பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | கே.எஸ். சித்ரா | தேவா | என் ஆசை மச்சான் |
Karuppu Nila Song Lyrics in Tamil
பெண் : கருப்பு நிலா… கருப்பு நிலா…
பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
பெண் : சின்ன மானே மாங்குயிலே…
உன் மனசுல என்ன குறை…
பெத்த ஆத்தா போல் இருப்பேன்…
இந்த பூமியில் வாழும் வர…
பெண் : எட்டு திசை யாவும்…
கட்டி அரசாள…
வந்த ராசா நீதானே…
பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
—BGM—
பெண் : பத்து மாசம் மடியேந்தி…
பெத்தெடுத்த மகராசி…
பச்ச புள்ள உன்ன விட்டு…
போனதென்னி அழுதாயா…
பெண் : மாமன் வந்து என்னை காக்க…
நானும் வந்து உன்னை தாக்க…
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்…
நாளை வரும் நமக்காக…
பெண் : காலம் உள்ள காலம்…
வாழும் இந்த பாசம்…
பூ விழி இமை மூடியே…
சின்ன பூவே கண்ணுறங்கு…
பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
—BGM—
பெண் : வண்ண வண்ண முகம்காட்டி…
வானவில்லின் நிறம்காட்டி…
சின்ன சின்ன மழலை பேசி…
சித்திரம் போல் மகனே வா…
பெண் : செம்பருத்தி மலர் போலே…
சொக்க வெள்ளி மணி போலே…
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன…
கண்மணியே மடிமேல் வா…
பெண் : பாட்டு தமிழ் பாட்டு…
பாட அத கேட்டு…
ஆடிடும் விளையாடிடும்…
தங்க தேரே நீதானே…
பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
பெண் : ஏ… மானே மாங்குயிலே…
உன் மனசுல என்ன குறை…
பெத்த ஆத்தா போல் இருப்பேன்…
இந்த பூமியில் வாழும் வர…
பெண் : எட்டு திசை யாவும்…
கட்டி அரசாள…
வந்த ராசா நீதானே…
பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
Notes : Karuppu Nila Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. கருப்பு நிலா பாடல் வரிகள்.