அடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம்

Adi Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்…
கவிதை ஒன்றை எழுதினாய்…
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே…
பார்வையாலே சொல்கிறாய்…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

BGM

ஆண் : ஓ ஓ… உனது சிரிப்பினில் சிதறும் அழகினை…
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ…

பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல…
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ…

ஆண் : இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே…

பெண் : இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே…

ஆண் : அடி உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

பெண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

BGM

ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே…
உன்னை எனது வாழ்வில் தந்ததோ…

பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே…
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ…
மழையில் காதல் உன் மடியிலே…
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே…

ஆண் : விழிகள் பேசும் மொழியிலே…
இனி மௌனம் கூட பிழை இல்லை…

பெண் : அன்பே உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

ஆண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

ஆண் : நீ இரவல் உயிரா…
உறவின் வெயிலா…
மழையின் வாசம் நீயடி…

ஆண் : நீ கவிதை மொழியா…
கவிஞன் வழியா…
உயிரின் சுவாசம் நீயடி…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…


Notes : Adi Penne Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. அடி பெண்ணே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top