பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் & எஸ். ஜானகி | எம்.எஸ்.விஸ்வநாதன் | இதயக்கனி |
Neenga Nalla Irukonum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்…
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி…
தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி…
பெண் : வண்ணம் பாடி ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட…
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி…
ஆண் : ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி…
எனும் பேரில் நீண்ட வரலாறாய்…
பெண் : வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்…
காடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து…
அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து…
ஆண் : கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்…
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து…
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்…
தனிக்கருணை காவிரிபோல்…
பெண் : செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் பேர் நிறுத்தி…
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்…
ஆண் : பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே…
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி…
ஆண் & பெண் : எங்கள் இதயக்கனி… இதயக்கனி…
பெண் : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
ஆண் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…
ஆண் & பெண் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…
குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
—BGM—
ஆண் : உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்…
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்…
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்…
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்…
ஆண் : மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண…
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்…
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்…
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்…
ஆண் : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக…
—BGM—
பெண் : பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்…
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்…
நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்…
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்…
ஆண் : பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை…
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை…
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை…
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை…
அமைதி என்றும் இல்லை…
குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
—BGM—
ஆண் : காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது…
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது…
ஆண் : பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே…
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே…
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்…
அமைதி நிலவுமே… அமைதி நிலவுமே…
குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
—BGM—
ஆண் : நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்…
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்…
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்…
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்…
விளங்கிட வேண்டும்…
குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
—BGM—
Notes : Neenga Nalla Irukonum Song Lyrics in Tamil. This Song from Idhayakkani (1975). Song Lyrics penned by Pulamaipithan. நீங்க நல்லாயிருக்கோனும் பாடல் வரிகள்.