பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர் | வித்யாசாகர் | கோயமுத்தூர் மாப்ளே |
Oru Thethi Parthal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…
ஆண் : முதல் முதல் தொடும் போது…
மடல் விடும் உயிர் காதல்…
வா வா எந்தன் வாழ்வே…
ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…
—BGM—
பெண் : பார்வை மீது உந்தன் பேரழகே…
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி…
ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி…
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி…
பெண் : கோடையிலும் இதழ் காய்வதில்லை…
ஆசையின் அலைதான் ஓய்வதில்லை…
ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை…
தேவனின் விதியில் மாற்றம் இல்லை…
பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான்…
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்…
ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…
—BGM—
ஆண் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை…
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை…
பெண் : ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை…
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை…
ஆண் : தாமரையே சிறு வான்பிறையே…
மார்பினில் வழியும் தேன் மழையே…
பெண் : காதலனே இசை பாடகனே…
கீதங்கள் பொழியும் பாவலனே…
ஆண் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே…
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே…
ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…
ஆண் : முதல் முதல் தொடும் போது…
மடல் விடும் உயிர் காதல்…
ஆண் & பெண் : வா வா எந்தன் வாழ்வே…
ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…
Notes : Oru Thethi Parthal Song Lyrics in Tamil. This Song from Coimbatore Mappillai (1996). Song Lyrics penned by Vaali. ஒரு தேதி பார்த்தால் பாடல் வரிகள்.