பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர் | வித்யாசாகர் | வேதம் |
Malaikatru Vandhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
—BGM—
பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்…
மலைச்சாரல் வந்து இசை பாடினால்…
மலரோடு வண்டு உரையாடினால்…
உன்னோடு நானும் பேசுவேன்…
—BGM—
பெண் : புல்லோடு இரவில் பனி தூங்குமே…
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே…
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே…
தூங்காது நமது தீபமே…
தூங்காது நமது தீபமே…
ஆண் : கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே…
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே…
முடியாது அண்டம் முடிந்தாலுமே…
முடியாது நமது பந்தமே…
முடியாது நமது பந்தமே…
பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா…
மலைச்சாரல் வந்து இசை பாடுமா…
ஆண் : மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
—BGM—
ஆண் : இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்…
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன்…
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்…
இடைவேளை இல்லை தொடருவேன்…
இடைவேளை இல்லை தொடருவேன்…
பெண் : கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்…
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்…
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்…
இனி என்ன செய்வது அறியேன்…
இனி என்ன… ஹ்ம்ம்…
ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
—BGM—
Notes : Malaikatru Vandhu Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Vairamuthu. மழைக்காற்று வந்து பாடல் வரிகள்.