இதழில் கதை எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஉன்னால் முடியும் தம்பி

Ithazhil Kathai Ezhuthum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…

BGM

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…

பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது… ஆஆ… ஆஆ…
மனதில் சுகம் மலரும் மாலையிது…

BGM

ஆண் : இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே…
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே…
இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட…
இனிமையும் பிறக்குது…

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…

BGM

ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு…
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்…

பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது…
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்…

ஆண் : இனிய பருவமுள்ள இளங்குயிலே…
இனிய பருவமுள்ள இளங்குயிலே…
ஏன் இன்னும் தாமதம்…
மன்மதக் காவியம் என்னுடன் எழுத…

பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது…
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது…

ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி…
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி…

பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால்…
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே…

ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ…
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ…

பெண் : மாலை மலா் மாலை இடும்…
வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்…

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…

பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…

BGM

ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்…
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே…

பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்…
அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா…

ஆண் : அழகைச் சுமந்து வரும் அழகரசி…
அழகைச் சுமந்து வரும் அழகரசி…
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ…

பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது…
நங்கை முகமென யாரதைச் சொன்னது…

ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது…
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது…

பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே…
காதல் மயில் துணை என வருகிறது…

ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே…
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது…

பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு…
ஜீவ நதி அருகினில் இருக்குது…

பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது… ஆஆ… ஆஆ…

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…
இதழில் கதை எழுதும் நேரமிது…


Notes : Ithazhil Kathai Ezhuthum Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Muthulingam. இதழில் கதை எழுதும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top