Tag Archives: மகாலட்சுமி ஐயர்

பெண்கள் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர் & கே கேபரத்வாஜ்ஜே ஜே

Pengal Nenjai Song Lyrics in Tamil


பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

பெண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : குளிப்பாட்டி அழுக்காக்கவா… ஏய் படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

பெண் : ஹே சண்டை போட வா…
ஆண் : ஹே விட்டு செல்ல வா…

BGM

பெண் : மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்…
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்…

BGM

ஆண் : முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்…
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்…

பெண் : விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்…
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்…

ஆண் : பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்…
பாறையும் இளமை சுரக்கும்…

பெண் : பாலாற்றில் நீராட்டவா… ஏய் படவா…

ஆண் : தொட வா… தொட வா…
தொட வா… தொட வா… தொட வா…

ஆண் : நான் தொட வா…
தொட வா… தொட வா…

பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

BGM

பெண் : கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ…
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ…

BGM

ஆண் : தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ…
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ…

பெண் : பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு…
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு…

ஆண் : உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்…
நான் கண்ட இளமை நிலைக்கும்…

பெண் : முச்சத்தில் மூப்பேதடா படவா…

ஆண் : நீ தொட வா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா வா வா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…


Notes : Pengal Nenjai Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. பெண்கள் நெஞ்சை பாடல் வரிகள்.


காதல் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சிவன் & மகாலட்சுமி ஐயர்மணி சர்மாநரசிம்மா

Kadhal Aararo Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…

BGM

ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…
மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…

பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்…
இந்த முத்தம் தீராதே…

ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்…
நதி குற்றம் கூறாதே…

பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்…

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

BGM

பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…
எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…

ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்…
ஒரு ஜென்மம் போதாதே…

பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்…
இந்த காதல் சாகாதே…

ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…


Notes : Kadhal Aararo Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Yugabharathi. காதல் ஆராரோ பாடல் வரிகள்.


Usilampatti Santhaiyile Song Lyrics in Tamil

உசிலம்பட்டி சந்தையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன், மகாலட்சுமி ஐயர் & செந்தில்தாஸ் வேலாயுதம்ஸ்ரீகாந்த் தேவாதெனாவட்டு

Usilampatti Santhaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
வசியம் பண்ணி போறவளே…

BGM

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
வசியம் பண்ணி போறவளே…
ஊசி குத்தும் பார்வையால…
உசுர கொத்தி போறவளே…

பெண் : உன் காலடி மண்ண உரம் போட்டு…
என் காதல் ரோஜா பூக்குதையா…
நீ ஈர சேலை தொடும் போது…
என் ஈர கொலையும் குளிருதையா…

ஆண் : போட்டு பாரு டப்பாங்குத்து…
பெண் : நடந்து வந்தா தெனாவட்டு…

BGM

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
வசியம் பண்ணி போறவளே…
ஊசி குத்தும் பார்வையால…
உசுர கொத்தி போறவளே…

BGM

பெண் : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…
குழு : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…

பெண் : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…
குழு : கொட்டுற கொட்டுற மழையில…
என்ன விட்டுட்டு போறியே ராசாவே…

பெண் : ஹே ராசாவே…
குழு : ஹே ராசாவே…
பெண் : ஹே ராசாவே…
குழு : ஹே ராசாவே…
குழு : ஹே ராசாவே ராசாவே…
ராசாவே ராசாவே…

BGM

ஆண் : டெண்டு கொட்டக இருக்கு…
ஓம பொடி முறுக்கு…
கமருகட்டு கோலிசோடா…
வாங்கி தாரேன் உனக்கு…

பெண் : மனசு குள்ள உனக்கு…
மன்மதன்னு நெனைப்பு…
மகுடி வச்சி ஊதினாலும்…
மயங்க மாட்டேன் அதுக்கு…

ஆண் : கார குடி கார குடி கோழி குருமா…
காத்திருந்து சாப்பிட தான் சூடு வருமா…

BGM

பெண் : ஹே… உன்னுடைய பேர சொன்னா ராசா ராசா…
ஆண் : ஹே… உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா…

பெண் : ஹா… கட்டு கட்டு நடைய கட்டு…
ஆண் : ஹான்… கிட்ட வந்தா ஜல்லி கட்டு…

BGM

ஆண் : உசிலம்பட்டி…

ஆண் : உசிலம்பட்டி சந்தையில…
பெண் : ஹா…
ஆண் : வசியம் பண்ணி போறவளே…
ஊசி குத்தும் பார்வையால…
பெண் : ஹா ஹா ஹா…
ஆண் : உசுர கொத்தி போறவளே…
பெண் : ஹே…

ஆண் : தலுக்கி குலுக்கி நடக்கும்…
இவ நடைய பாரு…
சிலிக்கி நுலிக்கி சருக்கும்…
இவ உடைய பாரு…

பெண் : கும்மி அடிச்சா கும்மி அடி…
குலவ போட்டு கும்மி அடி…
கும்மி அடிச்சா கும்மி அடி…
குலவ போட்டு கும்மி அடி…

BGM

ஆண் : சிரிக்க சிரிக்க பேசி…
நீ சீம்பால தான் தார…
சேலை கட்டி வந்து…
என்ன சிலை ஆக்கி போற…

பெண் : பழனி மலை கீழ…
பஞ்சாமிர்தம் போல…
பக்கம் வந்து பிழியிறியே…
என்ன ஆடை போல…

ஆண் : செக்கு மாட போல…
உன்ன சுத்தி வரவா…
சுத்தி சுத்தி இணையாக…
என்னை தரவா…

BGM

பெண் : ஹே… உன்ன போல யாரு இருக்கா ராசா ராசா…
ஆண் : அட எனக்கு நீ ஒருத்திதான்டி ரோசா ரோசா…

பெண் : ஹா… கட்டு கட்டு என்ன கட்டு…
ஆண் : நானும் மேயும் புல்லு கட்டு…

BGM


Notes : Usilampatti Santhaiyile Song Lyrics in Tamil. This Song from Thenavattu (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உசிலம்பட்டி சந்தையில பாடல் வரிகள்.


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Kandukonden Kadukonden Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…
விரல் தொடும் தூரத்திலே…
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து…
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி…
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்…
உயிரை உடைப்பாள் ஒருத்தி…

பெண் : என் கண் பார்த்தது…
என் கை சேருமோ…
ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா…
பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா…
ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM

பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்…
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்…

ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும்…
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்…

பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ…
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ…

ஆண் : ஏ… கனவு மங்கையே…
உனது மனது எனது மனதில் இணையுமோ…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்… ஹே ஹேய்ய்…
காதல் முகம் கண்டுகொண்டேன்… ஹே ஹேய்ய்…

ஆண் : விரல் தொடும் தூரத்திலே… ஹே ஹேய்ய்…
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

BGM

ஆண் : நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது…
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது…

பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்…
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்…

ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்…
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்…

பெண் : ஏ… காதல் தேவனே…
எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்…

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…

ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…

ஆண் : விரல் தொடும் தூரத்திலே…
பெண் : விரல் தொடும் தூரத்திலே…
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM


Notes : Kandukonden Kadukonden Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள்.


பூவே வாய் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்12பி

Poove Vai Pesum Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

BGM

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

BGM

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்…
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்…

பெண் : உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…
உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…

ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்…
என்ன நான் சொல்வேன்…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

BGM

பெண் : நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…

பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு…
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு…

பெண் : என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…
என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…

ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது…
என்று நீ சொல்வது…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது… ஹ்ம்ம்…
காற்றே ஓடாதே நில்லு… ஹ்ம்ம்…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு… ஹ்ம்ம்…
காற்றே நல் வார்த்தை சொல்லு… ஹ்ம்ம்…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
மன்றாடுவேன்…


Notes : Poove Vai Pesum Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. பூவே வாய் பேசும் பாடல் வரிகள்.


ஓ ஓ சனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & மகாலட்சுமி ஐயர்ஹிமேஷ் ரேஷ்மியாதசாவதாரம்

Oh Ho Sanam Song Lyrics in Tamil


ஆண் : பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
உடல் பூமிக்கே போகட்டும்… ஹா…
இசை பூமியை ஆளட்டும்…

BGM

ஆண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…

ஆண் : காட்டை திறக்கும் சாவிதான் காற்று…
காதை திறக்கும் சாவிதான் பாட்டு…

ஆண் : பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…

ஆண் : உடல் பூமிக்கே போகட்டும்…
இசை பூமியை ஆளட்டும்…

ஆண் : காட்டை திறக்கும் சாவிதான் காற்று…
காதை திறக்கும் சாவிதான் பாட்டு…

ஆண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓ ஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓ ஓ…

BGM

ஆண் : நீ என்பதை பொல்லாத நான் என்பதை…
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல்தான்…
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது…
அதை மாற்றி ஆள் செய்வது பாடல்தான்…

ஆண் : கடவுளும் கந்தசாமியும்…
பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்…

ஆண் : மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்…
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்…
எண்ணிப்பாரடா மானுடா…
என்னோடு நீ பாடடா…

ஆண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…

BGM

ஆண் : பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே…
ஆனாலும் தேன் தந்துதான் போகுதே… ஹே…

பெண் : நம் வாழ்க்கையின் வாழ்நாளை யார் தந்தது…
என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே…

ஆண் : வீழ்வது யாராயினும்…
வாழ்வது நாடாகட்டும்…

பெண் : காலம் உன் உதடுகள் மூடும் போதும்…
காற்று உன் வலிகளை மீண்டும் பாடும்…
நீ பாடினால் நல்லிசை…
உன் மௌனமும் மெல்லிசை…

ஆண் & பெண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…

ஆண் : கம் ஆன் எவ்ரிபடி ராக் வித் மீ…
குழு : ஓஓ சனம்…
ஆண் : கம் ஆன் ராக் வித் மீ…
குழு : ஓஓ சனம்… ஓஓ…

ஆண் : ராக் இட்… ராக் இட்…
குழு : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…

ஆண் : கம் ஆன்… கம் ஆன்… கம் ஆன்…
கம் ஆன் யே மூவ் இட்…
கம் ஆன் பேபி…

ஆண் : பிரிங் இட் அப்… பிரிங் இட் அப்…
பிரிங் இட் அப்… பிரிங் இட் அப்…
பம்ப் அப் தி வால்யூம்…
ராக் இட் கேர்ள்…
ராக் இட்… யே ராக் இட்…

குழு : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…


Notes : Oh Ho Sanam Song Lyrics in Tamil. This Song from Dhasaavathaaram (2008). Song Lyrics penned by Vairamuthu. ஓ ஓ சனம் பாடல் வரிகள்.


யாரோ யாரோடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர், வைஷாலி சமந்த் & ரிச்சா ஷர்மைன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Yaro Yarodi Song Lyrics in Tamil


குழு : ஹே டும் டும் டம் டமக்கு டும்…
டும் டம் டமக்கு டும் டும் டும் ஹே…
ஹே டும் டும் டும் டும் டும்…
டும் டமக்கு டும் டமக்கு…
டும் டமக்கு டும் டமக்கு டும்…
டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும்…
டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு…
டும் டும் டும் டும் டும் டும் டும் ஹா…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

பெண் : ஈக்கி போல நிலா வடிக்க…
இந்திரனார் பந்தடிக்க…
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு…

பெண் : சந்தனப் பொட்டழகை…
சாஞ்ச நடையழகை…
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

BGM

பெண் : தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க… பாருங்க…
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க… ஓஹோ… ஓஓஓஓ… ஆஆ…

பெண் : முத்தழகி இங்கே இல்லீங்க…
சொல்லுங்க முத்தமிட்டு எங்கே தொடுங்க…
மொத்தமாக சொல்லிக் குடுங்க…
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க…

பெண் : கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா…
அவ நடிப்பா…
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

BGM

குழு : கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பெண் : கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பெண் : பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு…
மூணு முடி போடுவதெதுக்கு… ஆஆ ஆஆ ஆஆ…

BGM

பெண் : உரிமைக்காக ஒத்த முடிச்சு…
உரிமைக்காக ஒத்த முடிச்சு…
அடியே உறவுக்காக ரெண்டாம் முடிச்சு…
ஊருக்காக மூணாம் முடிச்சு…
முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு…

பெண் : பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு…
மூணு முடி போடுவதெதுக்கு…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
உன் திமிருக்கு அரசன்…


Notes : Yaro Yarodi Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. யாரோ யாரோடி பாடல் வரிகள்.


கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்மகாலட்சுமி ஐயர்டி. இமான்தவம்

Kanadasa Kanadasa Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

பெண் : என் விழியோரமாய் மை எடுப்பாயடா…
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா…
என்னை மெச்சு மெச்சு…
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு…

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

BGM

பெண் : நீ இல்லாமலே நான் உனை காதலிக்கிறேன்…
இதை சொல்லாமலே நான் உனை காதலிக்கிறேன்…
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்…
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்…

பெண் : நான் உனை காதலிக்கிறேன்…
மனிதர்கள் உறங்கும் நேரத்தில்…
தேவதையாய் திரிந்தே…
நான் உனை காதலிக்கிறேன்…
உனை காதலிக்கிறேன்…

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

BGM

பெண் : நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
எனை மணப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்…
கனவாலே உனக்கு மனைவி ஆகி கொண்டேன்…
நான் இங்கு காத்திருக்கிறேன்…

பெண் : காலங்களை மறந்து அசையாத…
சிலையாக அமர்ந்தே…
நான் இங்கு காத்திருக்கிறேன்…
இங்கு காத்திருக்கிறேன்…

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

பெண் : என் விழியோரமாய் மை எடுப்பாயடா…
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா…
என்னை மெச்சு மெச்சு…
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு…

BGM


Notes : Kanadasa Kanadasa Song Lyrics in Tamil. This Song from Thavam (2007). Song Lyrics penned by Thabu Shankar. கண்ணதாசா கண்ணதாசா வருவாயா பாடல் வரிகள்.


ஒரு தேதி பார்த்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்வித்யாசாகர்கோயமுத்தூர் மாப்ளே

Oru Thethi Parthal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

ஆண் : முதல் முதல் தொடும் போது…
மடல் விடும் உயிர் காதல்…
வா வா எந்தன் வாழ்வே…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

BGM

பெண் : பார்வை மீது உந்தன் பேரழகே…
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி…

ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி…
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி…

பெண் : கோடையிலும் இதழ் காய்வதில்லை…
ஆசையின் அலைதான் ஓய்வதில்லை…

ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை…
தேவனின் விதியில் மாற்றம் இல்லை…

பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான்…
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

BGM

ஆண் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை…
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை…

பெண் : ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை…
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை…

ஆண் : தாமரையே சிறு வான்பிறையே…
மார்பினில் வழியும் தேன் மழையே…

பெண் : காதலனே இசை பாடகனே…
கீதங்கள் பொழியும் பாவலனே…

ஆண் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே…
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

ஆண் : முதல் முதல் தொடும் போது…
மடல் விடும் உயிர் காதல்…

ஆண் & பெண் : வா வா எந்தன் வாழ்வே…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…


Notes : Oru Thethi Parthal Song Lyrics in Tamil. This Song from Coimbatore Mappillai (1996). Song Lyrics penned by Vaali. ஒரு தேதி பார்த்தால் பாடல் வரிகள்.


ஒரு பௌர்ணமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Oru Pournami Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ… மலரே அழகே…
துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…
புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

ஆண் : ஓ… ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

BGM

பெண் : சொல்லாத காதல்…
சொல்ல வந்த போது…
சொல்லெல்லாம் காணாமல்…
ஏன் போகுதோ…

ஆண் : யார் நெஞ்சிலேதான்…
காதல் என்பதில்லை…
ஆனால் என்ன எல்லாமே…
பூ பூக்குதோ…

பெண் : கார்காலம்தான் காதல்…
அது வந்தால் இன்பம் செய்யும்…

ஆண் : போர் காலம்தான் காதல்…
அது வந்தால் இம்சை செய்யும்…

பெண் : அலை வந்து ஏதோதான் சொல்கிறது…
ஆண் : கரை அதை கேட்காமல் செல்கிறது…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

BGM

ஆண் : ஆகாய மேகம்…
உன் மீது போகும்…
போகும் போது…
லேசாக தேன் தூவுமே…

பெண் : நான் தேடும் மேகம்…
என்னை வந்து சேர்ந்தால்…
தெய்வம் வந்து…
என் வாழ்வை தாலாட்டுமே…

ஆண் : பெண் பூவே…
உன் வாழ்க்கை…
ஒரு சொர்க்கம் என்றே மாறும்…

பெண் : என் ஆசை கை சேர்ந்தால்…
உன் வார்த்தை உண்மையாகும்…

ஆண் : உனக்கென்ன நீ இங்கே…
வைர விழா…
என்னைகாண வானம்தான்…
அருகினிலா…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ…
ஆண் : மலரே அழகே…

பெண் : துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…

ஆண் : எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…

பெண் : புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

BGM


Notes : Oru Pournami Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்.