| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஹரிஹரன் | தேவா | உன்னுடன் |
Vaanam Tharaiyil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே…
—BGM—
ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…
ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…
ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
—BGM—
ஆண் : இமைகளைக் கொண்டு இருதயம் தோன்றும்…
கதைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்…
—BGM—
ஆண் : உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்…
செப்படி வித்தை அடி எப்படி கட்றாய்…
புருவங்களில் மலையே வளையுமடி…
புன்னகையில் ஜீவன் தவிடுபொடி…
ஆண் : பூக்களின் கனவே வா…
பூமியின் நிலவே வா…
இனிக்கின்ற தீயே வா…
இன்னிசை நதியே வா…
ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
—BGM—
ஆண் : சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய்…
என் ரத்தத்தில் இருந்தாய்…
நான் முத்தத்தில் எரிந்தேன்…
—BGM—
ஆண் : பௌர்ணமி விழியால் பால் மழை பெய்தாய்…
என் சாம்பலில் இருந்து…
நான் சட்டென்று முளைத்தேன்…
ஆண் : பார்த்ததிலே பாதி இளைத்துவிட்டேன்…
கண்களிலே ஒன்றைத் தொலைத்துவிட்டேன்…
ஆண் : சிறகுள்ள மலரே வா…
இமைக்கின்ற சிலையே வா…
ஆனந்தக் கலையே வா…
என் ஆண்மையின் விலையே வா…
ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…
ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…
—BGM—
Notes : Vaanam Tharaiyil Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானம் தரையில் பாடல் வரிகள்.
