பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ரவிசங்கர் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | அகோஷ் | அரிச்சந்திரா |
Naadodi Paattu Paada Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…
ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…
ஆண் : இருபது வயதில் வருவதுதானா காதல்…
அறுபது வரையில் தொடர்வதுதானே காதல்…
சிரிக்கிற போது சிரிப்பதுதானா காதல்…
அழுகிற போது ஆறுதல்தானே காதல்… ஹேய்…
ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…
காதலை நான் பாடவா… ஹேய்…
பூவிலே தேன் தேடவா…
—BGM—
ஆண் : கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது…
மடியாக வேண்டுமே…
தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது…
பிடியாக வேண்டுமே…
ஆண் : உன் உள்ளம் நான் கண்டு…
என் உள்ளம் நீ கண்டு…
உனக்காக நான் உண்டு…
என்று வாழும் காதல்தானே காதல்…
ஆண் : மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல்…
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல்… ஹேய்…
ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…
ஆண் : ஏஏஏ… தந்தன தானே தானனே…
ஹேய் தந்தன தானே தானனே…
—BGM—
ஆண் : கங்கை நதி என்ன காவேரி என்ன…
எல்லாமே பெண்மையே…
நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி…
அது கூட பெண்மையே…
ஆண் : நாடாளும் ஆணுக்கும்…
வீடாள பெண் வேண்டும்…
கடல் போன்ற வாழ்வினில்…
கலங்கரை விளக்கம்தானே பெண்மை…
ஆண் : பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும்…
பௌர்ணமிதானே வாழ்வில் எந்த நாளும்… ஹேய்…
ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…
ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…
—BGM—
Notes : Naadodi Paattu Paada Song Lyrics in Tamil. This Song from Harichandra (1998). Song Lyrics penned by Ravishankar. நாடோடி பாட்டு பாடல் வரிகள்.