Tag Archives: ஸ்ரீநிஷா ஜெயசீலன்

தூரிடாதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகமது ஷியாம்சாம் விஷால் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்செபாஸ்டின் ரோஜாரியோடிக் டாக்

Thooridatho Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாகமே தூபம் போடுமே…
கண்ணால் கேட்டேன் தேவை ஆயிரம்…
மோகமே காதலின் ஆறாம் அறிவாய்…
பார்வையால் உன்னை நான் வினவ…

ஆண் : நாள் எல்லாம் நினைவிலே…
தள்ளாடும் ஆசை நீளுமே…
ஆளில்லா ஊரிலே உன் ஆடைகள்…
யாவும் உளருமே…

ஆண் : பாதி நேரம் விழியால் தொட…
போக போக விரலால் தொடர…

ஆண் : தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…

ஆண் : வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…

BGM

பெண் : அடைந்திடவே நாள் எங்குமே இரவில்…
அருகருகே நாம் தூங்குவோம் தனியே…
உறவெனதே நீ பார்க்கிறாய் எனையே…
உயிரெனவே நான் கோர்க்கிறேன் உனையே…

பெண் : இதுதான் பெண் நாணமோ…
எனை கேளாமல் போராடுதே…
இனி நான் கண் மூடவோ…
வழி தவறுமோ எண்ணமே…

பெண் : காதலே நீ மெதுவாய் தொடு…
தேகமெங்கும் மெதுவாய் படர…

பெண் : தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…

பெண் : வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…

BGM


Notes : Thooridatho Song Lyrics in Tamil. This Song from Tik Tok (2024). Song Lyrics penned by Ahamed Shyam. தூரிடாதோ பாடல் வரிகள்.


ஹே டோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆதித்யா ஆர் கே, ஸ்ரீநிஷா ஜெயசீலன் & ஜெய்ஜெய்சரிகம தமிழ்

Hey Dolly Song Lyrics in Tamil


BGM

ஆண் : அலுபா அலுபா என்ன மென்னுதான் கொன்னாயே…
உன்னாலதான் என்னென்னவோ ஆனேன்…

ஆண் : அலும்பா அலும்பா கண்டுக்காமத்தான் போராளே…
கட்டம் கட்டி உன்ன கட்டுவேன் பேபி…

ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற…
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற…
கொரியன் ஹார்ட்ட போல குட்டியாக்குற டாலி…

ஆண் : சிக்கி முக்கி நான் விக்கி நிக்கிறேன்…
தட்டி முட்டி நான் உன்னில் சிக்குறேன்…
அட்டி போட்டு நான் எட்டி பாக்குறேன் டாலி…

ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா…
ஊரே காலி டாலி…
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா…
லைப்பே ஜாலி டாலி…

ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில தாரேன் தாலி டாலி…
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா நீதான் ஹோலி டாலி…

BGM

ஆண் : மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே…
திரும்ப திரும்ப ரசிக்கிறேன் அன்பே…
மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே…
நெருங்க நெருங்க விரும்புறேன் அன்பே…

பெண் : மழையினில் ரசிக்கிறேன்…
துளியினில் இவளினில் ஆசை…
குளிரினில் அருகில் வா…
அணைகட்டும் இமைகளில் உந்தன் மீசை…

பெண் : விதிமுறை விளக்கியே விரல்களில் நடத்திடு லீலை…
விரும்பியே கொடுக்கிறேன் நான் மனதை…

பெண் : இறுக்கம் நெருக்ககும் கூடனுமே… ஓ…
நெருங்க விழிகளும் மூடனுமே… ஓ…
தொலச்ச என்ன ஒன்னு தேடனுமே…
மீண்டும் காதல் செய்யனுமே… ஓஓ…

ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற…
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற…
கொரியன் ஹார்ட்ட போல குட்டியாக்குற டாலி…

ஆண் : சிக்கி முக்கி நான் விக்கி நிக்கிறேன்…
தட்டி முட்டி நான் உன்னில் சிக்குறேன்…
அட்டி போட்டு நான் எட்டி பாக்குறேன் டாலி…

ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா…
ஊரே காலி டாலி…
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா…
லைப்பே ஜாலி டாலி…

ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில தாரேன் தாலி டாலி…
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா நீதான் ஹோலி டாலி…

BGM


Notes : Hey Dolly Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. ஹே டோலி பாடல் வரிகள்.


Unne Nenachaen Song Lyrics in Tamil

உன்னை நெனச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம்

Unne Nenachaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
ஓ… என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

ஆண் : நான் போகும் வழியெல்லாம் நீதானடி…
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ…
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி…
என் உயிருக்கு உயிரான நீ…

ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே…

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

BGM

ஆண் : உனக்காக காத்திருப்பேனே…
எனைத் தேடி வருவாயா…
உனைச் சேர ஏங்குது மனசு…
இடம் ஒன்று தருவாயா…

பெண் : உனக்காக காத்திருப்பேனே…
எனைத் தேடி வருவாயா…
உனைச் சேர ஏங்குது மனசு…
இடம் ஒன்று தருவாயா…

ஆண் : இந்த கணம் மனம் தினம்…
உன்னை நினைத்துடுதே உன் வாசம்…

பெண் : மனம் திரும்பியும்…
எனை விட்டு விலகியதேனோ…

ஆண் : மனசுக்குள்ள…
பெண் : மனசுக்குள்ள…
ஆண் : நீதான் புள்ள…

{ ஆண் & பெண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே… } * (2)

BGM

{ ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே… } * (2)

பெண் : உன் கூடவே…

ஆண் : இது வழிச்சாலும் என்னை செதைச்சாலும்…
நீதான் புள்ள நீதான் புள்ள…
நீதான் புள்ள நீதான் புள்ள…
என் நெஞ்சுக்குள்ள…


Notes : Unne Nenachaen Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by Stephen Zechariah. உன்னை நெனச்சேன் பாடல் வரிகள்.


கண்ணோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம் 2

Kannoram Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ…
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ…
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

ஆண் : நான் போகின்ற வழியெல்லாம்…
நீ அல்லவா…
உயிர் சுமக்கின்ற காதலும்…
உனது அல்லவா…

பெண் : உன் பிழை தாண்டி…
நான் உன்னை நேசிக்கவா…
இல்லை நீ இன்றி…
நான் வாழ வழி தேடவா…

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…

BGM

ஆண் : ஓ… நம் காதல் பாவம் என்றால்…
மீண்டும் மீண்டும் செய்வேனோ…
நீ இன்றி மண்ணில் வாழ…
இன்றே சாவேனோ…

பெண் : என் இதய செல்லில் கூட…
அன்பே உந்தன் பெயர்தானோ…
ஆயிரம் ஜென்மம் சேரும்…
காதல் நீதானோ…

ஆண் : உன் மூச்சுக் காற்றினை…
நான் தொழுதிடவா…

பெண் : என் காதல் முழுமையும்…
வாடகை விடவா…

ஆண் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே…
பெண் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே…

ஆண் : நான் உனதில்லை என்றால் இறக்கவா…
உயிரே உனதால் நான் பிறக்கவா…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில் விழிகளில்தானோ…
தானோ தானோ… தானோ தானோ…

BGM

ஆண் : சொல்லாத காதல் எல்லாம்…
கல்லறை இல்லா சேரும்…
நீ விட்டு போன தூரம்…
எல்லாம் தீயா யாமோ…

பெண் : உன்னாலே உள்ளுக்குள்ளே…
கண்ணீரோடு பேராட்டம்…
ஆறாத உன் நினப்பு…
என்னை கொல்லட்டும்…

ஆண் : நீ நெஞ்சின் ஓரத்தில்…
வலிக்கின்ற பாதியா…

பெண் : உன் முதல் கவிதையில்…
நான் இனி இல்லையா…

ஆண் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ…
பெண் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ…

பெண் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா…
உயிரே உனதாய் நான் பிறக்கவா…
பிறக்கவா… பிறக்கவா…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில் விழிகளில்தானோ…

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ…
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் : நான் போகின்ற வழியெல்லாம்…
நீ அல்லவா…
உயிர் சுமக்கின்ற காதலும்…
உனது அல்லவா…

ஆண் : உன் சிறைமீட்டு
தினம் உன்னை நான் காக்கவா…
இல்லை நீ இன்றி…
நான் வாழ வழி தேடவா…

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில் விழிகளில்தானோ…

BGM


Notes : Kannoram Song Lyrics in Tamil. This Song from Naam 2 (2022). Song Lyrics penned by T Suriavelan. கண்ணோரம் பாடல் வரிகள்.


விசிலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅந்தோனி தாசன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்தேவி ஸ்ரீ பிரசாத்தி வாரியர்

Whistle Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி…
வெரலு ரெண்ட சேத்து வச்சி…
உள்ள வச்சி ஊது மச்சி…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி…
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி…
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு…
நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு…
நீ வெட்டி போட்ட குட்டி நகம் ரெயின்போ ஆச்சு…
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும் பொட்டு வச்ச பட்டாம்பூச்சி…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

BGM

ஆண் : க்யூட்டா நீ பாக்கயில…
கைட்டா நான் பறக்குறனே…
வெயிட்டா உன் பார்வைக்கொரு…
விசிலு…

பெண் : லைட்டா நீ மோதையில…
டைட்டா நான் போதையில…
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு…
விசிலு…

ஆண் : சூடாக நீ இருக்க…
மூடாக நான் இருக்க…
என் மூச்சு காத்தே…
ஒரு விசிலு…

பெண் : உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே…
எம்மாடி தானா பறக்கும் விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

BGM

ஆண் : ஆபீஸ்சீல் லீவு இருக்க…
ஆசையில நான் இருக்க…
டூ பீஸ்சில் நீ சிரிச்சா விசிலு…

பெண் : என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம்…
நான் கண் முழிக்க…
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு…

ஆண் : அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும்…
மாட்டாத உன் இடைய…
நான் கண்டு புடிச்சாலே…
விசிலு…

பெண் : டக்கராக நீ அணச்சா…
குக்கராக நான் மாறி ஊதுவேனே…
விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…


Notes : Whistle Song Lyrics in Tamil. This Song from The Warriorr (2022). Song Lyrics penned by Viveka. விசிலு பாடல் வரிகள்.


வந்தாளே வந்தாளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேவிஅந்தோனி தாசன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்ரீகாந்த் தேவாஇரும்பன்

Vandhaale Vandhaale Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னாகுன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…

ஆண் : கட்டு மரம் பூ பூத்ததே…
கடல் தண்ணி தேனானதே…

BGM

ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…

ஆண் : பாதையெல்லா நீ நடக்க பரப்பி வச்சேன் என் உசுர…
பாத்து நட பக்குவமா உசுருக்குள்ள நீ இருக்க…
ஆசையெல்லாம் நீ கொடுத்த அடக்கி வச்சேன் என் மனச…
பாடத்துல ரெக்க மொளச்சு பறக்குறனே தன்னால…

ஆண் : காதல் மட்டும் இல்லாங்காட்டி டெத்துனுதான் சொன்னா…
காதலிச்ச பொண்ணு அத கன்ஃபார்ம் பண்ணி போனா…
வெட்டிவிட்டு போனா அவ வெட்டு கிளி போல…
நானு இப்போ ஆனேனடா பித்து குழி போல…

பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னா குன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…

ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணாலே சொன்னாளே அவ காதல சொன்னாளே…

BGM

ஆண் : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல…
உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல…
வலய எடுக்காம மீன் புடிக்கபோனேன்…
வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாமதானே…

ஆண் : நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பட படக்குற நேரம்…
சொல்ல மொழி இல்லாமலே சொல்லாமதான் போனோம்…
கனவில் வந்த காதலுக்கு கத ஒண்ணுதானே…
மீன காய வச்சா கருவாடுதானே…
பார்க்காம பேசாம சிரிக்காம ரசிக்காம…

ஆண் : நந்து வள… நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே…
நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே…
நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல…
காதல் மட்டும் சாகாதடா காலத்த போல…

BGM

ஆண் : ஏய் வாடா வாடா வாடா மச்சான் பெக்க போடு…
வாடா வாடா வாடா மச்சான் ஸ்டெப்ப போடு…
அட வாடா வாடா வாடா மச்சான் பிக்கப்போடு…
நீ வாழு வாழு வாழு மச்சான் செட்டப்போடு…

பெண் : ஆ… கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னா குன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…


Notes : Vandhaale Vandhaale Song Lyrics in Tamil. This Song from Irumban (2022). Song Lyrics penned by Savee. வந்தாளே வந்தாளே பாடல் வரிகள்.


விளம்பர இடைவெளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துகிறிஸ்டோபர் ஸ்டான்லி, சுதர்ஷன் அசோக், ஹிப் ஹாப் தமிழா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Vilambara Idaiveli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒளி இல்லா உன் மொழிகள்…
விடை தேடும் என் விழிகள்…
இமைக்காத நம் நொடிகள்…
கடிகார தேன் துளிகள்…

ஆண் : அடி வாயார உன் காதல் நீ சொல்லடி…
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி…
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி…
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி…

ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்…
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
அடி என்ன நிலை உந்தன் மனதில்…

ஆண் : நான் உனதே அடி நீ எனதா…
தெரியாமல் நானும் தேய்கிறேன்…
இல்லை என்றே சொன்னால் இன்றே…
என் மோக பார்வை மூடுவேன்…

BGM

பெண் : காதல் பூவை நான் ஏற்று கொண்டால்…
உன் காத்திருப்பு நிறைவாகுமே…
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்…
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே…

பெண் : இவளின் கனவோ உள்ளே ஒளியும்…
இரவும் பகலும் இதயம் வழியும்…
வழியும் கனவு இதழை அடையும்…
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்…

ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்…
மாலையில்…

ஆண் : உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
வேளையில்…

ஆண் : என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
வானவில்…

ஆண் : அடி என்ன நிலை உந்தன் மனதில்…
உந்தன் மனதில்…

BGM

பெண் : நிலமெல்லாம் உன் தடமே…
நிலவெல்லாம் உன் படமே…
நிஜமெல்லாம் உன் நிறமே…
நினைவெல்லாம் உன் நியாமே… ஹே…

பெண் : மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ…
மதமே இல்லா இறைவன் நீயோ…
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ…
வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ…

குழு (ஆண்கள்) : நான் உனதே அடி நீ எனதா…

ஆண் : தெரியாமல் நானும் தேய்கிறேன்…

குழு (ஆண்கள்) : இல்லை என்றே சொன்னால் இன்றே…

ஆண் : என் மோக பார்வை மூடுவேன்…

ஆண் : நான் உனதே அடி நீ எனதா…
தெரியாமல் நானும் தேய்கிறேன்…
இல்லை என்றே சொன்னால் இன்றே…
என் மோக பார்வை மூடுவேன்…

BGM


Notes : Vilambara Idaiveli Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan Vairamuthu. விளம்பர இடைவெளி பாடல் வரிகள்.


தீரா நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகபில் கபிலன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்திபு நின்னன் தாமஸ்நதி

Theera Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…

ஆண் : காதோரமாய் இன்னும் ரீங்காரமே…
உன் பூமுகம் நெஞ்சில் சஞ்சாரமே…

ஆண் : ஜல் ஜல் கொலுசொலி…
என் காதில் கதகளி…
நில் நில் தனிமையில்…
கல் வீசி செல் கல் வீசி செல்…

ஆண் : முள் முள் இனிய முள்…
என் ஏங்கும் மனதினுள்…
நில் நில் ஒரு பதில்…
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்…

BGM

பெண் : ஆஆ அன்றும் இன்றும் மனமெல்லாம் நீயே…
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே…
நீர் தேடும் போது மழையாய் நீ வந்தாயே…

ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா…
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா…
நீ கேட்கத்தான் நான் பேசினேனா…
நீயின்றி நான்தானா…

பெண் : தீரா நதி நம் வாழ்வுதானே…
கொண்டாடவே நான் ஏங்கினேனே…

ஆண் & பெண் : கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…

ஆண் & பெண் : காதோரமாய் இன்னும் ரீங்காரமே…
உன் பூமுகம் நெஞ்சில் சஞ்சாரமே…

பெண் : ஜல் ஜல் கொலுசொலி…
என் காதில் கதகளி…
நில் நில் தனிமையில்…
கல் வீசி செல் கல் வீசி செல்…

பெண் : முள் முள் இனிய முள்…
என் ஏங்கும் மனதினுள்…
நில் நில் ஒரு பதில்…

ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்…

பெண் : தீரா நதி நம் வாழ்வுதானே…
கொண்டாடவே நான் ஏங்கினேனே…

பெண் : என் சுவாசம் நீ…
என் வாழ்வும் நீயே…
நீ வாழ நான்…
கண்மூடுவேனே…


Notes : Theera Nadhi Song Lyrics in Tamil. This Song from Nadhi (2022). Song Lyrics penned by Thamarai. தீரா நதி பாடல் வரிகள்.


என் காதலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்ரீநிஷா ஜெயசீலன்என்.ஆர்.ரகுணந்தன்நாட்படு தேறல்

En Kadhala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் (வசனம்) : விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்…
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்…
உயிர் உழுகும் மலர்கள்…
மனிதன் தரா ஞானம்… மரம் தரும் எனக்கு…

—BGM—

ஆண் (வசனம்) : உண்ண கனி… ஒதுங்க நிழல்…
உடலுக்கு மருந்து… உணர்வுக்கு விருந்து…
அடைய குடில்… அடைக்கு கதவு…
அழகு வேலி… ஆடும் தூண்…
தடவ தைலம்… தாளிக்க எண்ணெய்…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா…
வாய் முத்தம் வயது அறியுமா…
நிலா வெண்ணிலா…
வயதில் மூத்ததில்லையா…
இருந்தும் நிலவு சொல்லி…
இளைய அல்லி மலர்வதில்லையா…

பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே…
தந்தைபோல் கணவன் வேண்டுமே… ஆஆ… ஆஆ…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—

பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது…
ஆசைப் போக்கில் நேர்வது…
காதல் நீதி என்பது…
காலம் தோறும் மாறுது…

பெண் : ஓஓ… வெட்டுக்கிளியின் ரத்தமோ…
வெள்ளையாக உள்ளது…
விதிகள் எழுதும் ஏட்டிலே…
விதிவிலக்கும் உள்ளது…

பெண் : ஆழி ரொம்ப மூத்தது…
ஆறு ரொம்ப இளையது…
ஆறு சென்று சேரும்போது…
யாரு கேள்வி கேட்பது… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : காதல் சிந்தும் மழையிலே…
காலம் தேசம் அழியுதே…
எங்கே சிந்தை அழியுதோ…
காதல் அங்கே மலருதே…

பெண் : ம்ம்… ம்ம்… அறிவழிந்து போனபின்…
வயது வந்து தோன்றுமா…
பொருள் அழிந்து போனபின்…
நிழல் கிடந்து வாழுமா…

பெண் : அறமிருக்கும் வாழ்விலே…
முரணிருக்கும் என்பதால்…
முரணிருக்கும் வாழ்விலும்…
அறமிருக்கும் இல்லையா… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—


Notes : En Kadhala Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. என் காதலா பாடல் வரிகள்.


அடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம்

Adi Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்…
கவிதை ஒன்றை எழுதினாய்…
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே…
பார்வையாலே சொல்கிறாய்…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

BGM

ஆண் : ஓ ஓ… உனது சிரிப்பினில் சிதறும் அழகினை…
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ…

பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல…
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ…

ஆண் : இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே…

பெண் : இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே…

ஆண் : அடி உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

பெண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

BGM

ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே…
உன்னை எனது வாழ்வில் தந்ததோ…

பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே…
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ…
மழையில் காதல் உன் மடியிலே…
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே…

ஆண் : விழிகள் பேசும் மொழியிலே…
இனி மௌனம் கூட பிழை இல்லை…

பெண் : அன்பே உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

ஆண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

ஆண் : நீ இரவல் உயிரா…
உறவின் வெயிலா…
மழையின் வாசம் நீயடி…

ஆண் : நீ கவிதை மொழியா…
கவிஞன் வழியா…
உயிரின் சுவாசம் நீயடி…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…


Notes : Adi Penne Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. அடி பெண்ணே பாடல் வரிகள்.