பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | கார்த்திக் | ஹாரிஸ் ஜெயராஜ் | மாற்றான் |
Yaaro Yaaro Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…
ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ…
காலம் தாண்டி செல்வாயோ…
கண்ணீர் விட்டு கரையும்…
என்னை காப்பாயோ…
ஆண் : இது கனவா கனவா…
இல்லை நெனவா நெனவா…
இது கணவாய் இருந்தால்…
கலைந்தே போகும் போகட்டும்…
ஆண் : இது நிழலா நிழலா…
இல்லை ஒளியா ஒளியா…
இது நிழலாய் இருந்தால்…
இருளில் கரைந்தே மறையட்டும்…
ஆண் : ஹோ… யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…
—BGM—
ஆண் : முதல் முறை இங்கு நீ இன்றி…
நடக்கிறேன் தனியாக…
இறந்தும் உன் மூச்சு காற்றை…
உணர்கிறேன் இதமாக…
ஆண் : சரிபாதி இரவும் பகலும்…
என்கூறியே உலகம் சுழலும்…
ஒரு பாதியே பிரிந்தே…
போனால் என்னாகும்…
ஆண் : நினைவால் இனி நான் வாழ…
நதி போல் இனி நாள் போக…
எதனால் இனி ஆறும் ஆறும்…
என் காயம்…
ஆண் : யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…
—BGM—
ஆண் : கனாக்களில் வரும் பெண் பின்பம்…
திகைக்கிறேன் யார் என்று…
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்…
முறைக்கிறாய் நீ நின்று…
ஆண் : கனகாம்பர இதழை விரித்து…
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து…
திரும்பாமலே நடந்தால் சென்றால்…
எது மிஞ்சும்…
ஆண் : நிறமாலையை போல் நெஞ்சம்…
நெளிந்தாடிடும் பல வண்ணம்…
உன்னை பார்த்ததும் பாராதது போல்…
சிறு வஞ்சம்…
உன்னை பார்த்ததும் பாராதது போல்…
சிறு வஞ்சம்…
ஆண் : யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…
ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ…
காலம் தாண்டி செல்வாயோ…
கண்ணீர் விட்டு கரையும்…
என்னை காப்பாயோ…
ஆண் : இது கனவா கனவா…
இல்லை நெனவா நெனவா…
இது கணவாய் இருந்தால்…
கலைந்தே போகும் போகட்டும்…
ஆண் : இது நிழலா நிழலா…
இல்லை ஒளியா ஒளியா…
இது நிழலாய் இருந்தால்…
இருளில் கரைந்தே மறையட்டும்…
Notes : Yaaro Yaaro Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Thamarai. யாரோ யாரோ பாடல் வரிகள்.