அம்மா அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாமாவீரன் (1986)

Amma Amma Song Lyrics in Tamil


ஆண் : அம்மா… அம்மா…

BGM

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

ஆண் : என் அம்மா நீயில்லையேல் தாயில்லையே…
தாயில்லையேல் சேயில்லையே…

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

BGM

ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே…
அம்பிகையே நீலியே சூலியே…
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே…
அம்பிகையே நீலியே சூலியே…

ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ…
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ…
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ…
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ…

ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ…
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ…
கோயில் கொண்ட நீயும் என்ன கல்லில் செய்த ரூபமோ…

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

ஆண் : என் அம்மா நீயில்லையேல் தாயில்லையே…
தாயில்லையேல் சேயில்லையே…

BGM

ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி…
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி…
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா…
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா…

ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்…
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்…
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ…
இளைய மனது துடிக்கும் போது விழிகள் மூடிக் கிடக்குமோ…

BGM


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Vaali. அம்மா அம்மா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top