பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் | எஸ்.ஏ. ராஜ்குமார் | என்னவளே |
Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…
ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…
—BGM—
ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
—BGM—
ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…
ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…
ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…
ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…
—BGM—
ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
—BGM—
ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…
ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…
ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…
ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…
ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…
—BGM—
ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…
ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…
—BGM—
Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.