பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கமல்ஹாசன் & மகாலட்சுமி ஐயர் | ஹிமேஷ் ரேஷ்மியா | தசாவதாரம் |
Oh Ho Sanam Song Lyrics in Tamil
ஆண் : பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
உடல் பூமிக்கே போகட்டும்… ஹா…
இசை பூமியை ஆளட்டும்…
—BGM—
ஆண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஆண் : காட்டை திறக்கும் சாவிதான் காற்று…
காதை திறக்கும் சாவிதான் பாட்டு…
ஆண் : பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
ஆண் : உடல் பூமிக்கே போகட்டும்…
இசை பூமியை ஆளட்டும்…
ஆண் : காட்டை திறக்கும் சாவிதான் காற்று…
காதை திறக்கும் சாவிதான் பாட்டு…
ஆண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓ ஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓ ஓ…
—BGM—
ஆண் : நீ என்பதை பொல்லாத நான் என்பதை…
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல்தான்…
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது…
அதை மாற்றி ஆள் செய்வது பாடல்தான்…
ஆண் : கடவுளும் கந்தசாமியும்…
பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்…
ஆண் : மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்…
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்…
எண்ணிப்பாரடா மானுடா…
என்னோடு நீ பாடடா…
ஆண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
—BGM—
ஆண் : பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே…
ஆனாலும் தேன் தந்துதான் போகுதே… ஹே…
பெண் : நம் வாழ்க்கையின் வாழ்நாளை யார் தந்தது…
என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே…
ஆண் : வீழ்வது யாராயினும்…
வாழ்வது நாடாகட்டும்…
பெண் : காலம் உன் உதடுகள் மூடும் போதும்…
காற்று உன் வலிகளை மீண்டும் பாடும்…
நீ பாடினால் நல்லிசை…
உன் மௌனமும் மெல்லிசை…
ஆண் & பெண் : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஆண் : கம் ஆன் எவ்ரிபடி ராக் வித் மீ…
குழு : ஓஓ சனம்…
ஆண் : கம் ஆன் ராக் வித் மீ…
குழு : ஓஓ சனம்… ஓஓ…
ஆண் : ராக் இட்… ராக் இட்…
குழு : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஆண் : கம் ஆன்… கம் ஆன்… கம் ஆன்…
கம் ஆன் யே மூவ் இட்…
கம் ஆன் பேபி…
ஆண் : பிரிங் இட் அப்… பிரிங் இட் அப்…
பிரிங் இட் அப்… பிரிங் இட் அப்…
பம்ப் அப் தி வால்யூம்…
ராக் இட் கேர்ள்…
ராக் இட்… யே ராக் இட்…
குழு : ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
Notes : Oh Ho Sanam Song Lyrics in Tamil. This Song from Dhasaavathaaram (2008). Song Lyrics penned by Vairamuthu. ஓ ஓ சனம் பாடல் வரிகள்.