பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | பவதாரிணி | இளையராஜா | காதலுக்கு மரியாதை |
Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…
பெண் : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…
குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…
—BGM—
பெண் : கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்…
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்…
குழு (பெண்கள்) : செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்…
பெண் : தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்…
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்…
குழு (பெண்கள்) : அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்…
பெண் : பூவெல்லாம் இவள் போல அழகில்லை…
குழு (பெண்கள்) : பூங்காற்று இவள் போல சுகமில்லை…
பெண் : இது போல சொந்தங்கள் இனி இல்லை…
குழு (பெண்கள்) : எப்போதும் அன்புக்கு அழிவில்லை…
இவள்தானே நம் தேவதை…
பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…
—BGM—
பெண் : நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்…
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்…
குழு (பெண்கள்) : கண்ணில் மின்னும் ஒரு காவியம்…
பெண் : மனதில் வரைந்து வைத்த ஓவியம்…
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்…
குழு (பெண்கள்) : என்றும் எங்கும் இவள் ஞாபகம்…
பெண் : இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்…
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்…
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்…
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்…
எப்போதும் தாலாட்டுவேன்…
குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…
குழு (பெண்கள்) : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…
குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…
Notes : Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. இது சங்கீத திருநாளோ பாடல் வரிகள்.