயில்லையேல் சேயில்லையே…
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…
—BGM—
ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே…
அம்பிகையே நீலியே சூலியே…
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே…
அம்பிகையே நீலியே சூலியே…
ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ…
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ…
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ…
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ…
ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ…
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ…
கோயில் கொண்ட நீயும் என்ன கல்லில் செய்த ரூபமோ…
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…
ஆண் : என் அம்மா நீயில்லையேல் தாயில்லையே…
தாயில்லையேல் சேயில்லையே…
—BGM—
ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி…
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி…
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா…
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா…
ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்…
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்…
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ…
இளைய மனது துடிக்கும் போது விழிகள் மூடிக் கிடக்குமோ…
—BGM—
Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Vaali. அம்மா அம்மா பாடல் வரிகள்.