Tag Archives: மகாலட்சுமி ஐயர்

kaal-mulaitha-poove-song-lyrics-in-tamil

கால் முளைத்த பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர் & நின்சி வின்சென்ட்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…

பெண் : வால் முளைத்த காற்றே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

BGM

ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே…
மலர்களின் மமதை அழிந்ததே…
கடவுளின் கடமை முடிந்ததே…
அழகி நீ பிறந்த நொடியிலே…

பெண் : தலைகள் குனிந்ததோ…
மமதை அழிந்ததோ…
கடமை முடிந்ததோ…
பிறந்த நொடியிலே…

ஆண் : ஹே பெண்ணே… ஹே பெண்ணே…
உன் வளைவுகளில்…
தொலைவதுபோலே உணருகிறேன்…
இடையினிலே திணறுகிறேன்…
கனவிதுதானா வினவுகிறேன்…

BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

BGM

பெண் : இரவெலாம் நிலவு எரிகையில்…
திரிகளாய் விரல்கள் திரியுதே…
அருகிலே நெருங்கி வருகையில்…
இளகியே ஒழுக்கம் உருகுதே…

ஆண் : நிலவு எரிகையில்…
விரல்கள் திரியுதோ…
நெருங்கி வருகையில்…
ஒழுக்கம் உருகுதோ…

பெண் : எனை ஏனோ… எனை ஏனோ…
உருக்குகிறாய்…
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்…
இடைவெளியை சுருக்குகிறாய்…
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்…

BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…

பெண் : வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…


Notes : Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Madhan Karky. கால் முளைத்த பூவே பாடல் வரிகள்.


கடோத்கஜா கடோத்கஜா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Gadothkaja Gadothkaja Song Lyrics in Tamil


BGM

குழு : சிரித்த முகம்…
அழகு சிரித்த முகம்…
தேயாத முழு நிலவே…
ஓயாத அலை காட்டும்…
சிரித்த முகம்…
அழகு சிரித்த முகம்…

BGM

பெண் : கடோத்கஜா கடோத்கஜா…
கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…

பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…

BGM

பெண் : அன்போடு கை தளம் பற்ற…
கன்னி நிலா தான் வருகிறதே…

பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று…
அழகன் என்று அறிஞன் என்று…
ஆசை வைத்த இள மான்…
நீயே கிடைத்தாயே…

ஆண் : ஆனவரை விழியால் பேசு…
மௌனம் என்னும் மொழியால் பேசு…
ஆக மொத்தம் அன்பே…
உனக்கு நான் தான் நாயகனே…

ஆண் : கடோத்கஜான் கலாதரன்…
கண்ணே உந்தன் கையில் சரண்…

BGM

ஆண் : டிக் டிக் என்று சத்தம் உன்னாலே…
என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே…

BGM

பெண் : பக் பக் என்று அஞ்சி உன்னாலே…
என் உள்ளம் வேகின்றதே கண்ணா…

ஆண் : ஒரே நாளில் காதல் நோய்தான்…
உன்னால் வந்ததே தோழி…

பெண் : ஒரே ஊசி போட்டால் போதும்…
உயிர் வாழுமே தோழனே… தோழனே…

ஆண் : ஓ… மாலையிட ஒரு நாள் பார்த்து…
மண நாள் பார்த்து திருநாள் பார்த்து…

பெண் : சேலை தொடும்…
மறு நாள் வந்து மறுப்பேனா…

ஆண் : காலை நெஞ்சம் கேட்காதம்மா…
கடிகாரம் தான் பார்க்காதம்மா…
காற்று என்ன நேரம் பார்த்தா…
நதியில் குளிக்கிறது…

பெண் : கடோத்கஜா… கடோத்கஜா…

BGM

ஆண் : தையல் போட்டு என்னை தைத்தாயே…
தையல் இனி உன்னோடுதான் கண்ணே…

BGM

பெண் : கையை போட்டு என்னை கையாட…
கை சேரு என்னோடுதான் கண்ணா…

ஆண் : விழி மேய்ந்து ஓயும்போது…
விரல் மேயுமே தோழி…
கோடி பூவும் கூச்சம் கொண்டு…
மடி சாயுமே தோழியே… தோழியே…

பெண் : பூங்கரத்து வலையாடாதா…
வலையாடதான் விளையாடாதா…
வாய் சிவப்பு உன்னால் கொஞ்சம் வெளுக்காதா…

ஆண் : நேற்று வரை அடைத்தே வைத்த…
மடையை நீதான் உடைத்தாய் இன்று…
பாவி மனம் பாயை போட…
பாடாய் படுத்திறதே…

பெண் : கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…

பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…

BGM

பெண் : அன்போடு கை தளம் பற்ற…
கன்னி நிலா தான் வருகிறதே…

பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று…
அழகன் என்று அறிஞன் என்று…
ஆசை வைத்த இள மான்…
நீயே கிடைத்தாயே…

ஆண் : ஆனவரை விழியால் பேசு…
மௌனம் என்னும் மொழியால் பேசு…
ஆக மொத்தம் அன்பே உனக்கு…
நான்தான் நாயகனே…

பெண் : கடோத்கஜா… கடோத்கஜா…


Notes : Gadothkaja Gadothkaja Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. கடோத்கஜா கடோத்கஜா பாடல் வரிகள்.


மழைக்காற்று வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்வித்யாசாகர்வேதம்

Malaikatru Vandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…

BGM

பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்…
மலைச்சாரல் வந்து இசை பாடினால்…
மலரோடு வண்டு உரையாடினால்…
உன்னோடு நானும் பேசுவேன்…

BGM

பெண் : புல்லோடு இரவில் பனி தூங்குமே…
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே…
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே…
தூங்காது நமது தீபமே…
தூங்காது நமது தீபமே…

ஆண் : கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே…
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே…
முடியாது அண்டம் முடிந்தாலுமே…
முடியாது நமது பந்தமே…
முடியாது நமது பந்தமே…

பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா…
மலைச்சாரல் வந்து இசை பாடுமா…

ஆண் : மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…

BGM

ஆண் : இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்…
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன்…
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்…
இடைவேளை இல்லை தொடருவேன்…
இடைவேளை இல்லை தொடருவேன்…

பெண் : கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்…
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்…
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்…
இனி என்ன செய்வது அறியேன்…
இனி என்ன… ஹ்ம்ம்…

ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…

BGM


Notes : Malaikatru Vandhu Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Vairamuthu. மழைக்காற்று வந்து பாடல் வரிகள்.


நெஞ்சம் ஒருமுறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Nenjam Oru Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…

பெண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது…
உள்ளம் உனக்குத்தான் என்றது…

பெண் : சத்தமின்றி உதடுகளோ…
முத்தம் எனக்கு தா என்றது…
உள்ளம் என்ற கதவுகளோ…
உள்ளே உன்னை வா என்றது…

BGM

பெண் : நீதான் நீதான்…
எந்தன் உள்ளம் திறந்து…
உள்ளே உள்ளே வந்த…
முதல் வெளிச்சம்…

BGM

ஆண் : நீதான் நீதான்…
எந்தன் உயிா் கலந்து…
நெஞ்சை நெஞ்சை தொட்ட…
முதல் ஸ்பாிசம்…

பெண் : கன்னம் என்னும்…
தீ அணைப்பு துறையில்…
உன் முத்தம்தானே…
பற்றி கொண்ட முதல் தீ…

ஆண் : கிள்ளும்போது…
எந்தன் கையில் கிடைத்த…
உன் விரல்தானே…
நானும் தொட்ட முதல் பூ…

பெண் : உன் பாா்வைதானே…
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்…

ஆண் : அன்பே என்றும் நீ அல்லவா…
கண்ணால் பேசும் முதல் கவிதை…

பெண் : காலம் உள்ள காலம் வரை…
நீதான் எந்தன் முதல் குழந்தை…

ஆண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…

பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது…

BGM

ஆண் : காதல் என்றால் அது…
பூவின் வடிவம்…
ஆனால் உள்ளே அது…
தீயின் உருவம்…

BGM

பெண் : காதல் வந்தால்…
இந்த பூமி நழுவும்…
பத்தாம் கிரகம் ஒன்றில்…
பாதம் பரவும்…

ஆண் : காதல் வந்து…
நெஞ்சுக்குள்ளே நுழையும்…
ஒரு தட்பவெப்ப…
மாற்றங்களும் நிகழும்…

பெண் : காதல் வந்து…
கண்ணை தட்டி எழுப்பும்…
அது ஊசி ஒன்றை…
உள்ளுக்குள்ளே அனுப்பும்…

ஆண் : இந்த காதல் வந்தால்…
இலை கூட மலை சுமக்கும்…

பெண் : காதல் என்ற வாா்த்தையிலே…
ஒன்றாய் சோ்ந்து நாம் தொலைவோம்…

ஆண் : காதல் என்ற காற்றினிலே…
தூசி போல நாம் அலைவோம்…

ஆண் : நெஞ்சம் ஒரு முறை நீ என்றது…

பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது…

ஆண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது…

பெண் : உள்ளம் உனக்குத்தான் என்றது…

ஆண் : சத்தமின்றி உதடுகளோ…
முத்தம் எனக்கு தா என்றது…

பெண் : உள்ளம் என்ற கதவுகளோ…
உள்ளே உன்னை வா என்றது…

BGM


Notes : Nenjam Oru Murai Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Pa. Vijay. நெஞ்சம் ஒருமுறை பாடல் வரிகள்.


எனக்கொரு சினேகிதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Enakoru Snegidhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

ஆண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் மெல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் செல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…

BGM

ஆண் : மேகமது சேராது…
வான் மழையும் வாராது…
தனிமையில் தவித்தேனே…
உன்னை எண்ணி இளைத்தேனே…

பெண் : மேல் இமையும் வாராது…
கீழ் இமையும் சேராது…
உனக்கிது புரியாதா…
இலக்கணம் தெரியாதா…

ஆண் : சம்மதங்கள் உள்ள போதும்…
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்…

பெண் : வார்த்தை வந்து சேரும் போது…
நாணம் என்னை கட்டிப்போடும்…

ஆண் : மௌனம் ஒன்று போதும் போதுமே…
கண்கள் பேசிவிடுமே…

BGM

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

BGM

பெண் : கைவளையல் குலுங்காமல்…
கால் கொலுசும் சிணுங்காமல்…
அணைப்பது சுகமாகும்…
அது ஒரு தவமாகும்…

ஆண் : மோகம் ஒரு பூப்போல…
தீண்டியதும் தீப்போல…
கனவுகள் ஒருகோடி…
நீ கொடு என் தோழி…

பெண் : உன்னைத்தந்து என்னை நீயும்…
வாங்கி கொண்டு நாட்களாச்சு…

ஆண் : உன்னை தொட்ட பின்புதானே…
முட்கள் கூட பூக்களாச்சு…

பெண் : விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால்…
விறகும் வீணையாகும்…

BGM

ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…

பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் செல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…

BGM


Notes : Enakoru Snegidhi Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. எனக்கொரு சினேகிதி பாடல் வரிகள்.


என்னவோ என்னவோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Ennavo Ennavo Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

பெண் : உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…

பெண் : என்னோடு நீயாக…
உன்னோடு நானாகவா…
பிாியமானவனே…

பெண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

BGM

ஆண் : மழைத்தேடி நான் நனைவேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : குடையாக நான் வருவேன்…
சம்மதமா சம்மதமா…

ஆண் : விரல் பிடித்து நகம் கடிப்பேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : நீ கடிக்க நகம் வளர்ப்பேன்…
சம்மதமா சம்மதமா…

ஆண் : விடிகாலை வேளை வரை…
என்வசம் நீ சம்மதமா…

பெண் : இடைவேளை வேண்டுமென்று…
இடை கேக்கும் சம்மதமா…

ஆண் : நீ பாதி நான் பாதி…
என்றிருக்க சம்மதமா…

பெண் : என்னுயிரில் சரிபாதி…
நான் தருவேன் சம்மதமா…

ஆண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

BGM

ஆண் : இமையாக நானிருப்பேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : இமைக்காமல் பார்த்திருப்பேன்…
சம்மதமா சம்மதமா…

ஆண் : கனவாக நான் வருவேன்…
சம்மதமா சம்மதமா…

பெண் : கண்மூடி தவமிருப்பேன்…
சம்மதமா சம்மதமா…

ஆண் : ஹோ ஒருகோடி ராத்திரிகள்…
மடி தூங்க சம்மதமா…

பெண் : பலகோடி பௌர்ணமிகள்…
பார்த்திடுவேன் சம்மதமா…

ஆண் : பிரியாத வரம் ஒன்றை…
தரவேண்டும் சம்மதமா…

பெண் : பிரிந்தாலும் உன்னை சேரும்…
உயிர் வேண்டும் சம்மதமா…

ஆண் : என்னவோ என்னவோ…
என்வசம் நானில்லை…
என்ன நான் சொல்வதோ…
என்னிடம் வார்த்தையில்லை…

ஆண் : உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்…
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்…

பெண் : என்னோடு நீயாக…
உன்னோடு நானாகவா…

ஆண் : பிாியமானவளே…
பெண் : பிாியமானவனே…
ஆண் : பிாியமானவளே…
பெண் : பிாியமானவனே…


Notes : Ennavo Ennavo Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. என்னவோ என்னவோ பாடல் வரிகள்.


திண்டுக்கல்லு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & மஹாலக்ஷ்மி ஐயர்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Dindukallu Song Lyrics in Tamil


ஆண் : திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…

பெண் : கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…

ஆண் : ஏ… காரைக்குடி உங்கப்பன் வீடு…
நீயும் போயிக்கோ… ஓஹோ…

பெண் : காஞ்சிபுரம் மடத்துல…
நீயும் சேர்ந்துக்கோ… ஓஹோ…

ஆண் : தஞ்சாவூர் பொம்மைக்கு…
இந்த தலைக்கணம் எதுக்கோ…

பெண் : காங்கேயன் காளையின்னு…
நெஞ்சில் என்ன மிதப்போ…

ஆண் : வண்டுக்கும் பூவுக்கும்தான்…
வழ எதுக்கோ…
என்ன முறுக்கோ…
கொஞ்சம் ஒத்துக்கோ…

பெண் : இனி கோழி சேவல்…
கொக்கோகோ…

ஆண் : திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…

பெண் : கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…

BGM

பெண் : மீன போல மாறி போவேன்…
அப்ப நீதான் என்ன…
செய்வன்னு சொல்லு… சொல்லு…

ஆண் : ஏறி கடலும் வலைய வீசி…
உன்னை பிடித்து கட்டில்…
வறுத்து தின்பேன்… தின்பேன்…

பெண் : மஞ்ச காட்டு மரமாதான்…
மாறி போவேனே…

ஆண் : மரங்கொத்தி போல் வந்து…
கொத்தி பார்ப்பேனே…

பெண் : ஒரு கீரை தோட்டமா மாறி…
உன்ன வதங்கி வாட்டதான் போறேன்…

ஆண் : ஒரு ஆட்டு குட்டியா நானும் மாறிதான்…
உன்ன மேயதான் போறேன்…

பெண் : யே மொரடா…
கொஞ்சம் பொறுடா…

ஆண் : பசி மானம் பார்ப்பதுண்டா…

BGM

ஆண் : சின்ன தூணே சீனி தேனே…
போர்வைக்குள்ளே ஒன்னா கிடப்போமா…
சும்மா… சும்மா…

பெண் : சூர காத்தே ஈர காத்தே…
தள்ளி தள்ளி தனியாய் இருப்போமா…
சும்மா… சும்மா…

ஆண் : …ஓ உன் பஞ்சலோக அங்கத்த…
செதுக்கவா சும்மா…

பெண் : ஒரு அண்ணாகரண்டி கொண்டான்னு…
அடிக்கவா சும்மா…

ஆண் : நீ குளிக்க போகையில் நானும்…
கொஞ்சம் முதுகு தேய்க்கவா சும்மா…

பெண் : ஏ… இதுக்கு போயி எல்லாம்…
பயந்து பயந்துதான் என்ன கேட்குற சும்மா…

ஆண் : அடி ரசமே…
அதி ரசமே…

பெண் : இது வழியில் கலந்த சுகமே…

ஆண் : திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாசல் பூட்டிக்கோ… ஓஹோ…

பெண் : ஹேய்… கோயம்பத்தூர் பஞ்ச வச்சு…
மெத்தை வாங்கிக்கோ… ஓஹோ…

ஆண் : யே… காரைக்குடி மல்லிகபூ…
நீயும் வெச்சிக்கோ… ஓஹோ…

பெண் : காஞ்சிபுரம் பட்டு சேலை…
வாங்கி வந்துக்கோ… ஓஹோ…

ஆண் : தஞ்சாவூர் பொம்மை போல…
தலை ஆட்டி ஒத்துக்கோ…

பெண் : காங்கேயன் காளை போல…
என்ன வந்து முட்டிக்கோ…

ஆண் : வண்டுக்கும் பூவுக்கும்தான்…
ஆசை கிறுக்கோ…
என்ன கட்டிக்கோ…
முத்தம் வச்சிக்கோ…

பெண் : இனி கோழி சேவல்…
கொக்கோகோ…


Notes : Dindukallu Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Pa Vijay. திண்டுக்கல்லு பாடல் வரிகள்.


குறுக்கு சிறுத்தவளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Kurukku Chiruththavale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே…
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே…

ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே…
ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே…

பெண் : வாயி மேல வாய வச்சு…
வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட…
விரல வச்சு அழுத்திய கழுத்துல…
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல…

ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல…
கணுக்கால் கூட கருப்பு இல்ல…
நீ தீண்டும் இடம் தித்திக்குமே…
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் ஒரு பார்வை…
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிர் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் ஜீவனில் நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…

பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன்யா…

ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம்…

பெண் : மாத்துவேன்யா…

ஆண் : ஒஹோ… ஓஓஓ…
ஒஹோ… ஓஓஓ…

பெண் : ஆஆ… ஆஆஆ…
ஆஆ… ஆஆஆ…


Notes : Kurukku Chiruththavale Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. குறுக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்.