Tag Archives: தாமரை

அர்ஜுனா அர்ஜுனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & சுசித்ராதமன் எஸ்சேட்டை

Arjuna Arjuna Song Lyrics in Tamil


BGM

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…

BGM

பெண் : அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்…
ஏன் மௌனம் கொண்டாய்… ஓ…
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்…
விழி முடிக்கொண்டாய்…

BGM

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

BGM

ஆண் : தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்…
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்…
ஏஹே… தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்…
முத்தாய் மழை இடை வந்தே விழும்…
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே…

பெண் : தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்…
நீ எங்கே போனாய்… ஓ…
சரிகிறேன் தானாய் தாங்க வா தூணாய்…
என் வாழ்வாய் ஆனாய்…

BGM

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…


Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Thamarai. அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்.


வெள்ளையாய் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா & சுஜாதா மோகன்தேவாசொக்கத்தங்கம்

Vellayai Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

பெண் : முல்லை பூவா நீ சிரிக்கணும்…
எந்தன் சோகம் நான் மறக்கணும்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வேரு விட்ட ஆலமரம்…
நிழலில் சேருகிற பாக்கியம்தான்…
கொடுத்த என்றும் என்றும் நான் மறவேன்…

ஆண் : நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும்…
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்…

பெண் : உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை…
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்…

ஆண் : உள்ளம் துள்ளும் பூபாலத்தை…
ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…

பெண் : தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

ஆண் : உந்தன் சோகம் நீ மறந்திட…
முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…


Notes : Vellayai Manam Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Thamarai. வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்.


ஓ முகலாய் முகலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அரசாட்சி

O Muhalai Muhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : ஓஓ… என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

BGM

ஆண் : தினசரி ராசி பலனும்…
இந்த தேதியில் காதல் வருமே…
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை…
இருந்துமே காதல் வந்துவிடுமே…

பெண் : கை ரேகைகள் பார்த்தேன்…
அதில் காதல் ரேகை இல்லை…
ஆனாலும் பூத்த இந்த காதல் செய்யும் தொல்லை…

ஆண் : கண் சிமிட்டும் நேரத்திலே…
மின்னலென தோன்றும் தோன்றும்…

பெண் : கற்கண்டாய் இனிகிறதே…
இன்றும் இது வேண்டும் வேண்டும்…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

BGM

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

குழு : இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா…

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

ஆண் : லை லை லை லை லை லைல…
லை லை லை லை லை லைல…

BGM

ஆண் : கடலினில் மூழ்கும் கடுகாய்…
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்…
இதை எவரேனும் பார்க்கும் முன்பே…
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்…

பெண் : கை குழந்தை போலே…
இந்த காதல் உயிரை எடுக்கும்…
எப்பொழுதும் சிணுங்கி…
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்…

ஆண் : தனிமையிலே தனக்குள்ளே பேசிடவே…
தோன்றும் தோன்றும்…
பிறர் எதிரில் மௌனத்திலே மூழ்கிடவே…
தோன்றும் தோன்றும்…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : அஹா என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

குழு : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…


Notes : O Muhalai Muhalai Song Lyrics in Tamil. This Song from Arasatchi (2004). Song Lyrics penned by Thamarai. ஓ முகலாய் முகலாய் பாடல் வரிகள்.


காதல் கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Kadhal Konjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

ஆண் : அலுங்காமல் உனை அள்ளி…
தொடுவானம் வரை செல்லுவேன்…
விடிந்தாலும் விடியாத பொன் காலையை…
காண காத்திருப்பேன்… ஓஹோஹோ…

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

BGM

ஆண் : எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ…
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ…
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ…
என் துணிச்சலின் விரல் தொட எனை கிள்ளுமோ…

ஆண் : அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்…
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்…

ஆண் : காதல் கொஞ்சம்…
குழு : காதல் கொஞ்சம்…
ஆண் : காற்று கொஞ்சம்…
குழு : காற்று கொஞ்சம்…
ஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…

ஆண் : தூரம் எல்லாம்…
குழு : தூரம் எல்லாம்…
ஆண் : தூரம் இல்லை…
குழு : தூரம் இல்லை…
ஆண் : தூவானமாய் தூவும் மழை…

BGM

ஆண் : கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்…
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே…
எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்…
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே…

ஆண் : தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு…
தோள் சேர்த்து நடப்பேனே…
என் தூரம் கடப்பேனே…

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…

ஆண் : தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

ஆண் : அலுங்காமல் உனை அள்ளி…
தொடுவானம் வரை செல்லுவேன்…
விடிந்தாலும் விடியாத பொன் காலையை…
காண காத்திருப்பேன்… ஓஹோ ஹோ…

ஆண் : லாலா லாலா… லாலா லாலா…
லாலா லாலா… லாலா லாலா…
லாலா லாலா… லாலா லாலா…

BGM

குழு : காதல் கொஞ்சம்…
காற்று கொஞ்சம்…
காதல் கொஞ்சம்…
கொஞ்சம் கொஞ்சம்…


Notes : Kadhal Konjam Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. காதல் கொஞ்சம் பாடல் வரிகள்.


ஒரு ஊரில் அழகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Oru Ooril Song Lyrics in Tamil


BGM

குழு : ஷி இஸ் எ பான்டஸி…
ஷான நான் நாநா ஓ ஹோ…
ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி…
ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ நோ..
.
குழு : ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி…
ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ…
பில்ஸ் யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி…
வோகு வோகு யேகி யே ஹே…

BGM

ஆண் : லா லாலா லாலா லா லா லாலா…
லா லா லா லாலா லா லா லாலா லா லா லாலா…

BGM

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே…
பல வருட பரிட்சையம் போலிருக்கும்…
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

BGM

ஆண் : மரகத சோம்பல் முறிப்பாளே…
புல்வெளி போலே சிலிர்ப்பாளே…
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே…
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே…

ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே…
சிறு செடிகளும் நடலாம்…

ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே…
குழு : அழகழகாய்…
ஆண் : சிறு செடிகளும் நடலாம்…
குழு : விதவிதமாய்…

ஆண் : ஏதோ ஏதோ தனித்துவம்…
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே…

ஆண் : ஒரு ஊரில் அழகே அழகே…

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே… ஹே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

BGM

ஆண் : மகரந்தம் தாங்கும் மலர் போலே…
தனியொரு வாசம் அவள் மேலே…
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்…
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்…

ஆண் : அவள் கடந்திடும் போது…
தலை அனிச்சையாய் திரும்பும்…

ஆண் : அவள் கடந்திடும் போது…
குழு : நிச்சயமாய்…
ஆண் : தலை அனிச்சையாய் திரும்பும்…
குழு : அவள் புறமாய்…

ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல…
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே…

BGM

குழு : நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி…
ஷான நான் நாநா…

ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே…
குழு : பார்க்கையிலே…
ஆண் : பல வருட பரிட்சையம் போலிருக்கும்…
குழு : போலிருக்கும்…

ஆண் : எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…


Notes : Oru Ooril Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒரு ஊரில் அழகே பாடல் வரிகள்.


எங்கே என் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைடாக்டர். பர்ன், கிரிஷ் & பிரசாந்தினிவிஜய் எபினேசர்கண்டேன்

Enge En Idhayam Song Lyrics in Tamil


ஆண் : உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா… ஏ ஏஹே ஹே…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

ஆண் : உன்னைக் கண்டேனே…

ஆண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து…
நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா…

ஆண் : என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும்…
திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது…
உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே…

BGM

ஆண் : காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை…
தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை…

பெண் : வாய் அசைத்து பார்க்கிறேன்…
வார்த்தைகளில் உன் மொழி…
உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி…

ஆண் : கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை…
புயலாகி உன்னை நான் அடைவேன்…

ஆண் : நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன்…
ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

குழு : உனைக் கண்டேனே…

பெண் : ஓ… இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

ஆண் : ஹோ… உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே ஆஹா…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

BGM

பெண் : காற்று வரம் வாங்கினேன்…
மூங்கில் வழி நீங்கினேன்…
சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்…

ஆண் : காத்திருந்த நாட்களில் காதல் ஒரு ஆறுதல்…
காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்…

ஆண் : பிழை சேர்ந்த போதிலும்…
குறை என்ற போதிலும்…
உனக்காகதான் அதை செய்தேன்…

பெண் : இனி என்னை பிரியாதே ஒரு நாளும்…
பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

பெண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : உன்னைக் கண்டேனே… கண்டேனே…
என்னைத் தந்தேனே… தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…

ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே… பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக… ஆக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா…


Notes : Enge En Idhayam Song Lyrics in Tamil. This Song from Kandaen (2011). Song Lyrics penned by Thamarai. எங்கே என் இதயம் பாடல் வரிகள்.


மலர்களே மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாபுதுக்கோட்டையிலிருந்து சரவணன்

Malargale Malargale Song Lyrics in Tamil


BGM

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

பெண் : தென்றல் தோழனை அழைத்து வந்து…
தினம் விருந்து கொடுத்து விட்டு…
வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு…
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு…

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

BGM

பெண் : ஆடைகள் சுமை தாண்டி…
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்…
யார் ஏனும் பார்பார்கள்…
என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்…

பெண் : குழந்தை என மீண்டும் மாறும் ஆசை…
எல்லோர்க்கும் இருக்கிறதே…
சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்…
என் உள்ளம் சொல்கிறதே…

பெண் : அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே…
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே…
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே…
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி…

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

BGM

பெண் : நீரோடு ஒரு காதல்…
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்…
ஆகாயம் என்னை பார்க்க…
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்…

பெண் : புதிய பல பறவை கூட்டம்…
வானில் பறந்து போகிறதே…
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா…
என்றேதான் அழைக்கிறதே…

பெண் : முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே…
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே…
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே…
காலம் நேரம் கடந்த ஞான நிலை…

பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

BGM


Notes : Malargale Malargale Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Thamarai. மலர்களே மலர்களே பாடல் வரிகள்.


தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

BGM

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

BGM

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.


கேட்டா கொடுக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசின்மயி, கங்கா சித்தராசு, ஜெஸ்ஸி கிப்ட் & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Ketta Kodukkira Boomi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…
கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…

ஆண் : கையில கத்தி இருக்கும்…
மீச சுத்தி இருக்கும்…
பெரிய நெத்தி இருக்கும்…
கோபம் அப்படி இருக்கும்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…

ஆண் : சாமி சாமி சாமிடா…
வெள்ளை குதிரை ஏறி வரும் நம்ம குல சாமிடா…
காமி காமி காமிடா…
நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமிடா…

ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…

BGM

ஆண் : உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்…
அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்…

பெண் : நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்…
அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன்…

பெண் : எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு…
அட யாருக்கு யார தான் புடிச்சிருக்கு…
இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு…
இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு…

குழு : மணக்க மணக்க பூ தாரா எடுத்து எடுத்து வருவோம்…
கணக்கு வழக்கு பார்க்காம தடுக்கு துள்ளி தருவோம்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…

BGM

ஆண் : பத்து மைல் தூரத்துல நீ வருவ…
இந்த பக்தனோட மனசு எல்லாம் தீ பிடிக்கும்…

பெண் : முத்தம் கொடு தூரத்துல நீ இருப்ப…
அந்த சூட்டிலே மனசெல்லாம் குளிர் எடுக்கும்…

பெண் : ஆசபட்ட நாயகன அடைஞ்சாலே…
அவ ஆறடி சேலையில முடிஞ்சாலே…
அடங்காத காளைக்கு கயிறாக…
ஒரு மயில் தோகை வாச்சிருக்கு வகையாக…

குழு : சாமி கட்டு பறி போகும்…
சமையல் கட்டு பறி போகும்…
வாச கோலம் கை மாறும்…
வாரிசு ஒன்னு உருவாகும்…

ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…
கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…

ஆண் : கையில கத்தி இருக்கும்…
மீச சுத்தி இருக்கும்…
பெரிய நெத்தி இருக்கும்…
கோபம் அப்படி இருக்கும்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…

BGM


Notes : Ketta Kodukkira Boomi Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Thamarai. கேட்டா கொடுக்கிற பாடல் வரிகள்.


ஓ சுனந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன், கரோலின், மேகா, நிவாஸ், ராகுல் நம்பியார், சின்மயி, ஜூரியன் & டேனியல்ஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Oh Sunanda Song Lyrics in Tamil


ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்… யே யே யே…

BGM

ஆண் : மழை விழுகின்ற பொழுதினிலே…
மயில் நடனங்கள் புாிகின்றதே…
பனி துளிகளின் சுமைகளிலே…
மலா் ஒரு புறம் சாிகிறதே…

ஆண் : நேற்று நான் வேறொரு ஆடவன்…
இன்று நான் வெண்பனி ஆனவன்…
தேய்பிறை நாட்களும் போனதே…
வான் நிலா பௌா்ணமி ஆனதே…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…

BGM

ஆண் : துயில் கலைந்திடும் விழிகளிலே…
புது தினங்களின் கனவுகளே…
நவ மணிகளின் நடுவினிலே…
தனி மரகத பவளங்களே…

ஆண் : மின்மினி பூச்சிகள் கூடியே…
பேசுதே நித்தமும் வம்புகள்…
யாா் இவன் அன்னியன் ஆயினும்…
பெண் மனம் காட்டிடும் அம்புகள்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்… யே யே யே…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM


Notes : Oh Sunanda Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. ஓ சுனந்தா பாடல் வரிகள்.