Tag Archives: பழனி பாரதி

ennai-thalatta-song-lyrics

என்னை தாலாட்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Ennai Thalatta Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

BGM

ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்…
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்…
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்…

ஆண் : இரவும் பகலும் என்னை வாட்டினாள்…
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்…
காதல் தீயை வந்து மூட்டினாள்…

ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத…
நான் தூங்க மடி ஒன்று தாராத…
தாகங்கள் தாபங்கள் தீராத…
தாளங்கள் ராகங்கள் சேராத…
வழியோரம் விழி வைக்கிறேன்…

BGM

ஆண் : எனது இரவு அவள் கூந்தலில்…
எனது பகல்கள் அவள் பாா்வையில்…
காலம் எல்லாம் அவள் காதலில்…

ஆண் : கனவு கலையவில்லை கண்களில்…
இதயம் துடிக்கவில்லை ஆசையில்…
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்…

ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்…
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்…
நாளைக்கு நான் காண வருவாளோ…
பாதைக்கு நீரூற்றி போவாளோ…
வழியோரம் விழி வைக்கிறேன்…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
வருவாளோ…

ஆண் : நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தருவாளோ…

ஆண் : தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
வருவாளோ…

ஆண் : இல்லை ஏமாற்றம் தருவாளோ…
தருவாளோ…


Notes : Ennai Thalatta Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னை தாலாட்ட பாடல் வரிகள்.

இது சங்கீத திருநாளோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரிணிஇளையராஜாகாதலுக்கு மரியாதை

Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil


BGM

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

பெண் : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்…
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்…

குழு (பெண்கள்) : செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்…

பெண் : தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்…
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்…

குழு (பெண்கள்) : அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்…

பெண் : பூவெல்லாம் இவள் போல அழகில்லை…

குழு (பெண்கள்) : பூங்காற்று இவள் போல சுகமில்லை…

பெண் : இது போல சொந்தங்கள் இனி இல்லை…

குழு (பெண்கள்) : எப்போதும் அன்புக்கு அழிவில்லை…
இவள்தானே நம் தேவதை…

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்…
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்…

குழு (பெண்கள்) : கண்ணில் மின்னும் ஒரு காவியம்…

பெண் : மனதில் வரைந்து வைத்த ஓவியம்…
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்…

குழு (பெண்கள்) : என்றும் எங்கும் இவள் ஞாபகம்…

பெண் : இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்…
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்…
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்…
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்…
எப்போதும் தாலாட்டுவேன்…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

குழு (பெண்கள்) : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…


Notes : Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. இது சங்கீத திருநாளோ பாடல் வரிகள்.

மனசு ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Manasu Rendum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : நரம்பில் ஒருநதி பாயுதே…
இது என்ன வேட்கை…
காதல் வலி உடல் காயுதே…
இது என்ன வாழ்க்கை…

குழு (ஆண்கள்) : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

BGM

ஆண் : காதல் சருகான பின்பு…
மோகம் வந்தாலே சாபம்…
கண்ணில் முள் வைத்து மூடி…
தூங்க சொன்னாலே பாவம்…

ஆண் : உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி…
மருந்து போல குடிப்பேன்…
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்…
உன் பாத சுவடுக்குள்…
சுருங்கி விழுந்து மரிப்பேன்…

குழு (ஆண்கள்) : உடல் சீறுதே…
நிறம் மாறுதே…
வலி ஏறுதே…
இது என்ன கலவரமோ…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

BGM

ஆண் : நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா…
அலையின் வேதனை நிலவு அறியுமா…
வேதனைகள் நெஞ்சில் சுகமா…
எங்கும் பரவுதடி…

ஆண் : உடலே உடலே உறைந்து போய்விடு…
மனமே மனமே இறந்து போய்விடு…
பாதையிலே சிறு கல்லாய்…
என்னை கிடக்க விடு…

ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே…
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே…

ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே…
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே…
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே…
அதை மறக்காதே…

ஆண் : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : நரம்பில் ஒரு நதி பாயுதே…
இது என்ன வேட்கை…
காதல் வலி உடல் காயுதே…
இது என்ன வாழ்க்கை…

ஆண் : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…


Notes : Manasu Rendum Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. மனசு ரெண்டும் பாடல் வரிகள்.


இளங்காத்து வீசுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்இளையராஜாபிதாமகன்

Elangaathu Veesudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்…
நெஞ்சை அள்ளும் வண்ணத்துணி போல…
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு…
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு…

ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்…
அன்னமடி இந்த நிலம் போல…
சிலருக்குத்தான் மனசு இருக்கு…
உலகம் அதில் நிலைச்சு இருக்கு…

ஆண் : நேத்து தனிமையில போச்சு…
யாரும் துணை இல்ல…
யாரோ வழித்துணைக்கு வந்தால்…
ஏதும் இணை இல்லை…

பெண் : உலகத்தில் எதுவும்…
தனிச்சு இல்லையே…
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

ஆண் : ஓ… மனசுல என்ன ஆகாயம்…
தினம்தினம் அது புதிர் போடும்…
ரகசியத்தை யாரு அறிஞ்சா…
அதிசயத்தை யாரு புரிஞ்சா…

பெண் : விதை விதைக்கிற கைதானே…
மலர் பறிக்குது தினம்தோறும்…
மலர் தொடுக்க நாரை எடுத்து…
யார் தொடுத்தா மாலையாச்சு…

ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்…
ஆடும் கிளி எல்லாம்…
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்…
தாலாட்டு கேட்டிடாமலே…
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…

ஆண் : வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…

பெண் : புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

BGM


Notes : Elangaathu Veesudhey Song Lyrics in Tamil. This Song from Pithamagan (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. இளங்காத்து வீசுதே பாடல் வரிகள்.


சீராக சம்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிகண்ணன் வருவான்

Seeraga Samba Song Lyrics in Tamil


BGM

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

பெண் : ஏய்… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன்…
மாமா வெந்நீர் வச்சிருக்கேன்…
உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

பெண் : ஏய்… ஆத்துக்குள்ள சேலையில மீன புடிப்போமா…
அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா…

ஆண் : நான் ரொம்ப நாள சைவமடி…
உனக்கு தெரியுமா…
நீ கூப்பிட்டதும் ஓடி வர என்னால் முடியுமா…

பெண் : நான் விரிச்சி வச்ச இலைய…
நீ மூடலாமா மாமா…

ஆண் : என் ருசிய தெரிஞ்சிக்காம…
நீ சமச்சி வக்கலாமா…

பெண் : நான் ஆக்குனது ஆரிடலாமா…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு வாரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

ஆண் : உன் பத்து விரல் நகத்துலையும் விசேஷம் இருக்கா…
கை பட்ட தண்ணி இனிக்குதடி பாயாசம் கணக்கா…

பெண் : நீ உச்சி குளிர பேசுறது சாப்பாட்டு ருசிக்கா…
உன் மனசுக்குள்ள இப்போ வேற உள் நோக்கம் இருக்கா…

ஆண் : நீ இலைய போடும் போது…
அதில் வளையல் விழுந்ததென்ன…

பெண் : அது கைய மீறும் ஆச…
அத சொல்லி என்ன பண்ண…

ஆண் : ஒரு பசி முடிஞ்சா பசி பொறக்கும்…
சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (ஆண்கள்) : சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…

ஆண் : சிரிச்சி மயக்கும்சிவந்த உதட்டில் தேனுக்கு காத்திருக்கேன்…
மானே தேனுக்கு காத்திருக்கேன்…

பெண் : ஏ… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெண்ணி வச்சிருக்கேன்…
மாமா வெண்ணி வச்சிருக்கேன்…

ஆண் : ஹோ… உனக்குள் குதிச்சி உடம்ப தனைக்க உசுரு காத்திருக்கேன்…
கண்ணே ஊசிறு காத்திருக்கேன்…

பெண் : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

ஆண் : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (பெண்கள்) : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

குழு (ஆண்கள்) : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

BGM


Notes : Seeraga Samba Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சீராக சம்பா பாடல் வரிகள்.


முன் பனியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மால்குடி சுபாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Mun Paniya Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…
அறியாத சுகங்கள் கண்டேன்…
மாற்றம் தந்தவள் நீ தானே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

BGM

ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

ஆண் : இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…

பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே…
சங்கதி என்ன சொல்லடி வெளியே…
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…
ஏலோ ஏலோ ஏலே ஏலோ…

BGM

ஆண் : என் பாதைகள் என் பாதைகள்…
உனது வழிபார்த்து வந்து முடியுதடி…
என் இரவுகள் என் இரவுகள்…
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…

ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…

BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே…

BGM


Notes : Mun Paniya Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Palani Barathi. முன் பனியா பாடல் வரிகள்.


வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்சிற்பிகண்ணன் வருவான்

Vennilavae Vennilavae Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ…
ஏன் வெட்கம் கொள்கிறாய்…
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

BGM

ஆண் : அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை…
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா…
அந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்…
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா…

ஆண் : அடி உன்னை காணத்தான்…
நான் கண்கள் வாங்கினேன்…
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

BGM

ஆண் : கண்ணோடு கண்ணும்…
ஒரு நெஞ்சோடு நெஞ்சும்…
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை…

ஆண் : தொலை தூரம் நீயும்…
தொட முடியாமல் நானும்…
என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை…

ஆண் : என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா…
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ…
ஏன் வெட்கம் கொள்கிறாய்…
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

BGM


Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvaan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்.


காதல் மட்டும் புரிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்…
இன்று என்னை காணவில்லை…
வெயில் இல்லை மழை இல்லை…
பார்த்தேனே வானவில்லை…

ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்…
கொல்லாமல் கொல்கின்ற அழகை…
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து…
வரைந்தேன் அவளை…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்…
நீ வந்து குடை விரித்தாய்…
எந்தன் பெயரே மறந்திருந்தேன்…
நீ இன்று குரல் கொடுத்தாய்…

ஆண் : என் கண்ணாடி மனதில்…
இப்போது என் முகம் பார்த்தேன்…
நீ வந்த பொழுதில்…
எந்தன் நெஞ்சம் பூத்தேன்…

ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை…
நட்பில் கவலை புரிவதில்லை…
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்…
இரவும் பகலும் பார்ப்பதில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…


Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.


ஒரு பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & கே.ஜே யேசுதாஸ் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oru Pattampoochi Song Lyrics in Tamil


BGM

ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

BGM

ஆண் : ஏனோ மனது…
உன்னை கண்ட பொழுது…
காற்றில் ஒரு மேகமென ஆச்சு…

பெண் : ஏனோ எனக்கு…
காதல் வந்த பிறகு…
கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…

ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே…
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…

பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே…
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…

ஆண் : உன் சேலை நூலாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…

BGM

ஆண் : பூவான என் நெஞ்சம் போராட…
தூங்காத கண்ணோடு நீராட…

பெண் : உறவான நிலவொன்று சதிராட…
கடிதங்கள் வாராமல் உயிா் வாட…
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…

குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா…
ஒரு பூ சிந்த பிடிவாதமா…
மௌனங்கள் மொழியாகுமா…

BGM

பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு…
எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…

ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்…
என் மனதை சுட்டு விட்டு போகும்…

பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே…
பனித்துளி என்னை சுடுமே சுடுமே…

ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே…
அள்ளித்தர கங்கை வருமே வருமே…

பெண் : மேகங்கள் தேனூற்றுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…


Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.


ஹோ பேபி பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணி & விஜய்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oh Baby Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

பெண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

ஆண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

பெண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

ஆண் : ஹே… காதல் நெஞ்சை…

பெண் : ஹே… காதல் நெஞ்சை…

ஆண் : யாரோடு சொல்வேன்…

பெண் : யாரோடு சொல்வேன்…

ஆண் : வந்து போன தேவதை…

பெண் : வந்து போன தேவதை…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

பெண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

BGM

பெண் : ஹே… ஹே ஹே… ஹே… ஹே ஹே…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…

BGM

ஆண் : பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது…
சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது…

ஆண் : நேற்று இந்த மாற்றம்…
எந்தன் நெஞ்சில் இல்லை…
காற்று எந்தன் காதில்…
கவிதை சொன்னதில்லை…

ஆண் : ஹோ… இருதயம் இருபக்கம் துடிக்குதே…
அலைவந்து அலைவந்து அடிக்குதே…
எனக்குள்ளேதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ பேபி பேபி…
என் காதல் ஜோதி…

BGM

ஆண் : ஜீவன் மலர்ந்தது…
புது சுகம் எங்கும் வளர்ந்தது…
தேவன் எழுதிடும்…
தீர்ப்புகள் இதுதான் புரிந்தது…

ஆண் : ஊரைக் கேட்கவில்லை…
பேரும் தேவையில்லை…
காலம் தேசம் எல்லாம்…
காதல் வானின் எல்லை…

ஆண் : ஓ… தேவதை தரிசனம் கிடைத்ததே…
ஆலய மணி எங்கும் ஒலித்ததே…
என்னைத் தந்தேன்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண்: ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி யே…


Notes : Oh Baby Baby Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ பேபி பேபி பாடல் வரிகள்.