பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | பாம்பே ஜெயஸ்ரீ | யுவன் ஷங்கர் ராஜா | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் |
Malargale Malargale Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
பெண் : தென்றல் தோழனை அழைத்து வந்து…
தினம் விருந்து கொடுத்து விட்டு…
வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு…
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு…
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
—BGM—
பெண் : ஆடைகள் சுமை தாண்டி…
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்…
யார் ஏனும் பார்பார்கள்…
என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்…
பெண் : குழந்தை என மீண்டும் மாறும் ஆசை…
எல்லோர்க்கும் இருக்கிறதே…
சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்…
என் உள்ளம் சொல்கிறதே…
பெண் : அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே…
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே…
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே…
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி…
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
—BGM—
பெண் : நீரோடு ஒரு காதல்…
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்…
ஆகாயம் என்னை பார்க்க…
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்…
பெண் : புதிய பல பறவை கூட்டம்…
வானில் பறந்து போகிறதே…
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா…
என்றேதான் அழைக்கிறதே…
பெண் : முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே…
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே…
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே…
காலம் நேரம் கடந்த ஞான நிலை…
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
—BGM—
Notes : Malargale Malargale Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Thamarai. மலர்களே மலர்களே பாடல் வரிகள்.