பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி சூரியவேலன் | ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன் | ஸ்டீபன் சகரியா | நாம் |
Adi Penne Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்…
கவிதை ஒன்றை எழுதினாய்…
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே…
பார்வையாலே சொல்கிறாய்…
ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…
பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…
—BGM—
ஆண் : ஓ ஓ… உனது சிரிப்பினில் சிதறும் அழகினை…
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ…
பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல…
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ…
ஆண் : இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே…
பெண் : இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே…
ஆண் : அடி உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…
பெண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…
பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…
ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…
பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
—BGM—
ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே…
உன்னை எனது வாழ்வில் தந்ததோ…
பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே…
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ…
மழையில் காதல் உன் மடியிலே…
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே…
ஆண் : விழிகள் பேசும் மொழியிலே…
இனி மௌனம் கூட பிழை இல்லை…
பெண் : அன்பே உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…
ஆண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…
ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
ஆண் : நீ இரவல் உயிரா…
உறவின் வெயிலா…
மழையின் வாசம் நீயடி…
ஆண் : நீ கவிதை மொழியா…
கவிஞன் வழியா…
உயிரின் சுவாசம் நீயடி…
ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…
பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…
Notes : Adi Penne Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. அடி பெண்ணே பாடல் வரிகள்.