Tag Archives: ஹரிணி

orey-oru-song-lyrics-in-tamil-venghai

ஒரே ஒரு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதிப்பு & ஹரிணிதேவி ஸ்ரீ பிரசாத்வேங்கை

Orey Oru Song Lyrics in Tamil


ஆண் : யாரோ மனச உலுக்க…
ஏதோ உடைந்து வலிக்க…
நானோ தனித்து நடக்க…
நீயோ மெளனமாக…

ஆண் : ஒரே ஒரு வார்த்தைக்காக…
ஓயாம காத்திருப்பேன்…
ஒரே ஒரு பார்வைக்காக…
எந்நாளும் தவமிருப்பேன்…

ஆண் : ஒரே ஒரு நொடிக்கூட…
உன்னோடுதான் வாழ்வேனே…
ஒரே ஒரு உயிர் அதை…
உன் கையில் தந்து சாயுவேன்…

பெண் : ஒரே ஒரு வார்த்தையாலே…
என் நெஞ்சு கலைகிறதே…
ஒரே ஒரு பார்வையாலே…
உள்ளூர கரைகிறதே…

ஆண் : யாரோ மனசு உலுக்க…
ஏதோ உடைந்து வலிக்க…

BGM

பெண் : ஓ… சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு…
தவிக்கும் ஒரு இதயம்…
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு…
தவிர்க்கும் ஒரு இதயம்…

பெண் : காதல் என்னும் கைக்குழந்தை…
கதறி அழுகிறதே…
உறவை நெனச்சு உள்ளம் இப்போ…
போராடுதே…

ஆண் : ஒரே ஒரு வார்த்தை கேட்டு…
என் நெஞ்சு வெடிச்சிருச்சே…
ஒரே ஒரு பார்வை புயலாய்…
என்மேல் அடிச்சிருச்சே…

BGM

ஆண் : உள்ளுக்குள்ள முள்ள வச்சு…
எதுக்கு நீ சிரிச்ச…
காதல் என்னும் பேரச்சொல்லி…
கழுத்த நீ நெரிச்ச…

ஆண் : ஒன்ன நெனச்ச பாவத்துக்கு…
இதுதான் தண்டனையா…
என்ன பெத்த தெய்வத்துக்கே…
சோதனையா…

பெண் : ஒரே ஒரு வார்த்தை பேச…
என்னால முடியலையே…

ஆண் : ஒரே ஒரு துரோகம் தாங்க…
என் நெஞ்சில் பலமில்லையே…

ஆண் : யாரோ மனச உலுக்க…
ஏதொ உடைந்து வலிக்க…
நானோ தனித்து நடக்க…
நீயோ மெளனமாக…


Notes : Orey Oru Song Lyrics in Tamil. This Song from Venghai (2011). Song Lyrics penned by Viveka. ஒரே ஒரு பாடல் வரிகள்.


மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்உள்ளம் கேட்குமே

Mazhai Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் வந்தது யார் வந்தது…
உன் நெஞ்சிலே யார் வந்தது…
போர் வந்தது போர் வந்தது…
உள் நெஞ்சிலே போர் வந்தது…

ஆண் : பூ வந்தது பூ வந்தது…
கை வீசிடும் பூ வந்தது…
தீ வந்தது தீ வந்தது…
பூ கண்களில் தீ வந்தது…

ஆண் : ஏன் வந்தது ஏன் வந்தது…
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்…
பெண் வந்ததும் பெண் வந்ததும்…
உன் சூழலில் சத்தம் சத்தம்…

BGM

ஆண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

ஆண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

ஆண் : என்ன திண்மை… ம்ம் ஹ்ம்ம்…
என்ன வன்மை… ம்ம் ஹ்ம்ம்…
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்…
போக போக புரிகின்ற போர்களம்…
ஒன்று செய்…
இப்போதே உள் நெஞ்சை உடைய செய்…

பெண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

பெண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

பெண் : எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம்…
நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்…
ஒன்று செய்…
இப்போதே உள் நெஞ்சை உடையச் செய்…

ஆண் : யார் வந்தது யார் வந்தது…
உன் நெஞ்சிலே யார் வந்தது…
போர் வந்தது போர் வந்தது…
உள் நெஞ்சிலே போர் வந்தது…

ஆண் : பூ வந்தது பூ வந்தது…
கை வீசிடும் பூ வந்தது…
தீ வந்தது தீ வந்தது…
பூ கண்களில் தீ வந்தது…

ஆண் : ஏன் வந்தது ஏன் வந்தது…
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்…
பெண் வந்ததும் பெண் வந்ததும்…
உன் சூழலில் சத்தம் சத்தம்…

BGM

ஆண் : நீ மட்டும் என்றால்…
உடலோடு உடல் மாற்றம் செய்வேனே…

பெண் : நீ மட்டும் போ என்றால்…
அப்போதே உயிர் விட்டு செல்வேனே…

ஆண் : அடி பருவ பெண்ணே நீயும்…
ஒரு பங்கு சந்தை போலே…
சில ஏற்ற இறக்கங்கள்…
அட உந்தன் மேனி மேலே…

பெண் : பூவின் உள்ளே ஒரு தாகம்…
உன் உதடுகள் தா…

ஆண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

ஆண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

BGM

பெண் : தீண்டாமல் சருகாவேன்…
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்…

ஆண் : ஐயோடி நான் கல்லாவேன்…
உளியாக நீ வந்தால் கலையாவேன்…

பெண் : ஹே… நீயும் ஓடி வந்து…
என்னை தீண்ட தீண்ட பாரு…
ஒரு பாதரசம் போல…
நான் நழுவி செல்வேன் தேடு…

ஆண் : ஏதோ ஏதோ வலி…
எந்தன் ஐம்புலன்களில் ஏன்…

பெண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

பெண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

ஆண் : எந்த பெண்ணும் அதிசய விண்கலம்…
போக போக புரிகின்ற போர்களம்…

ஆண் & பெண் : ஒன்று செய்…
இப்போதே உள் நெஞ்சை உடைய செய்…

BGM


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Ullam Ketkumae (2005). Song Lyrics penned by Vairamuthu. மழை மழை பாடல் வரிகள்.


பூங்குயில் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅருண்மொழி & ஹரிணிஎஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Poonkuyil Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

பெண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா…
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா…
அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற…
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா…
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்…
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா…

பெண் : இளமனசுக்குள் கனவுகளை…
இறக்கி வச்சது நெனப்பிருக்கா…
மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே…
மீண்டும் சேர வழியிருக்கா…

பெண் : அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி…
நான் ரசித்தது பிடிச்சிருக்கா…
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்…
நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா…

ஆண் : திறந்திருக்கிற மனசுக்குள்ளே…
திருடிச் சென்றது பிடிச்சிருக்கா…
வாசம் போக பிடிச்சிருக்கா…
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா…

பெண் : அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு…
பூங்காற்றும் பிடிச்சிருக்கு…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு…
பனிக்காற்றும் பிடிச்சிருக்கு…

ஆண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு…
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு…
அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு…
பூங்காற்றும் பிடிச்சிருக்கு…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு…
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு…


Notes : Poonkuyil Pattu Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Viveka. பூங்குயில் பாட்டு பாடல் வரிகள்.


மனம் விரும்புதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணிதேவாநேருக்கு நேர்

Manam Virumbuthey Song Lyrics in Tamil


குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…

BGM

குழு : தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…
தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…
தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…
உறங்காமலே கண்ணும் கண்ணும்…
சண்டை போடுதே…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…
அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…

BGM

பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்…
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்…
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது…

குழு : வெட்டியது…

பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே…
அன்பே உந்தன் அழகு முகத்தை…
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது…

குழு : ஒட்டியது…

பெண் : புயல் வந்து போனதொரு வனமாய்…
ஆனதடா என்னுள்ளம்…
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்…
என் நிலைமை அது சொல்லும்…

பெண் : மனம் ஏங்குதே… ஏ…
மனம் ஏங்குதே…
மீண்டும் காண…
மனம் ஏங்குதே…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…
அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா…

பெண் : அஹ… மனம் விரும்புதே…
மனம் விரும்புதே உன்னை… உன்னை…

BGM

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…

BGM

பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை…
வெயிலோடு நான் உருகியதில்லை…
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா…

குழு : இருந்ததடா…

பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே…
தலை காட்டும் சிறு பூவைப்போலே…
பொல்லாத இளங்காதல் பூத்ததடா…

குழு : பூத்ததடா…

பெண் : சட்டென்று சலனம் வருமென்று…
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று…
நேற்றுவரை நம்பலையே…

பெண் : என் காதலா… ஆஆ…
என் காதலா…
நீ வா… நீ வா… என் காதலா…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…

BGM

பெண் : அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா… ஆஆ…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…

BGM


Notes : Manam Virumbuthey Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. மனம் விரும்புதே பாடல் வரிகள்.


ஊதா ஊதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & ஹரிணிதேவாமின்சாரா கண்ணா

Oodha Oodha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே…
நலம் ஆகும் ஊதா பூவே…
தோள் சேர்த்தால் ஊதா பூவே…
சுகம் காணும் ஊதா பூவே…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன்னை நீங்கி வாழா பூ…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…

BGM

ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே…
ஊதா ஊதா ஊதா பூவே…

BGM

பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்…
நான் உனக்காக என்று…
என்னுயிர் கூட இல்லை…
இனி எனக்காக என்று…

BGM

ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை…
நான் கடந்தேனே அன்று…
என்னை நிலம் கேட்டதம்மா…
உன் நிழல் எங்கு என்று…

பெண் : உன்னில் நான்…
ஒரு பாதியென தெரியாதோ… ஓ…

ஆண் : ஓ அன்பே நீ…
அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன் பேர் தவிர ஊதா பூ…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…

BGM

ஆண் : உன் மழை கூந்தல் மீது…
என் மனப்பூவை வைத்தேன்…
ஓர் உயிர் நூலை கொண்டு…
இரு உடல் சேர தைத்தேன்…

BGM

பெண் : உன் விழி பார்வை அன்று…
எனை விலைபேச கண்டேன்…
நீ எனை வாங்கும் முன்பு…
நான் உனை வாங்கி கொண்டேன்…

ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே…
இனி ஆணை…

பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ…
ஒரு ஆணை…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
நீதான் நீதான் வாடா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…


Notes : Oodha Oodha Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Vaali. ஊதா ஊதா பாடல் வரிகள்.


சோனியா சோனியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Sonia Sonia Song Lyrics in Tamil


ஆண் : சோனியா சோனியா…
சோனியா சோனியா சோனியா…

BGM

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

BGM

ஆண் : ஹே… சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

ஆண் : காதலிலே ரெண்டு வகை…
சைவம் உண்டு அசைவம் உண்டு…
ரெண்டில் நீ எந்த வகை கூறு…

பெண் : சில நாள் சைவம் உண்டு…
சில நாள் அசைவம் உண்டு…
பெண்ணின் கண்களை கண்டு…
சேவை செய்வது நன்று…

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

ஆண் : காதலிலே ரெண்டு வகை…
சைவம் உண்டு அசைவம் உண்டு…
ரெண்டில் நீ எந்த வகை கூறு…

பெண் : சில நாள் சைவம் உண்டு…
சில நாள் அசைவம் உண்டு…
பெண்ணின் கண்களை கண்டு…
சேவை செய்வது நன்று…

BGM

ஆண் : பூவோடு உரசும்…
பூங்காற்றை போலே…
சீரோடு அணைத்தால்…
அது சைவம்…

ஆண் : வேரோடு வளைக்கும்…
புயல் காற்றை போலே…
மாா்போடு இழுத்தால்…
அது அசைவம்…

பெண் : புல்லில் வந்து விழும்…
தூறலை போல்…
ஒரு பெண்ணின் மீது…
கை தீண்டுவது சைவம்…

பெண் : கரையை மீறுகின்ற…
வெள்ளத்தை போல்…
ஒரு பெண்ணை சோ்ந்து…
எல்லை தாண்டுவது அசைவம்…

ஆண் : பெண் கூந்தல் மீது பூவாகட்டா…
உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா…

ஆண் : மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை…
மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை…
போின்பம் காணாத…
பெண் ஒன்றும் பெண் இல்லை…

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

BGM

ஆண் : உள் நெஞ்சும் துடிக்கும்…
உள்ளுக்குள் வெடிக்கும்…
பூ போலே அணைக்க…
பொறுமை இல்லை…

ஆண் : பெண் ஒன்று புதுமை…
கண்ணாடி பதுமை…
கையால தொிந்தால்…
கவலை இல்லை…

ஆண் : காதல் கிாிக்கெட்டில்…
சட்டம் இல்லை…
ஒரு சாஸ்திரம் இல்லை…
ரன்ஸ் எடுப்பதுதான் வேலை…

பெண் : பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை…
கண் தூங்குவதில்லை…
பெண் மல்லிகை பூ மாலை…

ஆண் : தட்டாமல் போனால் தங்கமில்லை…
ஒட்டாமல் போனால் மோகமில்லை…

ஆண் : காமத்தின் வாதத்தில் நியாயமில்லை…
கன்னத்தின் காயங்கள் காதலில்லை…

பெண் : பெண் தேவை எதுவென்று…
அறிகின்ற ஆணில்லை…

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

ஆண் : காதலிலே ரெண்டு வகை…
சைவம் உண்டு அசைவம் உண்டு…
ரெண்டில் நீ எந்த வகை கூறு…

பெண் : சில நாள் சைவம் உண்டு…
சில நாள் அசைவம் உண்டு…
பெண்ணின் கண்களை கண்டு…
சேவை செய்வது நன்று…

BGM

ஆண் : சோனியா… சோனியா…
சோனியா…

BGM


Notes : Sonia Sonia Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. சோனியா சோனியா பாடல் வரிகள்.


வீசும் காற்றுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Veesum Kaatrukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

BGM

ஆண் : என்னையே திறந்தவள்…
யார் அவளோ…
உயிரிலே நுழைந்தவள்…
யார் அவளோ…

ஆண் : வழியை மறித்தாள்…
மலரைக் கொடுத்தாள்…
மொழியைப் பறித்தாள்…
மௌனம் கொடுத்தாள்…

ஆண் : மேகமே மேகமே அருகினில் வா…
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா…

பெண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

BGM

ஆண் : சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்…
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…
விழிகள் முழுதும் நிழலா இருளா…
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா…

ஆண் : சருகென உதிர்கிறேன் தனிமையிலே…
மௌனமாய் எரிகிறேன் காதலிலே…

BGM

ஆண் : மேகம் போலே…
என் வானில் வந்தவளே…
யாரோ அவளுக்கு…
நீதான் என்னவளே…

ஆண் : மேகமேக மேகக்கூட்டம்…
நெஞ்சில் கூடுதே…
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி…
மின்னல் ஓடுதே…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…


Notes : Veesum Kaatrukku Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. வீசும் காற்றுக்கு பாடல் வரிகள்.


கடவுளும் காதலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & ஹரிணிமணி சர்மாபடிக்காதவன் (2009)

Kadavulum Kadhalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…

BGM

பெண் : காமமும் காதலும் வேறு இல்லை…
எவருக்கும் இதுவரை தெரியவில்லை…
முதன் முதல் இரண்டையும்…
புரிந்தவள் நான்தானே… ஏ ஏ ஏ…

BGM

ஆண் : தலைகீழ் தெரியுதே வானம்…
குழு : வானம் வானம்…
ஆண் : தலைமேல் சுற்றுதே பூமி…
குழு : பூமி…

ஆண் : கலராய் தெரியுதே காற்று…
குழு : காற்று…
ஆண் : எல்லாம் காதலே…
குழு : காதலே… காதலே…

BGM

ஆண் : ஆடைகள் அணிந்து…
அருவியில் நடந்தால்…
உனைப்போல் இருக்கும்…
என்றுணர்ந்தேன்…

பெண் : மீசையும் முளைத்து…
மின்னலும் நடந்தால்…
உனைப்போல் இருக்கும்…
என்றுணர்ந்தேன்…

ஆண் : நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்…
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை…

பெண் : மீசையும் வன்முறை ரசித்துத்தான்…
நான் கூட கார்க்கிறேன் தன்னிசை…

BGM

ஆண் : மெல்லினம் என்பது பெண்மை…
குழு : பெண்மை…
ஆண் : வல்லினம் என்பது ஆண்மை…
குழு : ஆண்மை…

ஆண் : இடையினம் என்பது மென்மை…
குழு : மென்மை…
ஆண் : இதுதான் உண்மையே…
குழு : உண்மையே…

BGM

ஆண் : முதல் முறை உனை நான்…
பார்த்ததில் இருந்து…
இதுவரை எனை நான் பார்த்ததில்லை…

பெண் : உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து…
இதுவரை இமைகள் கூடவில்லை…

ஆண் : உன் உடலிலும் வர்ணங்கள் தெரியுதே…
இது என்ன அதிசயம் சொல்லிடு…

பெண் : இரவெல்லாம் பகலாய் தோன்றுதே…
இது என்ன ரகசியம் சொல்லிடு…

BGM

ஆண் : அழகிய வன்முறை செய் செய்…
குழு : செய் செய்…
ஆண் : அதில் கொஞ்சம் அகிம்சைகள் வை வை…
குழு : வை வை…

ஆண் : அதுதான் காதலில் மெய் மெய்…
குழு : மெய் மெய்…
ஆண் : அதில் இல்லை பொய்யடி…
குழு : பொய்யடி பொய்யடி…

ஆண் : கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…

BGM


Notes : Kadavulum Kadhalum Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Snehan. கடவுளும் காதலும் பாடல் வரிகள்.


சகியே சகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிமணி சர்மாயூத்

Sagiye Sagiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : சகியே சகியே…
சகித்தால் என்ன…

பெண் : சுகத்தில் விழுந்து…
சுகித்தால் என்ன…

ஆண் : உன் உதடும்…
என் சொல்லும் ஒன்றாக…
உன் நெஞ்சும்…
என் நினைவும் ஒன்றாக…

பெண் : உன் கண்ணில்…
என் பாா்வை ஒன்றாக…
நீ வந்தாய்…
நான் வந்தேன் நன்றாக…

BGM

பெண் : ஏப்ரல் மாதத்தில்…
பூக்கும் பூக்கள் அத்தனையும்…
இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன…

ஆண் : உந்தன் கொலுசின் பாடல்…
கொடியின் காதில்…
கேட்டது கேட்டது அதனால்…

பெண் : ஜூலை ஏழாம் நாள்…
மாலை ஏழு பத்தோடு…
உந்தன் காலங்கள் உறைந்ததென்ன…

ஆண் : உன்னை முதலாய் முதலாய் பாா்த்ததும்…
மூச்சே நின்றது நின்றது அதனால்…

பெண் : உன் உயிாின்…
பெண் வடிவம் நான்தானே…
என் உயிாின்…
ஆண் வடிவம் நீதானே…

ஆண் : என்னென்று ஏதென்று சொல்வேனே…
சில்லென்று தீ ஒன்று நீதானே…

ஆண் : சகியே சகியே…
சகித்தால் என்ன…

BGM

பெண் : உன்னை கண்டதும்…
எந்தன் பச்சை நரம்பும்…
வெட்க செந்தூரம் மடிந்ததென்ன…

ஆண் : உந்தன் உடலும்
உடையும்… மூடல் கொள்ளும்…
ரகசியம் ரகசியம் என்ன…

பெண் : உன்னை கண்டதும்…
வானின் பாதி நீயென்று…
வானில் அசரீாி ஒலித்ததென்ன…

ஆண் : எந்தன் உயிரும் உடலும்…
உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன…

பெண் : உன் மாா்பும் உன் தோளும் என் வீடு…
என்னென்ன செய்வாயோ உன் பாடு…

ஆண் : உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு…
உன் உதடே என் உணவு இப்போது…

பெண் : சகியே சகியே…
சுகித்தால் என்ன…

ஆண் : சகியே சகியே…
சகித்தால் என்ன…


Notes : Sagiye Sagiye Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vairamuthu. சகியே சகியே பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Anbe Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பே அன்பே எல்லாம் அன்பே…
உனக்காக வந்தேன் இங்கே…
சிரித்தாலே போதும் என்றேன்…

ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும்…
வேண்டாம் என்பேன்…
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்…

ஆண் : ஓஹோ… அன்பே அன்பே எல்லாம் அன்பே…
உனக்காக வந்தேன் இங்கே…
சிரித்தாலே போதும் என்றேன்…

ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும்…
வேண்டாம் என்பேன்…
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்…

பெண் : என் மேஜை மீது பூங்கொத்தை…
என் மேஜை மீது பூங்கொத்தை…
வைத்தது நீதானே…

பெண் : நான் வானம் பார்க்க…
வழி செய்த சாதனம் நீதானே…
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள…
நீ தானே நிலவைக் காட்டித் தேற்றினாய்…

ஆண் : அன்பே அன்பே எல்லாம் அன்பே…
உனக்காக வந்தேன் இங்கே…
சிரித்தாலே போதும் என்றேன்…

ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும்…
வேண்டாம் என்பேன்…
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்…

BGM

பெண் : தூக்கம் கண்ணில் வரவில்லை…
சொப்பனம் காண வழி இல்லை…
எங்கோ பாடல் கேட்டாலும்…
நெஞ்சில் முன் போல் தீ இல்லை…

பெண் : தூக்கம் கண்ணில் வரவில்லை…
சொப்பனம் காண வழி இல்லை…
எங்கோ பாடல் கேட்டாலும்…
நெஞ்சில் முன் போல் தீ இல்லை…

ஆண் : மலை தரும் காா் முகிலே…
நீ மிதந்திடும் மயில் இறகே…
இதம் தரும் இன்னிசையே…
நீ ஒலி தரும் இன்னிசையே…

பெண் : இருப்பது ஓர் உயிரே…
அது உருகியே கரைகிறதே…
நினைவுகள் கொல்வதனால்…
மனம் மறுபடி சருகிறதே…

ஆண் : ஓ… அன்பே அன்பே எல்லாம் அன்பே…
உனக்காக வந்தேன் இங்கே…
சிரித்தாலே போதும் என்றேன்…

ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும்…
வேண்டாம் என்பேன்…
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்…

BGM

ஆண் : உன்னைப் பார்க்க கூடாது…
என கண்ணை மூடிக் கொண்டாலும்…
கண்ணை பிரித்து நீ வந்தாய்…
இமைகளின் இடையில் நீ நின்றாய்…

பெண் : உன்னிடம் சொல்வதற்கு…
என் கதை பல காத்திருக்கு…
இரு கண்களின் தந்திகளால்…
அதை கடத்திட சொல் எதற்கு…

ஆண் : உடைகளின் நோ்த்தியினால்…
இந்த உலகினை வென்றவள் நீ…
சிறு உதட்டினில் புன்னகையால்…
என் இதயத்தில் நின்றவள் நீ…

பெண் : ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Thamarai. அன்பே அன்பே பாடல் வரிகள்.