Category Archives: 1998 Movies

1998 Movies

நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


மஞ்ச மஞ்சளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்பி. உன்னி கிருஷ்ணன்தேவாஇனியவளே

Manja Manjala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு…
நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு…
நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா…
நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…
ஜோரான நடைய போட்டு…
தங்கமே கலகலக்க வைக்கிற…
மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற…

BGM

ஆண் : காஞ்சிபுரம் சேலை கட்டி…
கடைத் தெருவில் போற குட்டி…
கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா…
உன்ன கையாள தொட்டா ஏதும் பட்டிடுமா…

BGM

ஆண் : ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம்…
காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம்…
நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல…
நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…
ஆண் : அப்படி…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…

ஆண் : அழகழகு பிகரு எல்லாம்…
கலர் கலரா போகையில…
பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா…
இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…
நடமாடும் மின்னலுதான்…
வானவில்லு வளையலான மாயமா…
கனவுல தேவதையா வந்து போற நியாயமா…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : கண்ணான கண்ணழகி…
கனிவான பேரழகி…
செந்தூர சிவப்பழகி மீனம்மா…
உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா…

BGM


Notes : Manja Manjala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Jeevan. மஞ்ச மஞ்சளா பாடல் வரிகள்.


கண்ணீருக்கு காசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Kanneerukku Kasu Song Lyrics in Tamil


ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல…
காதல் வரும் கடந்து வா நண்பா…
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே…
போதை வரும் தெளிந்து வா என் நண்பா…

ஆண் : இலட்சியங்கள் தோளோடு…
வெற்றி வர போராடு…
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு…

குழு : பொன்னான எதிர்காலம்…
அது தன்னாலே உருவாகும்…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : ஏமாற்றம் காணயிலே…
ஊர் தூற்றி பேசையிலே…
கோவம் வரும் மறந்து வா நண்பா…

ஆண் : முன்னேறும் வேகத்திலே…
உன்கூட நேரத்திலே…
பாதை தரும் நடந்து வா என் நண்பா…

ஆண் : ஜாதி மதம் பார்க்காதே…
ஜாதகத்தை தூக்காதே…
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே…

ஆண் : சொன்னாரே நம்ம ஐயா…
அதை எண்ணாதே நீயும் பொய்யா…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
உயிர் நண்பா…

BGM


Notes : Kanneerukku Kasu Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. கண்ணீருக்கு காசு பாடல் வரிகள்.


அன்னக்கிளி வண்ணக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புண்ணியர்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Annakili Vannakili Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : பூப்போட்ட தாவணி…
உன் பூ உடலை தழுவுதம்மா…
பூங்காற்று வீசும்போது…
மெதுவாக நழுவுதம்மா…
நான் போட்ட பாசிமணி…
கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : ஏ… மை எழுதும் விழியோரம்…
மனசை எழுதி போறவளே…
பொய்யை மட்டும் எழுதாதே…
காதல் உள்ளம் தாங்காதே…
நெஞ்சுக்குள்ளே நீ இருக்க…
நினைவலைகள் தூங்காதே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM


Notes : Annakili Vannakili Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Punniyar. அன்னக்கிளி வண்ணக்கிளி பாடல் வரிகள்.


மின்னலடிக்கும் வெண்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மரகதமணிகொண்டாட்டம்

Minnalidikkum Venmai Song Lyrics in Tamil


ஆண் : வேலன்டைன்ஸ் டே…

BGM

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

ஆண் : நீ நீ நீ நீ தனி தனி தனி…
க ம நி க ம நி கம நி…
மனம் இனி மனம் இனி…
மதுர கனி மதுர கனி…
மரகத மணி மரகத மணி…

ஆண் : சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ…
சுதிலய சுர அணி சுதிலய சுர அணி…
சரி க ம ப த நி ச நி…

பெண் : போதுமென்று ஏதுமில்லை…
போக வேண்டும் ஆசை எல்லை…

ஆண் : காம்பில்லாத காமன் முல்லை…
வீம்புதானே தாங்கவில்லை…

பெண் : ஒரு வாங்க புயல்தான்…
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

பெண் : ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிரி சிரி…
சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி…
மதனபுரி எனை அனுசரி அனுசரி அனுசரி…
மதுரசலஹரி லஹரி லஹரி…
மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி…
ச நி த ப ம க ரி ச ரி…

ஆண் : பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு…
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு…

பெண் : மேடை இன்றி பாடும் சேதி…
ஆசை கொண்ட மாடர்ன் லேடி…

ஆண் : ஒரு காக்டெயில் பார்ட்டி…
என்னை ஏதோ தின்ன கேக்குது…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
பெண் : நான்தான்…
ஆண் : என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…


Notes : Minnalidikkum Venmai Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. மின்னலடிக்கும் வெண்மை பாடல் வரிகள்.


உன்னோடுதான் கனாவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ்.சித்ராமரகதமணிகொண்டாட்டம்

Unnoduthan Kanavile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…

ஆண் : மழை வந்த போது…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…
ஆண் : குடை ஒன்று தந்து…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…

ஆண் : மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…

பெண் : இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும்…
பொன் நாள் இது…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

BGM

ஆண் : காலையிலே தினம் நான் விழித்து…
கையில் கண்டேன் உன்னை…

பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து…
அன்பே தந்தேன் என்னை…

ஆண் : தெளிந்த நீரில் நின்றேன்…
உன்னைத்தான் அதில் கண்டேன்…

பெண் : இரவு யாவும் மீட்டேன்…
என்னை நானே அணைத்தேன்…

ஆண் : கண்கள் துடித்தது…
கன்னம் கொதித்தது…
பெண் : அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன்…
ஆண் : ஹேய்…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

BGM

பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்…

ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும்…
வந்தேன் செந்தேன் தின்றேன்…

பெண் : விரல்கள் தீயை கூட்டும்…
விரகம் கூட கூசும்…

ஆண் : கலைந்த கூந்தல் பேசும்…
கண்ணதாசன் வாசம்…

பெண் : உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா…
ஆண் : இது மன்மத காதல் தேசம்…

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…


Notes : Unnoduthan Kanavile Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. உன்னோடுதான் கனாவிலே பாடல் வரிகள்.


கொச்சின் மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி . உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஉன்னுடன்

Cochin Madapura Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

பெண் : நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே…
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே…

ஆண் : இனி இருவரா இல்லை ஒருவரா…
பெண் : சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

ஆண் : உன் வாய் மலர் பூத்தால் என்ன…
ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன…

பெண் : நீ கூட நடந்தால் என்ன…
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன…
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன…

ஆண் : கண்ணால் யாசிக்கிறேன்…
காதல் சொன்னால் என்ன…

பெண் : நானும் யோசிக்கிறேன்…
அதை நீயா சொன்னால் என்ன…

ஆண் : உன் பார்வை என் கண்ணில்…
மோதிய செய்தி என்ன…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

பெண் : சின்னச்சிறியது பறவை…
தன் சிறகில் சுமக்குது சிலுவை…
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை…

ஆண் : சந்திர மண்டலம் வரையும்…
நான் தவிப்பில் இருப்பது புரியும்…
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்…

பெண் : வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல…
ஆண் : ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல…
பெண் : சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

BGM


Notes : Cochin Madapura Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கொச்சின் மாடப்புறா பாடல் வரிகள்.


வானம் தரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஉன்னுடன்

Vaanam Tharaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே…

BGM

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…

ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…

BGM

ஆண் : இமைகளைக் கொண்டு இருதயம் தோன்றும்…
கதைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்…

BGM

ஆண் : உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்…
செப்படி வித்தை அடி எப்படி கட்றாய்…
புருவங்களில் மலையே வளையுமடி…
புன்னகையில் ஜீவன் தவிடுபொடி…

ஆண் : பூக்களின் கனவே வா…
பூமியின் நிலவே வா…
இனிக்கின்ற தீயே வா…
இன்னிசை நதியே வா…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…

BGM

ஆண் : சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய்…
என் ரத்தத்தில் இருந்தாய்…
நான் முத்தத்தில் எரிந்தேன்…

BGM

ஆண் : பௌர்ணமி விழியால் பால் மழை பெய்தாய்…
என் சாம்பலில் இருந்து…
நான் சட்டென்று முளைத்தேன்…

ஆண் : பார்த்ததிலே பாதி இளைத்துவிட்டேன்…
கண்களிலே ஒன்றைத் தொலைத்துவிட்டேன்…

ஆண் : சிறகுள்ள மலரே வா…
இமைக்கின்ற சிலையே வா…
ஆனந்தக் கலையே வா…
என் ஆண்மையின் விலையே வா…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…

ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…

BGM


Notes : Vaanam Tharaiyil Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானம் தரையில் பாடல் வரிகள்.


சிங்கக்குட்டி வருவான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிமூவேந்தர்

Singakutty Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

BGM

ஆண் : கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…
குழு : ஆமா கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…

ஆண் : ஹேய்… கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…
குழு : ஆமா கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…

ஆண் : மலை எடுப்பானடா குடை பிடிப்பானடா…
அவன் மாமன் பொண்ண சிறை எடுப்பானடா…
அட மாமா நீ பொண்ணப் பெத்துக்கோ…
அட இல்லையென்னா உதப்பானே டடடடடட்டா…

ஆண் : சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

BGM

ஆண் : கை வீசி நடந்தா வீதியிலே…
குழு : அவன் கை வீசி நடந்தா வீதியிலே…

ஆண் : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…
குழு : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…

ஆண் : மெல்ல சிரிப்பானடா அள்ளிக் கொடுப்பானடா…
புகழ் பூமாலைகள் தோளில் சுமப்பானடா…
அந்த தேசிங்கு ராஜாவைப் போல…
வந்து குதிரையில் குதிப்பான்டா டடடடடட்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…


Notes : Singakutty Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சிங்கக்குட்டி வருவான்டா பாடல் வரிகள்.


கோபமா என் மேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஉன்னுடன்

Kovama En Mel Kovama Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…

ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள்ளூயிரே உருகுதம்மா… ஆ…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…

ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள்ளூயிரே உருகுதம்மா… ஆ…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…

BGM

ஆண் : உன் பார்வை வடிக்கின்ற பாலோளியில்…
என் வானம் விடியுமடி…
உன் பாதம் படிகின்ற சிறு துகளில்…
என் ஆவி துடிக்குதடி…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…

ஆண் : என் மார்பு கீறடி பெண்ணே…
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே…
என் மார்பு கீறடி பெண்ணே…
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே…

ஆண் : கண்கள் சாமரம் வீசிடுமா…
இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…

BGM

ஆண் : நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்…
இந்தக் காதல் துயரமில்லை…
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்…
இந்த ஏக்கம் சிறிதுமில்லை…

ஆண் : கோபமா என் மேல் கோபமா…

ஆண் : என் கண்ணில் ஏனடி வந்தாய்…
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்…
என் கண்ணில் ஏனடி வந்தாய்…
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்…

ஆண் : மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா…
மறுமொழி ஒன்று பேசிடம்மா…

ஆண் : கோபமா…
ஒரு மொழி பேசம்மா…

ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள் உயிரே உருகுதம்மா… ஆ…

ஆண் : கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…


Notes : Kovama En Mel Kovama Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கோபமா என் மேல் பாடல் வரிகள்.