பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | நினைவெல்லாம் நித்யா |
Rojavai Thalattum Thendral Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
உன் வார்த்தை சங்கீதங்கள்…
ஹா… ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…
—BGM—
ஆண் : இலைகளில் காதல் கடிதம்…
வண்டு எழுதும் பூஞ்சோலை…
இதழ்களில் மேனி முழுதும்…
இளமை வரையும் ஓர் கவிதை…
ஆண் : இலைகளில் காதல் கடிதம்…
வண்டு எழுதும் பூஞ்சோலை…
இதழ்களில் மேனி முழுதும்…
இளமை வரையும் ஓர் கவிதை…
பெண் : மௌனமே சம்மதம் என்று…
தீண்டுதே மன்மத வண்டு…
மௌனமே சம்மதம் என்று…
தீண்டுதே மன்மத வண்டு…
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு…
ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பெண் : பொன்மேகம் நம் பந்தல்…
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
—BGM—
பெண் : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது…
உனது கிளையில் பூவாவேன்…
இலையுதிர் காலம் முழுதும்…
மகிழ்ந்து உனக்கு வேராவேன்…
பெண் : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது…
உனது கிளையில் பூவாவேன்…
இலையுதிர் காலம் முழுதும்…
மகிழ்ந்து உனக்கு வேராவேன்…
ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்…
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்…
பூவிலே மெத்தைகள் தைப்பேன்…
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்…
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்… ஹா ஹா…
பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள்…
பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்…
Notes : Rojavai Thalattum Thendral Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Nithya (1982). Song Lyrics penned by Vairamuthu. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பாடல் வரிகள்.