பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | உன்னால் முடியும் தம்பி |
Ithazhil Kathai Ezhuthum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
—BGM—
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது… ஆஆ… ஆஆ…
மனதில் சுகம் மலரும் மாலையிது…
—BGM—
ஆண் : இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே…
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே…
இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட…
இனிமையும் பிறக்குது…
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
—BGM—
ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு…
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்…
பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது…
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்…
ஆண் : இனிய பருவமுள்ள இளங்குயிலே…
இனிய பருவமுள்ள இளங்குயிலே…
ஏன் இன்னும் தாமதம்…
மன்மதக் காவியம் என்னுடன் எழுத…
பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது…
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது…
ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி…
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி…
பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால்…
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே…
ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ…
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ…
பெண் : மாலை மலா் மாலை இடும்…
வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்…
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
—BGM—
ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்…
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே…
பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்…
அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா…
ஆண் : அழகைச் சுமந்து வரும் அழகரசி…
அழகைச் சுமந்து வரும் அழகரசி…
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ…
பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது…
நங்கை முகமென யாரதைச் சொன்னது…
ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது…
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது…
பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே…
காதல் மயில் துணை என வருகிறது…
ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே…
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது…
பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு…
ஜீவ நதி அருகினில் இருக்குது…
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது… ஆஆ… ஆஆ…
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…
இதழில் கதை எழுதும் நேரமிது…
Notes : Ithazhil Kathai Ezhuthum Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Muthulingam. இதழில் கதை எழுதும் பாடல் வரிகள்.