பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன் | யுவன் ஷங்கர் ராஜா | காதல் கொண்டேன் |
Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…
பெண் : ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்…
சிறு பூவாக நீ மலர்வாயே…
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்…
வலி போகும் என் அன்பே… அன்பே…
பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…
—BGM—
பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட…
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்…
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்…
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்…
பெண் : முகமூடி அணிகின்ற உலகிது…
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது…
நதி நீரிலே அட விழுந்தாலுமே…
அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா…
—BGM—
பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…
—BGM—
ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்…
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்…
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்…
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்…
ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது…
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது…
காதல் இல்லை இது காமம் இல்லை…
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை…
—BGM—
ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்…
சிறு பூவாக நான் மலர்வேனே…
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்…
வலி போகும் என் அன்பே… அன்பே…
ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…
—BGM—
Notes : Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சோடு கலந்திடு பாடல் வரிகள்.