Tag Archives: இளையராஜா

அடிடா மேளத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Adida Melatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் என்னடா நட தாளம் தப்புது…
ஏய் தாளத்துல நடறான்னா…

குழு : யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…
யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : கட்டு கட்டா பணத்த…
அட சேத்து வச்சவன்…
கொட்ட கொட்ட முழிப்பான்…

குழு : கன்னக் கோலு மறைக்கும்…
அட மனுஷந்தாண்டா…
தூக்கம் கெட்டுத் தவிப்பான்…

ஆண் : கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்…
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்…

ஆண் : திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்…
தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்…

குழு : நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான்…
ஆனாலும் கண் முழிக்க வச்சான் வச்சான்…
ஆசையில பம்பரமா ஆட்டி வச்சான்…
எல்லாமே எந்திரமா மாத்தி வச்சான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : சங்கீதத்தின் சங்கதி சரிகமப…
தம்பிக்குச் சொல்லிக் கொடு…
தம்பி சுருதி பிடிச்சா அதிகமப்பா…
தம்மாரே தம்மு கொடு…

ஆண் : லால்லா லால்லா லாலா…
லால்லா லால்லா லாலா…

ஆண் : கொறட்ட கொறட்ட ஜதி போடுது…
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது…

ஆண் : உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல…
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல…

குழு : சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு…
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு…
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு…
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : ஹேய் சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…


Notes : Adida Melatha Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. அடிடா மேளத்த பாடல் வரிகள்.


வெளக்கு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். ஜானகி & இளையராஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Velakku Vetcha Song Lyrics in Tamil


பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா…

BGM

ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம்…
உதட்டோரம் ஈரம் ஏறும்…

பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும்…
பசியேக்கம் தானாத் தீரும்…

ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை…
போதை ஏறுது…

பெண் : நூறு முறை சேர்ந்த போதும்…
ஆசை கூடுது…

ஆண் : பொழுதாச்சு விளையாட…
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்…

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

BGM

ஆண் : நித்தம் புது ராகம் கண்டு…
நான் பாடும் பாடல் நூறு…

பெண் : நீ படிச்ச வேகம் கண்டு…
நிலை மாறும் தேகம் பாரு…

ஆண் : நீல மயில் தோகை சூடி…
ஜாகை தேடுது…

பெண் : ஜாதி மலர் தேனில் ஊற…
ஜாடை கூறுது…

ஆண் : பொழுதாச்சு விளையாட…
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்…

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா…

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…


Notes : Velakku Vetcha Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Na. Kamarasan. வெளக்கு வச்ச பாடல் வரிகள்.


கத்துதடி ராக்கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாதெய்வவாக்கு

Katthuthadi Raakkozhi Song Lyrics in Tamil


BGM

குழு : தந்தன தன்னா தானா…
தந்தன தன்னா தானா தானா…
தந்தனா தந்தனா தான தந்தனா…
தான தான தான தான தந்தனா…

BGM

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

ஆண் : ஹேஹேஹே ருக்குமணி…
குழு : ஆச்சி ஆச்சி…
ஆண் : பத்து மணி…
குழு : ஆச்சு ஆச்சு…

ஆண் : ஊருக்குள்ள…
குழு : காச்சு மூச்சு…
ஆண் : சத்தம் எல்லாம்…
குழு : போச்சு போச்சு…
ஆண் : எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி… பாடு…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM

ஆண் : இந்த வீட்டுக்கு வந்த ஜோலி என்ன…
சும்மா வந்த வீட்டுக்கு கொடக்கூலி என்ன…

ஆண் : வீடு வாசல் பிள்ள குட்டி ஏன்டா டோய்…
இந்த வம்பு தும்பு எங்களுக்கு வேண்டா டோய்…

குழு : தென்னடிச்சு ஆச்சிக் கட போண்டா டோய்…
அது ஓசியில ரொம்ப ருசிதான்டா டோய்…

ஆண் : எந்தப் பக்கம் வேணும்னாலும்…
குழு : போவோம்…
ஆண் : நாம இப்படியும் எப்படியும்…
குழு : வாழ்வோம்…

குழு : நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி…
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM

ஆண் : கோயில் காளைக்கு ஒரு பட்டி என்ன…
எங்க அப்பன் சொத்துக்கு ஒரு வட்டி என்ன…

ஆண் : வந்த வர லாபத்துல வச்சுக்கோடா…
இல்ல வம்பிழுத்து மண்டையத்தான் பிச்சிக்கோடா…

குழு : வம்பு தும்பு வேணாமுன்னா ஒத்துப் போடா…
சட்ட பிஞ்சு போனா ஊசி வச்சு தெச்சுக்கோடா…

ஆண் : நம்ம இங்கு தட்டிக் கேக்க…
குழு : யாரு…
ஆண் : நாம சொன்ன படி ஆட வேணும்…
குழு : ஊரு…

குழு : நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி…
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

ஆண் : ஹே ருக்குமணி…
குழு : ஆச்சி ஆச்சி…
ஆண் : பத்து மணி…
குழு : ஆச்சு ஆச்சு…

ஆண் : ஊருக்குள்ள…
குழு : காச்சு மூச்சு…
ஆண் : சத்தம் எல்லாம்…
குழு : போச்சு போச்சு…
ஆண் : எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி… பாடு…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM


Notes : Katthuthadi Raakkozhi Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Gangai Amaran. கத்துதடி ராக்கோழி பாடல் வரிகள்.


பிச்சை பாத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமது பாலகிருஷ்ணன்இளையராஜாநான் கடவுள்

Pitchai Paathiram Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

{ ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு…
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே… } * (2)

BGM

ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா…

BGM

ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா…

ஆண் : இம்மையை நான் அறியாததா…
இம்மையை நான் அறியாததா…
சிறு பொம்மையின் நிலையினில்…
உண்மையை உணர்ந்திட…

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

BGM

ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…

BGM

ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்…
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்…

ஆண் : ஒரு முறையா இரு முறையா…
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்…
புது வினையா பழ வினையா…
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்…

ஆண் : பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற…
வாழ்கையும் துரத்துதே…
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம்…
இன்று பிதற்றுதே…

ஆண் : அருள் விழியால் நோக்குவாய்…
மலர் பத்தால் தாங்குவாய்…
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற…

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு…
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…


Notes : Pitchai Paathiram Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Ilaiyaraaja. பிச்சை பாத்திரம் பாடல் வரிகள்.


இங்கு இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil


பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

BGM

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : மான் தரும் பொன் தூறலில்…
மாமலை பூஞ்சாரலில்…
சுகம் என நான் நனைகிறேன்…

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்…
பூத்திடும் கனாவினில்…
கவிதைகள் நான் புனைகிறேன்…

பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும்…
அன்பின் வேதம் கூறாதா…
அன்பின் வேதம் கேட்டதனாலே…
துன்பம் யாவும் தீராதா…

பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும்…
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : தேசமே என் பூவனம்…
பாசமே என் கீர்த்தனம்…
உலகமே என் உறவினம்…

பெண் : ஓ… வேர்வையும் கண்ணீரையும்…
பார்க்கையில் எவ்வேளையும்…
உருகுமே என் இளமனம்…

பெண் : வேணிற் காலம் வந்தது என்று…
வானம் பாடி பாடாதோ…
வாசல் தேடி வெயிலும் வந்து…
வண்ணக் கோலம் போடாதோ…

பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும்…
பல வருஷம் பேச வேண்டும்…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…


Notes : Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. இங்கு இருக்கும் பாடல் வரிகள்.


ஓல குடிசையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆனந்த்

Ola Kudisaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

BGM

ஆண் : பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது…
நல்லதொரு நாள்தானே…
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது…
காலம் இனி தேன்தானே…

ஆண் : மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…

ஆண் : பொண்டாட்டி ஆனாதான்…
கொண்டாட்டம் கும்மாளம்…
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

குழு : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடு…

ஆண் : பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா…
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா…

ஆண் : நடைய கட்டணும் பத்தாது…
குழு : நடைய கட்டணும் பத்தாது…
ஆண் : மேளத்த கொட்டணும் பத்தாது…
குழு : மேளத்த கொட்டணும் பத்தாது…

ஆண் : தாலிக் கட்டினா…
குழு : பத்தாது…
ஆண் : தண்ணி அடிச்சா…
குழு : பத்தாது…

ஆண் : பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க…
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா…

ஆண் : பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு…
அப்புறமா வெட்டுவ… ஹாஆ…

BGM

ஆண் : கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க…
கட்டிலுக்கு மேலாக… ஆங்…
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க…
கண்ணு வெய்க்க போறாங்க…

ஆண் : பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…
பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…

ஆண் : முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது…
அப்பாவா ஆகபோற… ஹே ஹே யப்பா யப்பா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல குடிசையில…
குழு : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல…
குழு : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…


Notes : Ola Kudisaiyile Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஓல குடிசையில பாடல் வரிகள்.


அந்தி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Andhi Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்…

BGM

பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து…

BGM

ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது…
சந்தனத்து உடல் அணைத்து…

பெண் : இதழில் ஒரு ஓலை…
எழுதும் இந்த வேளை…

ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை… ஹான்…

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்…
போராடுது காதலின் வேகம்…
என்றென்றும் ஆனந்த யோகம்…

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM

ஆண் : இன்பத்துக்கு முகவுரை…
என்றுமில்லை முடிவுரை…
நீயிருக்க ஏது குறை…

BGM

பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை…
பாட வந்தேன் நூறு முறை…

ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…

பெண் : நினைத்தால் இங்கு யாவும்…
இனிமை என்று கூறும்…

ஆண் : ஆஹாஹ்… இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

ஆண் & பெண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM


Notes : Andhi Varum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. அந்தி வரும் பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ராஇளையராஜாகண்ணுக்குள் நிலவு

Chinnanjchiru Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்…
கண்ணில் நிலவு குடியிருக்கும்…
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்…
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்…

பெண் : நீ சிரித்தால்…
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்…
நீ பார்த்தால் மணி தீபங்கள்…
என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : என்னை அன்னை என்றான்…
வரம் அள்ளி தந்தான்…
மகனாய் பிறந்து தவம் முடித்தான்…

பெண் : விழி தேடி வந்து மடி ஆடி நின்று…
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்…

பெண் : உன் நிழலும் என் மகன் போல…
பாலூட்ட கேட்கும்…
தாலாட்டும் இந்த சொந்தங்கள்…
எப்போதும் வேண்டும் ஆராரோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…


Notes : Chinnanjchiru Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


கட்டிலறை நாடகத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Kattilarai Nadagathil Song Lyrics in Tamil


BGM

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : போதும் இது போதும் என்று பூவை…
நான் சொல்லும் வரை
வேண்டும் அது வேண்டும் என்று…
கேட்பேன் நான் மன்னவரை…

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…

BGM

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…
போகின்ற காலம் இது
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…
ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : மேலே இன்னும் மேலே…
அந்த வானில் நான் செல்லுகிறேன்…
மின்னல் கொடி மின்னல்…
அதுபோலே நான் துள்ளுகிறேன்…

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…

BGM

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…
ஏதேதோ கேட்கின்றது…
ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ மை லவ்…
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM


Notes : Kattilarai Nadagathil Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கட்டிலறை நாடகத்தில் பாடல் வரிகள்.


வா வா வாத்தியாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

ஆண் : அடடாடா வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

BGM

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல…
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

BGM

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல…
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

ஆண் : ஏய்… வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
பெண் : ஹோய்…
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…
பெண் : ஹான்…

பெண் : வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…

ஆண் : ஏய்… தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்…
தூக்கத்துல கட்டிக்குவோம்…
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது…

பெண் : வா வா… வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு… ஹோய்…

BGM

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை…
அங்க நின்னா ஜாலி இல்லை…
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்…

BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல…
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்…

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே…
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே…

ஆண் : ஹா… மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே…
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே…

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை…
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு…

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

பெண் : வா வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

குழு : தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…
தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…


Notes : Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. வா வா வாத்தியாரே பாடல் வரிகள்.