ஆண் : புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து… புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து… கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து… காதல் வந்ததே…
ஆண் : இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து… இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து… இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து… காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே…
ஆண் : முட்டி வழிகின்ற அருவி நிறுத்து… சுற்றி வருகின்ற பூமி நிறுத்து… பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து…
ஆண் : இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்… அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்… நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும்… நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்…
ஆண் : கண்ணசைவில் மின்னல் விழ… புன்னகையில் பூக்கள் விழ… கை அசைவில் வானம் விழ… பெண் அசைவில் நானும் விழ…
ஆண் : காதல் வந்ததே… காதல் வந்ததே… காதல் வந்ததே… காதல் வந்ததே…
ஆண் : காதில் வேல் வீசும் கொலுஸை நிறுத்து… சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து… வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து…
ஆண் : கண்கள் கள வாடும் மின்னல் நிறுத்து… கதறி அழுகின்ற இடி யை நிறுத்து… கத்தி எழுகின்ற மலையை நிறுத்து…
ஆண் : அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்… இதழ் வழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்… அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும்… அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்…
ஆண் : சிந்தி விழும் முதல் மழை… வந்து விழும் முதல் அலை… எந்திரிக்கும் முதல்வரை… சுந்தரிக்கு சொந்தமாகவே…
ஆண் : காதல் வந்ததே… காதல் வந்ததே… காதல் வந்ததே… காதல் வந்ததே…
ஆண் : புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து… புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து… கிசு-கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து… காதல் வந்ததே…
ஆண் : இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து… இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து… இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து… காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே…
ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய்நாராயணன், அனந்து, பிரதீப் குமார் & சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்
வடசென்னை
Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்… காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…
ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில்… நான் கைமீறி சேர்ந்த தேயிலை… கன்னங்கள் மூடி ஓரமாய்… நீ நின்றாலே அன்றே தேய்பிறை…
ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்… இறகாய் உன் விழியே கேட்கிறேன்… உளியே உன் உரசல் ஏற்கிறேன்… உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்… காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…
ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்… அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்… இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்… அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…
—BGM—
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே…
—BGM—
ஆண் : காலக வழியிலே கனவுகள்… கண்ணாடி கோப்பை ஆழியில்… நான் கைமீறி சேர்ந்த தேயிலை… கன்னங்கள் மூடி ஓரமாய்… நீ நின்றாலே அன்றே தேய்பிறை…
ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்… இறகாய் உன் விழியே கேட்கிறேன்… உளியே உன் உரசல் ஏற்கிறேன்… உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்… காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…
—BGM—
ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்… அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்… இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்… அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…
—BGM—
ஆண் : உன் கொட்டம் பார்த்து… பூ வட்டம் பார்த்து… கண் விட்டம் பார்த்து… தீ பற்றும் காற்று…
ஆண் : தோல் மச்சம் பார்த்து… மேல் மிச்சம் பார்த்து… தேன் லட்சம் பார்த்து… நடை பிழறிற்று…
ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன்… என்னையே வழி மொழிகிறேன்…
ஆண் : எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே… இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே… எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே… கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே…
ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்… விறகாய் உன் விழியே கேட்கிறேன்… உளியே உன் உரசல் ஏற்கிறேன்… உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்… காலக வழியிலே கனவுகள்…
Notes : Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Vivek. கார்குழல் கடவையேபாடல் வரிகள்.
பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே… என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை… கண்ட கனவும் வீணாய் போகுமா…
பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே… என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை… கண்ட கனவும் வீணாய் போகுமா… தங்க வளையல் தாம்பாய் மாறுமா… ஆஆ… தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா…
—BGM—
ஆண் : தன்னை தந்தே வாழும்… உன்னை போலே யாரும்… கனாவிலும் கண்டேன் இல்லையே…
ஆண் : கடல் தூங்கும் ஆழம்… நெடும் வானின் நீளம்… எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே…
ஆண் : விழி நீரை சிந்த கூடாதே… அதை வீடு என்றும் தாங்காதே… இந்த தீயை ஆற்றுவேன்… நீரை ஊற்றுவேன்… பாதை மாற்றுவேன்…
—BGM—
Notes : Enna Kurai Song Lyrics in Tamil. This Song from Valimai (2022). Song Lyrics penned by Thamarai. என்ன குறைபாடல் வரிகள்.
ஆண் : இளங்காத்து வீசுதே… இசை போல பேசுதே… வளையாத மூங்கிலில்… ராகம் வளைஞ்சு ஓடுதே… மேகம் முழிச்சு கேக்குதே…
பெண் : கரும்பாறை மனசுல… மயில் தோகை விரிக்குதே… மழைச்சாரல் தெரிக்குதே… புல்வெளி பாதை விரிக்குதே… வானவில் குடையும் புடிக்குதே… புல்வெளி பாதை விரிக்குதே… வானவில் குடையும் புடிக்குதே…
ஆண் : மணியின் ஓசை கேட்டு… மனக்கதவு திறக்குதே… புதிய தாளம் போட்டு… உடல் காற்றில் மிதக்குதே…
ஆண் : இளங்காத்து வீசுதே… இசை போல பேசுதே…
பெண் : வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே… மேகம் முழிச்சு கேக்குதே…
—BGM—
பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்… நெஞ்சை அள்ளும் வண்ணத்துணி போல… ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு… உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு…
ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்… அன்னமடி இந்த நிலம் போல… சிலருக்குத்தான் மனசு இருக்கு… உலகம் அதில் நிலைச்சு இருக்கு…
ஆண் : நேத்து தனிமையில போச்சு… யாரும் துணை இல்ல… யாரோ வழித்துணைக்கு வந்தால்… ஏதும் இணை இல்லை…
பெண் : உலகத்தில் எதுவும்… தனிச்சு இல்லையே… குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…
ஆண் : இளங்காத்து வீசுதே… இசை போல பேசுதே…
பெண் : வளையாத மூங்கிலில்… ராகம் வளைஞ்சு ஓடுதே… மேகம் முழிச்சு கேக்குதே…
—BGM—
ஆண் : ஓ… மனசுல என்ன ஆகாயம்… தினம்தினம் அது புதிர் போடும்… ரகசியத்தை யாரு அறிஞ்சா… அதிசயத்தை யாரு புரிஞ்சா…
பெண் : விதை விதைக்கிற கைதானே… மலர் பறிக்குது தினம்தோறும்… மலர் தொடுக்க நாரை எடுத்து… யார் தொடுத்தா மாலையாச்சு…
ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்… ஆடும் கிளி எல்லாம்… மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்… தாலாட்டு கேட்டிடாமலே… தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல…
பெண் : கரும்பாறை மனசுல… மயில் தோகை விரிக்குதே… மழைச்சாரல் தெரிக்குதே… புல்வெளி பாதை விரிக்குதே…
ஆண் : வானவில் குடையும் புடிக்குதே… புல்வெளி பாதை விரிக்குதே… வானவில் குடையும் புடிக்குதே…
ஆண் : மணியின் ஓசை கேட்டு… மனக்கதவு திறக்குதே…
பெண் : புதிய தாளம் போட்டு… உடல் காற்றில் மிதக்குதே…
—BGM—
Notes : Elangaathu Veesudhey Song Lyrics in Tamil. This Song from Pithamagan (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. இளங்காத்து வீசுதேபாடல் வரிகள்.