பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | ஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர் & நின்சி வின்சென்ட் | ஹாரிஸ் ஜெயராஜ் | மாற்றான் |
Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…
ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…
ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…
பெண் : வால் முளைத்த காற்றே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…
—BGM—
ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே…
மலர்களின் மமதை அழிந்ததே…
கடவுளின் கடமை முடிந்ததே…
அழகி நீ பிறந்த நொடியிலே…
பெண் : தலைகள் குனிந்ததோ…
மமதை அழிந்ததோ…
கடமை முடிந்ததோ…
பிறந்த நொடியிலே…
ஆண் : ஹே பெண்ணே… ஹே பெண்ணே…
உன் வளைவுகளில்…
தொலைவதுபோலே உணருகிறேன்…
இடையினிலே திணறுகிறேன்…
கனவிதுதானா வினவுகிறேன்…
—BGM—
ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…
—BGM—
பெண் : இரவெலாம் நிலவு எரிகையில்…
திரிகளாய் விரல்கள் திரியுதே…
அருகிலே நெருங்கி வருகையில்…
இளகியே ஒழுக்கம் உருகுதே…
ஆண் : நிலவு எரிகையில்…
விரல்கள் திரியுதோ…
நெருங்கி வருகையில்…
ஒழுக்கம் உருகுதோ…
பெண் : எனை ஏனோ… எனை ஏனோ…
உருக்குகிறாய்…
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்…
இடைவெளியை சுருக்குகிறாய்…
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்…
—BGM—
ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
பெண் : வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…
ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…
ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…
ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…
Notes : Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Madhan Karky. கால் முளைத்த பூவே பாடல் வரிகள்.