பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | நினைவெல்லாம் நித்யா |
Nee Thane Enthan Song Lyrics in Tamil
ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
—BGM—
ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
ஆண் : ஆஹா… நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…
ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
—BGM—
ஆண் : பாதை முழுதும் கோடி மலர்கள்…
பாடி வருமே தேவக் குயில்கள்…
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை…
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை…
ஆண் : வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென…
ஜன்னல் திரையிடும் மேகம்…
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில்…
பிறையும் பௌர்ணமி ஆகும்…
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்…
ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…
—BGM—
ஆண் : ஈர இரவில் நூறு கனவு…
பேதை விழியில் போதை நினைவு…
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்…
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்…
ஆண் : நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்…
ரோஜா மல்லிகை வாசம்…
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்…
தென்றல் கவரிகள் வீசும்…
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்…
ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…
—BGM—
Notes : Nee Thane Enthan Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Nithya (1982). Song Lyrics penned by Vairamuthu. நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல் வரிகள்.