Tag Archives: புலமைப்பித்தன்

Kanmaniyae Pesu Song Lyrics in Tamil

கண்மணியே பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Kanmaniyae Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…
அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…

பெண் : ஆயிரம் பொன் பூக்கும்…
எந்தன் தேகம் எங்குமே…
அங்குலம் விடாமல்…
இன்ப கங்கை பொங்குமே…

ஆண் : தோளிலும் என் மார்பிலும்…
கொஞ்சிடும் என் அஞ்சுகம்…
நான் நீ எது… ஹோய் ஹோய்…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
என் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையே…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

ஆண் : கண்களால் என் தேகம் எங்கும்…
காயம் செய்கிறாய்…
கைகளால் என் பாதம் நீவி…
ஆறச் செய்கிறாய்…

பெண் : வானகம் இவ்வையகம்…
யாவுமே என் கையகம்…
நீதான் தந்தாய்… ஹோ ஹோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…

பெண் : இது பூவில் பூத்த பூவையே…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…


Notes : Kanmaniyae Pesu Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Pulamaipithan. கண்மணியே பேசு பாடல் வரிகள்.


வெள்ளை மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & சுனந்தாஇளையராஜாசின்ன வீடு

Vella Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…
பக்கத்திலே நானிருந்தும்…
துக்கத்திலே நீ இருந்தால்…
கரைசேரும் காலம் எப்போ…

பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…

BGM

ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…
வெட்கத்திலே நான் அழுக…
துக்கத்திலே நீ அழுத…
கரை சேரும் காலம் எப்போ…

ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…

BGM

ஆண் : செங்கரும்ப நான் மறந்து…
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…

பெண் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு…
சாமிக்கும்தான் வீடு ரெண்டு…

ஆண் : கள்ளையும் பாலா நீ நினைச்ச…
முள்ளையும் பூவா நீ முடிச்ச…

பெண் : போனதெல்லாம் போகட்டும்ங்க…
யாருமிங்கே ராமனில்லே…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…

BGM

பெண் : கூடுவிட்டு போனகிளி…
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா…

ஆண் : ஜோடி வந்து சேர்ந்த கிளி…
கோடி சுகம் காணுதம்மா…

பெண் : சிப்பிய போல நானிருந்து…
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்…

ஆண் : செங்குளத்தில் பையன் வந்தால்…
இன்னும் கொஞ்சம் தொல்லையடி…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…


Notes : Vella Manam Song Lyrics in Tamil. This Song from Chinna Veedu (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெள்ளை மனம் பாடல் வரிகள்.


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉன்னால் முடியும் தம்பி

Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தானா…
ஹோய்… தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தந்தன் னானா…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

ஆண் : வீதிக்கொரு கட்சி உண்டு…
சாதிக்கொரு சங்கம் உண்டு…
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே…
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே…

ஆண் : இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

BGM

ஆண் : வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை…
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது…
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ…
வீடின்றி வாசலின்றித் தவிக்குது…

ஆண் : எத்தனை காலம் இப்படிப் போகும்…
என்றொரு கேள்வி நாளை வரும்…
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்…
என்றிங்கு வாழும் வேளை வரும்…

ஆண் : ஆயிரம் கைகள் கூடட்டும்…
ஆனந்த ராகம் பாடட்டும்…
நாளைய காலம் நம்மோடு…
நிச்சயம் உண்டு போராடு…
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

BGM

ஆண் : ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது…
தானாகப் பாதை கண்டு நடக்குது…
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது…
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது…

ஆண் : எண்ணிய யாவும் கைகளில் சேரும்…
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே…
காலையில் தோன்றும் சூரியன் போலே…
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே…

ஆண் : சேரியில் தென்றல் வீசாதா…
ஏழையை வந்து தீண்டாதா…
கங்கையும் தெற்கே பாயாதா…
காவிரியோடு சேராதா…
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

ஆண் : இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…


Notes : Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Pulamaipithan. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடல் வரிகள்.


அதோ மேக ஊர்வலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & சுனந்தாஇளையராஜாஈரமான ரோஜாவே

Adho Mega Oorvalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…
இதோ காதல் ஊர்வலம்…
இதோ காமன் உற்சவம்… இங்கே…

ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்…
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…

ஆண் : உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு…
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு…

ஆண் : இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்…
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்…

ஆண் : தேகம் தன்னை மூடவே…
கூந்தல் போதும் போதுமே…
ஆடை இங்கு வேண்டுமா…
நாணம் என்ன வா வா…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…

BGM

ஆண் : குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்…
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்…

ஆண் : தென்னம்பாண்டி முத்தைப் போல்…
தேவி புன்னகை…
வண்டு ஆடச் சொல்லுமே…
செண்டு மல்லிகை…

ஆண் : உன்னைச் செய்த பிரம்மனே…
உன்னைப் பார்த்து ஏங்குவான்…
காதல் பிச்சை வாங்குவான்…
இன்னும் என்ன சொல்ல…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…
இதோ காதல் ஊர்வலம்…
இதோ காமன் உற்சவம்… இங்கே…

ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்…
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா…

ஆண் : அதோ மேக ஊர்வலம்…
அதோ மின்னல் தோரணம்… அங்கே…


Notes : Adho Mega Oorvalam Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Pulamaipithan. அதோ மேக ஊர்வலம் பாடல் வரிகள்.


நீங்க நல்லாயிருக்கோனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்இதயக்கனி

Neenga Nalla Irukonum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்…
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி…
தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி…

பெண் : வண்ணம் பாடி ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட…
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி…

ஆண் : ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி…
எனும் பேரில் நீண்ட வரலாறாய்…

பெண் : வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்…
காடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து…
அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து…

ஆண் : கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்…
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து…
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்…
தனிக்கருணை காவிரிபோல்…

பெண் : செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் பேர் நிறுத்தி…
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்…

ஆண் : பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே…
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி…

ஆண் & பெண் : எங்கள் இதயக்கனி… இதயக்கனி…

பெண் : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

ஆண் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…

ஆண் & பெண் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

BGM

ஆண் : உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்…
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்…
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்…
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்…

ஆண் : மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண…
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்…
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்…
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்…

ஆண் : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக…

BGM

பெண் : பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்…
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்…
நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்…
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்…

ஆண் : பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை…
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை…
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை…
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை…
அமைதி என்றும் இல்லை…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

BGM

ஆண் : காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது…
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது…

ஆண் : பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே…
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே…
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்…
அமைதி நிலவுமே… அமைதி நிலவுமே…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

BGM

ஆண் : நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்…
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்…
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்…
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்…
விளங்கிட வேண்டும்…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

BGM


Notes : Neenga Nalla Irukonum Song Lyrics in Tamil. This Song from Idhayakkani (1975). Song Lyrics penned by Pulamaipithan. நீங்க நல்லாயிருக்கோனும் பாடல் வரிகள்.


அம்மாடி இதுதான் காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil


பெண் : அம்மாடி…
குழு : ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : இது தான் காதலா…
குழு : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : அட ராமா… இது என்ன வேதமோ…
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

பெண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

ஆண் : கன்னம் அழகிய ரோசாபூ…
கண்ணில் சிரிக்கிது ஊதாபூ…
உதட்டில் உதிரும் தேன் முல்லை பூ…

பெண் : அஞ்சி ஒதுங்குது மாராப்பு…
இன்னும் எதுக்கிந்த வீராப்பு…
அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ…

ஆண் : அடி சித்திரமே பட்டு சேலைய கட்டுச்சி…
தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு…

BGM

பெண் : உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு…
பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு…

ஆண் : நித்தம் இரவினில் விதை படிக்கையில்…
ரசிச்சு பழகும் அழகு…

பெண் : அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில்…
விடியல் எனக்கு கடிதம் எழுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

ஆண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

ஆண் : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…

பெண் : ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

பெண் : ஆடி பறக்குற பாவாடை…
மூடி மறைக்கிற மேலாட…
இரண்டும் எனக்கு நீயாகனும்…

ஆண் : நீந்தி குளிக்கிற நீரோட…
நெஞ்ச தழுவுற பூமால…
இரண்டும் எனக்கு நீயாகனும்…

பெண் : இந்த அள்ளி குளத்துல மீனும் குதிக்குது…
கட்டி தழும்புது தாளமடிக்குது…

BGM

ஆண் : ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது…
பூவ திறக்குது கல்லை குடிக்குது…

பெண் : கொட்டி கொடுக்கணும் கட்டில் சுகம் அது…
விடியும் வரைக்கும் இருக்கும்…

ஆண் : கட்டி பிடித்தத கை விட்டு பிரிந்ததும்…
அடுத்த இரவின் வரவை நினைக்கும்…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

பெண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

பெண் : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…

ஆண் : ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…


Notes : Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Pulamaipithan. அம்மாடி இதுதான் காதலா பாடல் வரிகள்.


ஓடி ஓடி உழைக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்நல்ல நேரம்

Odi Odi Uzhaikkanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…

ஆண் : ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

BGM

ஆண் : வயுத்துகாக மனுஷன் இங்கே…
கயத்தில் ஆடுறான் பாரு…
ஆடி முடிச்சு இறங்கி வந்தா…
அப்புறம் தாண்டா சோறு…

BGM

ஆண் : வயுத்துகாக மனுஷன் இங்கே…
கயத்தில் ஆடுறான் பாரு…
ஆடி முடிச்சு இறங்கி வந்தா…
அப்புறம் தாண்டா சோறு…

ஆண் : நான் அன்போட சொல்லுறத கேட்டு…
நீ அத்தனை திறமையும் காட்டு…
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு…
ஆளுக்கொன்னு கொடுப்பாங்க…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

BGM

ஆண் : சோம்பேறியாக இருந்து விட்டாக்க…
சோறு கிடைக்காது தம்பி…
சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா…
துணியும் இருக்காது தம்பி…

ஆண் : சோம்பேறியாக இருந்து விட்டாக்க…
சோறு கிடைக்காது தம்பி…
சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா…
துணியும் இருக்காது தம்பி…

ஆண் : இத அடுத்தவன் சொன்னா கசக்கும்…
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்…
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு…
அத்தனையும் சொல்லி போடு…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

BGM

ஆண் : வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்…
சட்டம் ஆகாது தம்பி…
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்…
சட்டம் ஆகணும் தம்பி…

ஆண் : வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்…
சட்டம் ஆகாது தம்பி…
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்…
சட்டம் ஆகணும் தம்பி…

ஆண் : நல்ல சமத்துவம் உண்டாகணும்…
அதிலே மகத்துவம் உண்டாகணும்…
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்…
படிப்பினை தந்தாகனும்…

ஆண் : நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…

ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்… ஓஓஓ…

BGM


Notes : Odi Odi Uzhaikkanum Song Lyrics in Tamil. This Song from Nalla Neram (1972). Song Lyrics penned by Pulamaipithan. ஓடி ஓடி உழைக்கணும் பாடல் வரிகள்.


உச்சி வகுந்தெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். பி. சைலஜாஇளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

பெண் : யே… ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…

BGM

ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வச்சா…
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க…
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல…
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…

BGM

ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ…
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…
கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை…
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…

BGM

ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு…
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க…
செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல…
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…


Notes : Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Pulamaipithan. உச்சி வகுந்தெடுத்து பாடல் வரிகள்.


பூ மழை தூவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்நினைத்ததை முடிப்பவன்

Poomazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

—BGM—

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

BGM

ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…

BGM

ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…

ஆண் : உன்னை கண்டோர்கள் கண் பட்டு…
போகின்ற எழிலோடு…
சிங்கார தேரோட்டமா…

ஆண் : தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள…
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

BGM

ஆண் : வென் சங்கு கழுத்தோடு…
பொன் மாலை அசைந்தாட…
நான் கண்ட பொருள் கூறவா…

BGM

ஆண் : என் அண்ணாவை ஒரு நாளும்…
என் அண்ணாவை ஒரு நாளும்…
என் உள்ளம் மறவாது…
என்றாடும் விதமல்லவா…

ஆண் : நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே…
என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

BGM

ஆண் : கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக…
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகணும்…

BGM

ஆண் : உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்…
ஆனந்தக் கண்ணீரே என்றாகணும்…
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ…
அதை பார்க்கின்ற என் உள்ளம் தாயாக…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

BGM


Notes : Poomazhai Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by Pulamaipithan. பூ மழை தூவி பாடல் வரிகள்.


செப்புக்குடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஒத்தயடி பாதையிலே

Cheppukkudam Song Lyrics in Tamil


BGM

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஹேய்… செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

பெண் : நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…
நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…

பெண் : கஷ்டப்பட்டு வெட்கப்பட வேணாம்…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

BGM-

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…
அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…

பெண் : பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…
பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…

பெண் : சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…
சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…

பெண் : உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா… ஆஅ…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…


Notes : Cheppukkudam Song Lyrics in Tamil. This Song from Otthaiyadi Paathaiyile (1980). Song Lyrics penned by Pulamaipithan. செப்புக்குடம் பாடல் வரிகள்.