பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர் | எஸ். ஏ. ராஜ்குமார் | ப்ரியமானவளே |
Enakoru Snegidhi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…
ஆண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் மெல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…
ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…
பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் செல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…
—BGM—
ஆண் : மேகமது சேராது…
வான் மழையும் வாராது…
தனிமையில் தவித்தேனே…
உன்னை எண்ணி இளைத்தேனே…
பெண் : மேல் இமையும் வாராது…
கீழ் இமையும் சேராது…
உனக்கிது புரியாதா…
இலக்கணம் தெரியாதா…
ஆண் : சம்மதங்கள் உள்ள போதும்…
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்…
பெண் : வார்த்தை வந்து சேரும் போது…
நாணம் என்னை கட்டிப்போடும்…
ஆண் : மௌனம் ஒன்று போதும் போதுமே…
கண்கள் பேசிவிடுமே…
—BGM—
ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…
—BGM—
பெண் : கைவளையல் குலுங்காமல்…
கால் கொலுசும் சிணுங்காமல்…
அணைப்பது சுகமாகும்…
அது ஒரு தவமாகும்…
ஆண் : மோகம் ஒரு பூப்போல…
தீண்டியதும் தீப்போல…
கனவுகள் ஒருகோடி…
நீ கொடு என் தோழி…
பெண் : உன்னைத்தந்து என்னை நீயும்…
வாங்கி கொண்டு நாட்களாச்சு…
ஆண் : உன்னை தொட்ட பின்புதானே…
முட்கள் கூட பூக்களாச்சு…
பெண் : விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால்…
விறகும் வீணையாகும்…
—BGM—
ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…
பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால்…
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்…
பூக்களின் காதில் செல்லமாய்…
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…
—BGM—
Notes : Enakoru Snegidhi Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. எனக்கொரு சினேகிதி பாடல் வரிகள்.