பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | உன்னால் முடியும் தம்பி |
Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தானா…
ஹோய்… தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தந்தன் னானா…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
ஆண் : வீதிக்கொரு கட்சி உண்டு…
சாதிக்கொரு சங்கம் உண்டு…
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே…
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே…
ஆண் : இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
—BGM—
ஆண் : வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை…
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது…
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ…
வீடின்றி வாசலின்றித் தவிக்குது…
ஆண் : எத்தனை காலம் இப்படிப் போகும்…
என்றொரு கேள்வி நாளை வரும்…
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்…
என்றிங்கு வாழும் வேளை வரும்…
ஆண் : ஆயிரம் கைகள் கூடட்டும்…
ஆனந்த ராகம் பாடட்டும்…
நாளைய காலம் நம்மோடு…
நிச்சயம் உண்டு போராடு…
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
—BGM—
ஆண் : ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது…
தானாகப் பாதை கண்டு நடக்குது…
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது…
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது…
ஆண் : எண்ணிய யாவும் கைகளில் சேரும்…
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே…
காலையில் தோன்றும் சூரியன் போலே…
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே…
ஆண் : சேரியில் தென்றல் வீசாதா…
ஏழையை வந்து தீண்டாதா…
கங்கையும் தெற்கே பாயாதா…
காவிரியோடு சேராதா…
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
ஆண் : இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…
Notes : Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Pulamaipithan. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடல் வரிகள்.