நாடோடி பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரவிசங்கர்எஸ். பி. பாலசுப்ரமணியம்அகோஷ்அரிச்சந்திரா

Naadodi Paattu Paada Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…

ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…

ஆண் : இருபது வயதில் வருவதுதானா காதல்…
அறுபது வரையில் தொடர்வதுதானே காதல்…
சிரிக்கிற போது சிரிப்பதுதானா காதல்…
அழுகிற போது ஆறுதல்தானே காதல்… ஹேய்…

ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…
காதலை நான் பாடவா… ஹேய்…
பூவிலே தேன் தேடவா…

BGM

ஆண் : கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது…
மடியாக வேண்டுமே…
தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது…
பிடியாக வேண்டுமே…

ஆண் : உன் உள்ளம் நான் கண்டு…
என் உள்ளம் நீ கண்டு…
உனக்காக நான் உண்டு…
என்று வாழும் காதல்தானே காதல்…

ஆண் : மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல்…
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல்… ஹேய்…

ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…

ஆண் : ஏஏஏ… தந்தன தானே தானனே…
ஹேய் தந்தன தானே தானனே…

BGM

ஆண் : கங்கை நதி என்ன காவேரி என்ன…
எல்லாமே பெண்மையே…
நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி…
அது கூட பெண்மையே…

ஆண் : நாடாளும் ஆணுக்கும்…
வீடாள பெண் வேண்டும்…
கடல் போன்ற வாழ்வினில்…
கலங்கரை விளக்கம்தானே பெண்மை…

ஆண் : பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும்…
பௌர்ணமிதானே வாழ்வில் எந்த நாளும்… ஹேய்…

ஆண் : காதலை நான் பாடவா…
பூவிலே தேன் தேடவா…

ஆண் : நாடோடி பாட்டு பாட…
தந்தன தந்தன தாளம்…
நாடெங்கும் காதலாலே…
நெஞ்சினில் ஆயிரம் தாளம்…

BGM


Notes : Naadodi Paattu Paada Song Lyrics in Tamil. This Song from Harichandra (1998). Song Lyrics penned by Ravishankar. நாடோடி பாட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top