ஆலயமணியின் ஓசையை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாலும் பழமும்

Aalayamanyin Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : இளகும் மாலை பொழுதினிலே…
என் இறைவன் வந்தான் தேரினிலே…
இளகும் மாலை பொழுதினிலே…
என் இறைவன் வந்தான் தேரினிலே…

பெண் : ஏழையின் இல்லம் இதுவென்றான்…
இரு விழியாலே மாலை இட்டான்…
இரு விழியாலே மாலையிட்டான்…

பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : காதல் கோயில் நடுவினிலே…
கருணை தேவன் மடியினிலே…
காதல் கோயில் நடுவினிலே…
கருணை தேவன் மடியினிலே…

பெண் : யாரும் அறியா பொழுதினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…

பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM


Notes : Aalayamanyin Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. ஆலயமணியின் ஓசையை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top