Tag Archives: இளையராஜா

கட்டிலறை நாடகத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Kattilarai Nadagathil Song Lyrics in Tamil


BGM

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : போதும் இது போதும் என்று பூவை…
நான் சொல்லும் வரை
வேண்டும் அது வேண்டும் என்று…
கேட்பேன் நான் மன்னவரை…

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…

BGM

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…
போகின்ற காலம் இது
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…
ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : மேலே இன்னும் மேலே…
அந்த வானில் நான் செல்லுகிறேன்…
மின்னல் கொடி மின்னல்…
அதுபோலே நான் துள்ளுகிறேன்…

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…

BGM

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…
ஏதேதோ கேட்கின்றது…
ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ மை லவ்…
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM


Notes : Kattilarai Nadagathil Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கட்டிலறை நாடகத்தில் பாடல் வரிகள்.


வா வா வாத்தியாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

ஆண் : அடடாடா வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

BGM

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல…
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

BGM

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல…
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

ஆண் : ஏய்… வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
பெண் : ஹோய்…
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…
பெண் : ஹான்…

பெண் : வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…

ஆண் : ஏய்… தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்…
தூக்கத்துல கட்டிக்குவோம்…
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது…

பெண் : வா வா… வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு… ஹோய்…

BGM

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை…
அங்க நின்னா ஜாலி இல்லை…
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்…

BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல…
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்…

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே…
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே…

ஆண் : ஹா… மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே…
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே…

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை…
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு…

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

பெண் : வா வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

குழு : தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…
தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…


Notes : Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. வா வா வாத்தியாரே பாடல் வரிகள்.


மயிலாடும் தோப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…

BGM

ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு…
வைக்கின்ற முத்தம் எல்லாம்…
கல்வெட்டு போலே நிற்கும்…
கண்ணே நம் காலம் எல்லாம்…

பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம்…
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்…

ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம்…
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்…

பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்…
ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்…
பெண் : பொன் மாலைப் பொழுதினிலே…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ…

BGM

பெண் : உள்ளத்தின் உண்டியலில்…
உன் ஆசை எண்ணங்களை…
சேமித்து வைத்த கன்னி…
சிந்தித்தாள் உன்னை எண்ணி…

ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க…
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க…

பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்…
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்…

ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட…
பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட…
ஆண் : சங்கீத மயக்கத்திலே… ஏ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராஜனே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…


Notes : Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Vaali. மயிலாடும் தோப்பில் பாடல் வரிகள்.


கண்ண தொறக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாமுந்தானை முடிச்சு

Kanna Thorakanum Song Lyrics in Tamil


பெண் : ஆரீராரிரோ ஆரீராரிரோ…
ஆரீரோ ஆராரோ ஆரிராரோ…

BGM

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…

BGM

பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

பெண் : தயக்கம் ஆகாது தாமதம் கூடாது…
தேகம்தான் வாடுது வாங்களேன்…

பெண் : அருள் தரும் திருக்கடலே…
அரிக்குது என் உடலே…
மோகம் தீர மோட்சம் தாராயோ…

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம் ஏய்…

ஆண் : கலையாது எந்தவம் அடியே…
இறங்காது பாய்மர கொடியே…

ஆண் : ஹேய்… வேணாண்டி ஆம்பளை பாவம்…
வாங்காத என்னோட சாபம்…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…

BGM

பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

ஆண் : ஹேய் பக்தி மாறாது பஜனையும் நிக்காது…
என் தேகம் தீண்டாதே மயிலே…

பெண் : புடிச்சது புடிச்சதுதான்… ஏய் ஏய் ஏய் ஏய்…
புரிஞ்சிக்க என் குணம்தான்…

ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ…
பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…

ஆண் : அடிவேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஹா…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

பெண் : இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : எம்மா…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி …
ஆண் : ம்ம்ஹும்…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…


Notes : Kanna Thorakanum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. கண்ண தொறக்கணும் பாடல் வரிகள்.


நம்ம முதலாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Namma Mudhalaali Song Lyrics in Tamil


குழு : நல்லவருக்கு நல்லவரு…
நாணயந்தான் உள்ளவரு…
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு…

பெண் : நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்…
குழு : எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்…

BGM

ஆண் : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது…
அந்த கதைதான் அய்யாவின் மனது…

ஆண் : எந்த மனம் நல்ல மனம்…
பின்னாலே தெரியும்…
கள்ளு எது பாலு எது…
தன்னாலே புரியும்…

ஆண் : ஊரார ஏமாத்த…
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்…
சந்தேகம் வாராம்ம…
பசு தோளால மூடிக்கிச்சாம்…

ஆண் : தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான்…
சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து…
ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து…

ஆண் : நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி…
நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி…

ஆண் : வேதாந்தம் பேசாதே…
சும்மா வாதங்கள் பன்னாதே…

ஆண் : ஏய்… நீ என்ன சொன்னாலும்…
என் எண்ணங்கள் மாறாதே…

ஆண் : ஆஹா கண்டுபுடிக்க…
உனக்கு புத்தி இல்லையே…
அதுக்கு என்னிடத்திலே எதுக்கு…
நீ முறைச்சி குதிக்கணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…


Notes : Namma Mudhalaali Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம முதலாளி பாடல் வரிகள்.


ஜோடி நல்ல ஜோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

குழு : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

ஆண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

குழு : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

பெண் : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

பெண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்…
கண்ணால் சொல்லு சேதிதான்…

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து…
பூஜையை போடும் நேரம்தான்…

ஆண் : மெத்தையில சிந்தாம…
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்…

BGM

பெண் : அத்தனையும் சொல்லாம…
அத அடக்கி வெப்பா வித்தாரம்…

BGM

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
குழு : அம்சமுள்ள பொஞ்சாதி…

பெண் : தேடி இப்போ வந்தாச்சு…
குழு : சின்னச் சிட்டு சிங்காரி…

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே…
மல்லாடுற கைகாரி…

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

ஆண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்…
அடக்கி வச்சாம் பாவம்தான்…

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்…
அடிச்சதம்மா யோகம்தான்…

பெண் : ஒத்தையில நின்னாரு…
இப்ப ரெட்டையாக வந்தாரு…

BGM

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு…
அவர் ஜாதகம் போல வேறாரு…

பெண் : ஏழு பட்டி சீமையிலும்…
குழு : ஏழை சனம் பாராட்டும்…

ஆண் : வாழை என உங்க வம்முசம்…
குழு : வாழ்க என சீராட்டும்…

பெண் : அன்பானது பண்பானது…
ஒண்ணானது கொண்டாட்டம்…

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…


Notes : Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஜோடி நல்ல ஜோடி பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil


பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…

BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்…
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி…
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி…
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்…

பெண் : இந்த நிலை மாறுமோ…
அன்பு வழி சேருமோ…
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ…
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்…

பெண் : சின்னஞ்சிறு…
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
வேதனை பாரடா வேடிக்கை தானடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை…
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை…
என்னை நீ தேடி இணைந்தது பாவம்…
எல்லாம் நீயே எழுதிய கோலம்…

ஆண் : இந்த நிலை காணும் பொழுது…
நானும் அழுது வாழ்கிறேன்…
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ… ஓஓ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…
பெண் : சித்திரப்பூவிழியே…


Notes : Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Muthulingam. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


மலரே என்னென்ன கோலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆட்டோராஜா

Malare Enna Kolam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா… மலரே நலமா…

BGM

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்…
இங்கு பூவேது காயேது…

BGM

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்…
எனக்கேன் உன் மீது மோகம்…
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…

BGM

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்…
என்னோடு நான் கண்டேன்…

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு…
உலகில் இப்போதும் உண்டு…
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…

ஆண் : சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…
வழி ஏது முடியாது…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…


Notes : Malare Enna Kolam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. மலரே என்னென்ன கோலம் பாடல் வரிகள்.


இந்த அம்மனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாதெய்வவாக்கு

Indha Ammanukku Song Lyrics in Tamil


ஆண் : ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா…
குழு : ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா…
ஆண் : ஐலேசா பபாபபா ஸரிகமபா…
குழு : ஐலேசா பபாபபா ஸரிகமபா…

ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே…
ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே…
ஆண் : ஐலேசா…
குழு : ஐலே ஐலே ஸாஸா…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

ஆண் : எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது…
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது…
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி…
அலைகள் எழுந்து விளையாடுதே…
ததரினனோம்… ஓஓஓஓஒ…
குழு : ஹே ஓ ஹே ஓஒ…

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி…
அலைகள் எழுந்து விளையாடுதே…
நாப்பத்தெட்டு நாள் கணக்கில் விரதம் இருந்து…
ஜனங்கள் யோக நிலை தேடுதே…

ஆண் : கற்பூரம் காட்டுது…
கன்னத்தில் போடுது…
குழு : அடடா…

ஆண் : காவிய கட்டிட்டு…
சாமியா ஆகுதடா…

ஆண் : பக்தினா பக்திதான் கொட்டுது கொட்டுது…
குழு : அடடா…
ஆண் : புடிச்சுக்கோ புடிச்சுக்கோ…
பக்கெட்ட கொண்டாங்கடா…

ஆண் : நம்ம ஊருக்கு ஏத்த அம்மன்தான்…
அப்பப்பா ரொம்பப்பா தேவப்பா…

ஆண் : இந்த அம்மனுக்கு…
குழு : எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு…
ஆண் : தெய்வ வாக்கு இப்போ…
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM

ஆண் : அட ஆத்து மேடும் கொளத்து மேடும்…
வண்டிய இழுத்து இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே…
ஆத்தாளோட சக்தியில அரைக்காலும் முக்காலு…
நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா…

ஆண் : எப்பப்போ எங்கெங்கே என்னென்ன நடக்கும்…
குழு : அடடா…
ஆண் : அக்காலம் இக்காலம் முக்காலம் சொல்லும்மடா…

ஆண் : தப்புன்னா தண்டிக்கும் திருந்திக்கோ மன்னிக்கும்…
குழு : அடடா…
ஆண் : கப்புன்னு வேண்டிட்டு வரங்கள வாங்கிக்கடா…

ஆண் : அம்மன் தேருக்கு…
குழு : வடம் புடிச்சோம்…
ஆண் : அப்பப்பா வந்தாச்சு எல்லப்பா…

ஆண் : இந்த அம்மனுக்கு…
குழு : எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு…
ஆண் : தெய்வ வாக்கு இப்போ…
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு…

ஆண் : எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது…
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது…
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM


Notes : Indha Ammanukku Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. இந்த அம்மனுக்கு பாடல் வரிகள்.


ராஜா இல்லா ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

BGM

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து…
நான் வரைந்த முதல் எழுத்து…
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே…

பெண் : எத்தனையோ கோயில் கொண்டு…
இங்கிருக்கும் தெய்வம் உண்டு…
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே…

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு…
என்றிருந்த தென்றலுக்கு…
விட்டு விலகும் பொழுதும் வந்ததே…

பெண் : ஆசையாய் பூவிடு வாய் வராத…
ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

BGM

ஆண் : இங்கிருந்த காலங்களும்…
அன்பு கொண்ட கோலங்களும்…
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே…

பெண் : என்னுடைய எண்ணங்களும்…
கற்பனையின் வண்ணங்களும்…
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே…

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்…
நங்கை விழி கண்டிருக்கும்…
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா…

பெண் : வானம் போல் உன் மனம்…
பால் நிலாவைப் போல அதில்…
நானும் வாழப் பார்க்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

ஆண் : ஒரு தேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே… ஓஓஒ…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…


Notes : Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ராஜா இல்லா ராணி பாடல் வரிகள்.