பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | அக்னி நட்சத்திரம் |
Thoongatha Vizhigal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
—BGM—
ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…
ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…
—BGM—
ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
—BGM—
பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…
ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…
பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…
ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…
பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…
—BGM—
பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.