பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | காக்கிசட்டை (1985) |
Kanmaniyae Pesu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…
ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
—BGM—
ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…
அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…
பெண் : ஆயிரம் பொன் பூக்கும்…
எந்தன் தேகம் எங்குமே…
அங்குலம் விடாமல்…
இன்ப கங்கை பொங்குமே…
ஆண் : தோளிலும் என் மார்பிலும்…
கொஞ்சிடும் என் அஞ்சுகம்…
நான் நீ எது… ஹோய் ஹோய்…
பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
பெண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
என் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையே…
பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
—BGM—
பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…
பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…
ஆண் : கண்களால் என் தேகம் எங்கும்…
காயம் செய்கிறாய்…
கைகளால் என் பாதம் நீவி…
ஆறச் செய்கிறாய்…
பெண் : வானகம் இவ்வையகம்…
யாவுமே என் கையகம்…
நீதான் தந்தாய்… ஹோ ஹோ…
ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
பெண் : இது பூவில் பூத்த பூவையே…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
Notes : Kanmaniyae Pesu Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Pulamaipithan. கண்மணியே பேசு பாடல் வரிகள்.