Category Archives: 1998 Movies

1998 Movies

நான் ஆளான தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Naan Aalana Thamarai Song Lyrics in Tamil


BGM

பெண் : இஸ் ஆஆ… நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

BGM

பெண் : மாமி மடிசார பாத்து…
உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்…
புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞ்சுகிட்டேன்…

பெண் : இன்னு எண்ணம் தள்ளி வச்சா…
என் உடம்பு தாங்காது…
உங்களதான் எண்ணி இந்த கண்ணு…
ரெண்டும் தூங்காது…

பெண் : உங்க மார்மேல சாயணும்…
மடிமேல ஆடணும்…
தடுப்பேளா இடம் கொடுப்பேளா…

பெண் : வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

BGM

பெண் : நேத்து ருதுவான சீதா…
இப்ப நாலு மாசம் மூனு வாரம்…
குளிக்கலயாம் குளிர் புளிக்கலயாம்…

பெண் : புள்ள வரம் இல்லையின்னா இல்லறமே பாவோம்னா…
புத்திகெட்ட சத்தியத்தை வித்துப்புட்டு வாங்கோனா…

பெண் : உங்க வேண்டாத ரோஷமும் வீம்பான கோபமும்…
விடுங்கோனா கட்டி புடிங்கோனா…

பெண் : எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
சொல்ல சொல்ல நில்லுங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…


Notes : Naan Aalana Thamarai Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Vaali. நான் ஆளான தாமரை பாடல் வரிகள்.


நாடோடி பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரவிசங்கர்எஸ். பி. பாலசுப்ரமணியம்அகோஷ்அரிச்சந்திரா

Naadodi Paattu Paada Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…

ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…

ஆண் : இருபது வயதில் வருவதுதானா காதல்…
அறுபது வரையில் தொடர்வதுதானே காதல்…
சிரிக்கிற போது சிரிப்பதுதானா காதல்…
அழுகிற போது ஆறுதல்தானே காதல்… ஹேய்…

ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…
காதலை நான் பாடவா… ஹேய்…
பூவிலே தேன் தேடவா…

BGM

ஆண் : கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது…
மடியாக வேண்டுமே…
தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது…
பிடியாக வேண்டுமே…

ஆண் : உன் உள்ளம் நான் கண்டு…
என் உள்ளம் நீ கண்டு…
உனக்காக நான் உண்டு…
என்று வாழும் காதல்தானே காதல்…

ஆண் : மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல்…
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல்… ஹேய்…

ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…

ஆண் : ஏஏஏ… தந்தன தானே தானனே…
ஹேய் தந்தன தானே தானனே…

BGM

ஆண் : கங்கை நதி என்ன காவேரி என்ன…
எல்லாமே பெண்மையே…
நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி…
அது கூட பெண்மையே…

ஆண் : நாடாளும் ஆணுக்கும்…
வீடாள பெண் வேண்டும்…
கடல் போன்ற வாழ்வினில்…
கலங்கரை விளக்கம்தானே பெண்மை…

ஆண் : பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும்…
பௌர்ணமிதானே வாழ்வில் எந்த நாளும்… ஹேய்…

ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…

ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…

BGM


Notes : Naadodi Paattu Paada Song Lyrics in Tamil. This Song from Harichandra (1998). Song Lyrics penned by Ravishankar. நாடோடி பாட்டு பாடல் வரிகள்.


என்ன இது கனவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரவிசங்கர்மனோ & சுஜாதா மோகன்அகோஷ்அரிச்சந்திரா

Enna Idhu Kanavaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் என்ன இது கனவா…
இல்லை இது நிஜமா…
ஹேய் மன்மதனின் ஜன்னல்…
சொல்லாமல் திறக்குது சுகமா…

ஆண் : ஹேய் என்ன இது கனவா…
இல்லை இது நிஜமா…
ஹேய் வண்ண வண்ண மின்னல்…
என் மீது அடிக்குது சுகமா…

பெண் : ஹேய் பகலிலே அந்த நிலவினை அழைத்து…
பேசினேன் உன் காதலினாலே…

ஆண் : இரவிலே ஒரு தாமரை மலரும்…
அதிசயம் நான் கண்டேன் அழகிலே…

பெண் : என்ன இது கனவா…
இல்லை இது நிஜமா…
ஹேய் மன்மதனின் ஜன்னல்…
சொல்லாமல் திறக்குது சுகமா…

BGM

ஆண் : நிலவில் செய்த சிலையே உன்னை…
இரவில் பூஜை செய்யட்டுமா…

BGM

பெண் : ஹேய்… கனவில் பொழியும் மழையே உன்னை…
மடியில் கொஞ்சம் வாங்கட்டுமா…

ஆண் : ஹோ ஓ… வெட்கம் வந்தால் பெண்ணின் வண்ணம்…
வானவில்லாய் ஆகுமா…

பெண் : காதல் வந்தால் வார்த்தை எல்லாம்…
கவிதையாக மாறுமா…

ஆண் : ஹேய்… கவிதைகூட பொய்கள் பேசும்…
காதல் பொய்கள் பேசுமா…

ஆண் : என்ன இது கனவா…
இல்லை இது நிஜமா…
ஹேய் வண்ண வண்ண மின்னல்…
என் மீது அடிக்குது சுகமா…

BGM

ஆண் : ஹோஓ… சேலை காற்று என்மேல் இங்கே…
பூவை அள்ளி வீசியதே…

BGM

பெண் : ஹேய்… உந்தன் பார்வை மயிலிறகாகி…
மனசுக்குள்ளே கூசியதே…

ஆண் : ஹாஆஅஆ… வளையல் சத்தம் கொலுசு சத்தம்…
பூவுக்குள்ளே கேட்க்குதே…

பெண் : மொட்டுகுள்ளே மாட்டி கொண்டு…
தென்றல் இங்கே வேர்க்குதே…

ஆண் : ஹோய்… வேர்க்க வேர்க்க பார்க்கும்போது…
பூவின் அழகு கூடுதே…

பெண் : என்ன இது கனவா…
ஆண் : ஹான்…
பெண் : இல்லை இது நிஜமா…
ஆண் : ஹஹஹா…
பெண் : ஹேய் மன்மதனின் ஜன்னல்…
ஆண் : ஹ்ம்ம்…
பெண் : திறக்குது சுகமா…

பெண் : ஹேய் பகலிலே அந்த நிலவினை அழைத்து…
பேசினேன் உன் காதலினாலே…

ஆண் : இரவிலே ஒரு தாமரை மலரும்…
அதிசயம் நான் கண்டேன் அழகிலே…

பெண் : என்ன இது கனவா…
ஆண் : ஹா ஹா ஹான்…
பெண் : இல்லை இது நிஜமா…
ஆண் : ஹம் ஹம்ம் ஹ்ம்ம்…

பெண் : ஹேய்… மன்மதனின் ஜன்னல்…
ஆண் : லல லா
பெண் : சொல்லாமல் திறக்குது சுகமா…

பெண் : ஹேய்… பகலிலே அந்த நிலவினை அழைத்து…
பேசினேன் உன் காதலினாலே…

ஆண் : ஹேய் ஏய்… இரவிலே ஒரு தாமரை மலரும்…
அதிசயம் நான் கண்டேன் அழகிலே…


Notes : Enna Idhu Kanavaa Song Lyrics in Tamil. This Song from Harichandra (1998). Song Lyrics penned by Ravishankar. என்ன இது கனவா பாடல் வரிகள்.


கடலம்மா கடலம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்நிலாவே வா

Kadalamma Kadalamma Song Lyrics in Tamil


{ குழு : தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா… } * (2)

குழு : தையார தை யார தைய தோம்…
தையார தை யார தைய தோம்…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு…
நாக்கு மட்டும் ஒட்டிவிட்டதே…

பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில்…
இப்ப ரொம்ப இத்துவிட்டதே…

ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்…
நெஞ்சு வேகாது கண்ணம்மா…

பெண் : உன்ன காணாம உயிர் சேராம…
என் கண்ணீரு தீருமா…

ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்…
கடலுக்கு சொந்தமடி…

பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா…
எடுத்துக்க நல்லபடி…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

பெண் : தூதுவிட்ட அலை அட எந்த அலையோ…
என்ன வந்து சேரலையே…

ஆண் : தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்…
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே…

பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம…
நான் நின்னேனே ஊமையா…

ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்…
இந்த கண்ணீரு தேவையா…

பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில…
கரையே மூழ்கிடுமோ…

ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில…
கடலே மூழ்கிடுமோ…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

BGM


Notes : Kadalamma Kadalamma Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. கடலம்மா கடலம்மா பாடல் வரிகள்.


தத்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்சுவர்ணலதா & இலா அருண்இளையராஜாகாதல் கவிதை

Thathom Thakathimi Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

பெண் : என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு நான் வயாகரா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

BGM

பெண் : யுத்தம் செய்யாத நேரம்…
நீ மோகம் கொண்டு போராடு…

BGM

பெண் : முத்தம் என்றாலே யாகம்…
வாய் நீரில் நீயும் நீராடு…

BGM

பெண் : எந்தப் பூவில் என்ன வாசம்…
மன்னன் போலே நீ தேடு…
கையில் கோப்பை பெண்ணை ஏந்து…
கண்ணதாசன் போல் பாடு…

பெண் : கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு…
நீயும் என்னோடு தேடுவது நூறு…
வாவா வாவா வாரேவா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

BGM

பெண் : செவ்வாய் மீதேறி நாமே…
அதை காதல் தேசம் செய்வோமே…

BGM

பெண் : பூமி உள்ளே போய் நாமே…
ஒரு ஆசை தீயாய் ஆவோமே…

BGM

பெண் : மேகம் ஆகி வானம் போவோம்…
மீண்டும் நீராய் நாம் மாற…
மண்ணின் மீது தூரல் ஆவோம்…
மீண்டும் ஆறாய் நாம் ஓட…

பெண் : காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா…
காற்றே தீயோடு மோதிக் கொள்ள…
வாவா வாவா வாரேவா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

பெண் : ஹேய்… என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…


Notes : Thathom Thakathimi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. தத்தோம் பாடல் வரிகள்.


காலையில் பூக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & கே. எஸ். சித்ராதேவாகாதலே நிம்மதி

Kalayil Pookum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
பெண் : எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…

ஆண் : பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
பெண் : முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்…

பெண் : வானம் சென்று நீலம் கொள்வோம்…
ஆண் : காதல் கொண்டு காலம் வெல்வோம்…
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

BGM

பெண் : காதலுக்கும் கற்பு உண்டு சொல் சொல்…
ஆண் : ஆ… கற்பு மட்டும் காதல் இல்லை சொல் சொல்…

பெண் : ஞானி தன்னை காதல் வெல்லும் சொல் சொல்…
ஆண் : காதலுக்கும் ஞானம் உண்டு சொல் சொல்…

பெண் : நூற்றாண்டே நூற்றாண்டே…
நொடியினில் கடந்தவர் யாரோ…

ஆண் : காற்றே சொல் காற்றே சொல்…
காதலில் வென்றவர்தானோ…

பெண் : பௌர்ணமி மடி தர வியர்வைகள் உடைதர…
மன்மதம் மலர்கிறதே…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

BGM

ஆண் : காதலுக்கு நேர்மை உண்டு சொல் சொல்…
பெண் : நேர்மையிலும் தூய்மை உண்டு சொல் சொல்…

ஆண் : காதலுக்கு ஆண்மை உண்டு சொல் சொல்…
பெண் : ஆண்மைக்குள்ளும் தாய்மை உண்டு சொல் சொல்…

ஆண் : கண்ணாலே கண்ணாலே காதலை வணங்கிடதானே…
பெண் : வந்தோமே வந்தோமே காதலின் பிள்ளைகள் நாமே…

ஆண் : கவிதைகள் வழி விட கனவுகள் விடை பெற…
திடும் என விடிகிறதே…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

ஆண் : காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே… ஏஹேய்…
பெண் : எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே…

ஆண் : பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
பெண் : முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்…

பெண் : வானம் சென்று நீலம் கொள்வோம்…
ஆண் : காதல் கொண்டு காலம் வெல்வோம்…
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் & பெண் : காதலே நிம்மதி…


Notes : Kalayil Pookum Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Arivumathi. காலையில் பூக்கும் பாடல் வரிகள்.


இந்த தேவதைக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிசங்கீதாதேவாகாதலே நிம்மதி

Indha Devathaikku Song Lyrics in Tamil


பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா… ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

BGM

{ பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா… } * (2)

BGM

{ குழு : ஹோய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே… } * (2)

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே…
தாங்காத வெட்கத்திலே…
குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே…
தாங்காத வெட்கத்திலே…
தேனிலவு பாத்துப்புட்டா துள்ளி ஓடும் மனசுக்குள்ள…

பெண் : போர்வை எல்லாம் எடுத்துக்குவாளாம்…
அட பொடவையத்தான் மறந்திடுவாளா…
மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா…
அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா…

குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

BGM

பெண் : கனவுக்குள்ள ஆஜராக…
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்…
குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…

பெண் : கனவுக்குள்ள ஆஜராக…
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்…
சம்மனோட போன பொண்ண…
சம்மதிக்க வச்சுப்புட்டான்…

பெண் : ஹார்ட்டுக்குள்ளே நோட்டம் விட்டேண்டி…
இவ நோக்கமெல்லாம் புரிஞ்சுக்கிட்டேண்டி…
சொல்ல சொன்னா கன்னம் செவக்குறா…
அடி மென்னு முழுங்கி தண்ணீ குடிக்கிறா…

குழு : ஆ அக்கா ஆ அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

{ பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா… } * (2)

BGM


Notes : Indha Devathaikku Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Arivumathi. இந்த தேவதைக்கு பாடல் வரிகள்.


கங்கை நதியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாதலே நிம்மதி

Gangai Nathiye Song Lyrics in Tamil


குழு : லாலி லாலி லாலி லாலி…
லாலி லாலி லாலி லாலி…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்…
உந்தன் நிலை என்ன…
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்…
இந்த உறவென்ன…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம்…
பூவை அறியாதே…
இருளில் வசித்திருக்கும் இதயம்…
நிழலை அறியாதே…

ஆண் : மூடு பனியினிலே இப்போது…
வழிகள் தெரியாதே…
வீசும் புயலினிலே அம்மம்மா…
தீபம் எரியாதே…

ஆண் : பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று…
ஓசை கிடையாதே…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

குழு : லாலி லாலி லாலி லாலி…

ஆண் : விதியின் விளையாட்டு எப்போது…
முடியும் தெரியாதே…
விடியும் திசை என்ன இப்போது…
அதுவும் தெரியாதே…

ஆண் : நாளை எது வாழ்க்கை அன்பே நீ…
சொல்லி நடப்பாயோ…
பாசம் தாளாமல் அங்கேயும்…
உள்ளம் துடிப்பாயோ…

ஆண் : காலம் செய்த கோலம் என்று…
துன்பம் பொறுப்பாயோ…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

BGM

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்…
உந்தன் நிலை என்ன…
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்…
இந்த உறவென்ன…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…


Notes : Gangai Nathiye Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கங்கை நதியே பாடல் வரிகள்.


காதல் மீதில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிஹரன்இளையராஜாகாதல் கவிதை

Kadhal Meethu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசம் மிக்க மலர்களைக் கொண்டு…
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்…
என் நெஞ்சில் வாசம் செய்பவள்…
எங்கும் வாசம் செய்கிறாள்…
எங்கோ வாசம் செய்கிறாள்…

BGM

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…

BGM

ஆண் : எண்ணங்கள் நீயில்லையா…
உன் எண்ணத்தில் நானில்லையா…
என் பாடல் உனதில்லையா…
அது உன் காதில் விழவில்லையா…

ஆண் : அன்னை மனம் கொண்ட பெண்ணே…
உன்னை தினம் காண மனம் ஏங்கும்…
என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு…
எந்தன் மனம் தூங்கும்…

ஆண் : ஓ… நீயாக இதயத்தை தந்தாயே…
காணாமல் ஏனோ நீ சென்றாயே…
நானும் பாட…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

BGM

ஆண் : நானாக நான் இல்லையே திருநாளில்லை நீ இல்லையேல்…
தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே…

ஆண் : நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும்…
தேடும் வானம் பாடி…
நான் அலைந்த சேதி எல்லாம் காற்று வந்து…
சொல்லும் உன்னைத் தேடி…

ஆண் : நேராக நீ வந்து சொல்வாயா…
நீ இல்லை என்றேனும் சொல்வாயா…
நானும் வாழ…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே…

ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…


Notes : Kadhal Meethu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. காதல் மீதில் பாடல் வரிகள்.


கந்தன் இருக்கும் இடம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசபேஷ்தேவாகாதலே நிம்மதி

Kandan Irukkum Idam Song Lyrics in Tamil


ஆண் : க ச ட த ப ற ய ர ல வ ழ ள…
ங ஞ ந ண ம ன இலக்கணம்… ம்ம்ம்…

ஆண் : கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி…
எடுப்பவதான் பெண் இனம்…
அவளே லவ் இனம் நம்ம லவ் இனம்…

ஆண் : கந்தா…
குழு : கந்தா…
ஆண் : கதிர் வேலா…
குழு : கதிர் வேலா…
ஆண் : தம்பி பாலா…
ஆண் : அவ வருவாளா…

BGM

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…

BGM

ஆண் : என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

BGM

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

ஆண் : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

குழு : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

BGM

ஆண் : கோபப்படமாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு…
வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு…

BGM

ஆண் : திரும்பி கூட பார்க்கமாட்டா திருச்சிக்கார பொண்ணு…
சீக்கிரத்தில் சிரிக்கமாட்டா சிவகாசி பொண்ணு…

ஆண் : ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா…
தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா…
கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா…
நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா…

ஆண் : ஜானு புள்ளடா இவன் ஆணு புள்ளடா…
சைட் அடிக்கத்தான் இவன் பொறந்திருக்கான்டா…
பாலு பூத்து பக்கத்தில பால் வடிய பார்த்து நின்னான்…
நைனா இவ நைனா…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

குழு : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
அண்ணன் காதலி இருக்குமிடம் போயஸ்தோட்டம்…

BGM

ஆண் : கலங்கிடத்தான்மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு…
மயங்கிடத்தான்மாட்டா நம்ம மதுரைக்கார பொண்ணு…

BGM

ஆண் : எப்பா வாயத் தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு…
சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு…

ஆண் : ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா…
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா…
கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா…
பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா…

ஆண் : காதல் என்னடா அதை காதில் சொல்லடா…
சிக்னல் காட்டினா நீ சிரிச்சு பேசுடா…
ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன்…
ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா இவ நைனா…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பார்த்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

ஆண் : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

குழு : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

BGM


Notes : Kandan Irukkum Idam Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கந்தன் இருக்கும் இடம் பாடல் வரிகள்.