பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | ஜல்லிக்கட்டுக் காளை |
Thookanakuruvi Song Lyrics in Tamil
பெண் : சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள…
சிரிச்சு கட்டின வீடு…
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா…
சென்ன பட்டணம் பாதி…
—BGM—
குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
ஆண் : பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…
குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…
பெண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
—BGM—
ஆண் : பூத்த மல்லிகை வேர்த்திருந்தது…
நான் தொடும் போது…
பெண் : அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது…
தேன் தரும் போது…
ஆண் : ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது…
உன் மனம்தானே…
பெண் : மனம் சாந்தம் கொண்டதும்…
சரசம் செய்வதும் உன் விரல்தானே…
ஆண் : கோடியிலே நீ ஒருத்தி…
கொத்து விட்ட செம்பருத்தி…
பெண் : காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…
ஆண் : மனம் பாடிப் பாடி…
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே…
குழு : பொன்னம்மா கண்ணம்மா…
பூவெடுத்து போடம்மா
ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
—BGM—
பெண் : ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்…
ஆண் : அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்…
பெண் : கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே…
ஆண் : உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே…
பெண் : பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…
ஆண் : தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…
பெண் : அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே…
குழு : அம்மம்மா மாப்பிள்ளை…
ஏங்குவது நியாயமா
ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
பெண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…
குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…
குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
Notes : Thookanakuruvi Song Lyrics in Tamil. This Song from Jallikattu Kaalai (1994). Song Lyrics penned by Kalidasan. தூக்கணாங்குருவி பாடல் வரிகள்.